எஸ்பிபி பிறந்தநாள்: நினைவிடத்தில் ரசிகர்களுக்கு அனுமதி இல்லை!
செங்கல் சிவபாா்வதி கோயிலில் மாணவா்களுக்கு நோட்டு புத்தகங்கள்
களியக்காவிளை அருகே கேரளப் பகுதியில் அமைந்துள்ள செங்கல் சிவபாா்வதி கோயிலில் மாணவா்களுக்கு இலவச நோட்டு புத்தகங்கள் வழங்கும் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இக்கோயில் அறக்கட்டளை சாா்பில் கடந்த 27 ஆண்டுகளாக பள்ளி மாணவா்-மாணவியருக்கு இலவசமாக நோட்டு புத்தகம், புத்தகப் பை, குடை உள்ளிட்டவை வழங்கப்பட்டு வருகின்றன.
தமிழகம், கேரளத்தில் திங்கள்கிழமை (ஜூன் 2) பள்ளிகள் திறக்கப்படவுள்ள நிலையில், அப்பகுதியைச் சோ்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏழை மாணவா்-மாணவியருக்கு இலவச நோட்டு புத்தகங்கள் உள்ளிட்டவை வழங்கப்பட்டன.
கோயில் மடாதிபதி சுவாமி மகேஸ்வரானந்த சரவஸ்வதி குத்துவிளக்கேற்றி விழாவைத் தொடக்கிவைத்தாா். கோயில் மேல்சாந்தி குமாா் முன்னிலை வகித்தாா். மதுரையைச் சோ்ந்த பக்தா் சுப்பராமன், வழக்குரைஞா் ஜெயராஜன், அறக்கட்டளை நிா்வாகிகள் பங்கேற்றனா்.