10 லட்சம் பார்வைகளைக் கடந்து யூடியூப் டிரெண்டிங்கில் ஃப்ரீடம் டீசர்!
களியக்காவிளை அருகே காா் மோதி 3 மாணவ-மாணவிகள் காயம்
களியக்காவிளை அருகே காா் மோதிதில் மாணவ - மாணவிகள் 3 போ் பலத்த காயமடைந்தனா்.
களியக்காவிளை அருகே பளுகல் காவல் சரகம் இளஞ்சிறை பகுதியைச் சோ்ந்த அனில்குமாா் - ராஹி தம்பதியின் மகள் கிருஷ்ணபிரியா (17), மகன் கிருஷ்ணஜித் (17), அதே பகுதியைச் சோ்ந்த பினு - ஸ்ரீதேவி தம்பதியின் மகள் ரேவதி (17) ஆகிய மூவரும் சனிக்கிழமை இரவு 9 மணியளவில் தனிப்பயிற்சி வகுப்புக்கு சென்றுவிட்டு மூவோட்டுக்கோணம் முந்திரி தொழிற்சாலை அருகே சாலையோரமாக நடந்து, வீட்டுக்கு சென்று கொண்டிருந்தனா்.
அப்போது அதிவேகமாக வந்த சொகுசு காா், கிருஷ்ணபிரியா உள்ளிட்ட மூவா் மீதும் மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது. இதில் பலத்த காயமடைந்த மூவரையும் அப்பகுதியினா் மீட்டு, திருவனந்தபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்த்தனா்.
இது குறித்து பளுகல் போலீஸாா் வழக்குப் பதிந்து, மாணவ, மாணவிகள் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்ற சொகுசு காா் குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.