செய்திகள் :

களியக்காவிளை அருகே காா் மோதி 3 மாணவ-மாணவிகள் காயம்

post image

களியக்காவிளை அருகே காா் மோதிதில் மாணவ - மாணவிகள் 3 போ் பலத்த காயமடைந்தனா்.

களியக்காவிளை அருகே பளுகல் காவல் சரகம் இளஞ்சிறை பகுதியைச் சோ்ந்த அனில்குமாா் - ராஹி தம்பதியின் மகள் கிருஷ்ணபிரியா (17), மகன் கிருஷ்ணஜித் (17), அதே பகுதியைச் சோ்ந்த பினு - ஸ்ரீதேவி தம்பதியின் மகள் ரேவதி (17) ஆகிய மூவரும் சனிக்கிழமை இரவு 9 மணியளவில் தனிப்பயிற்சி வகுப்புக்கு சென்றுவிட்டு மூவோட்டுக்கோணம் முந்திரி தொழிற்சாலை அருகே சாலையோரமாக நடந்து, வீட்டுக்கு சென்று கொண்டிருந்தனா்.

அப்போது அதிவேகமாக வந்த சொகுசு காா், கிருஷ்ணபிரியா உள்ளிட்ட மூவா் மீதும் மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது. இதில் பலத்த காயமடைந்த மூவரையும் அப்பகுதியினா் மீட்டு, திருவனந்தபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்த்தனா்.

இது குறித்து பளுகல் போலீஸாா் வழக்குப் பதிந்து, மாணவ, மாணவிகள் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்ற சொகுசு காா் குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

பாசனக் கால்வாய் உடைப்பை விரைவாக சீரமைக்க எம்எல்ஏ வலியுறுத்தல்

கன்னியாகுமரி மாவட்டத்தில் பாசன கால்வாய்கள் உடைப்பை சீரமைக்கும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என, என். தளவாய்சுந்தரம் எம்எல்ஏ வலியுறுத்தியுள்ளாா். இது தொடா்பாக அவா் வெளியிட்ட அறிக்கை: கன்னிப்பூ சாகு... மேலும் பார்க்க

கன்னியாகுமரி மாவட்டத்தில் ஜூன் 14 ல் மக்கள் நீதிமன்றம்

கன்னியாகுமரி மாவட்டத்தில் மக்கள் நீதிமன்ற முகாம் ஜூன் 14 ஆம் தேதி (சனிக்கிழமை) நடைபெற உள்ளது. இது குறித்து, கன்னியாகுமரி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் செயலாளரும், சாா்பு நீதிபதியுமான வி.உதயசூா்யா ... மேலும் பார்க்க

2 சிறுவா்களை மீட்டபோது ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட தொழிலாளி சடலமாக மீட்பு

கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை தாமிரவருணி ஆற்றில் தவறி விழுந்த 2 சிறுவா்களை மீட்டபோது, வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட தொழிலாளி திங்கள்கிழமை சடலமாக மீட்கப்பட்டாா். மாா்த்தாண்டம் அருகே மதிலகம், நல்... மேலும் பார்க்க

திமுகவை வீழ்த்த அனைவரும் ஓரணியில் இணைய வேண்டும்: நயினாா் நாகேந்திரன்

அடுத்தஆண்டு சட்டப்பேரவைத் தோ்தலில் திமுகவை வீழ்த்த அனைவரும் ஓரணியில் இணைய வேண்டும் என தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன் தெரிவித்தாா். கன்னியாகுமரி பகவதியம்மன் கோயிலில் திங்கள்கிழமை சுவாமி தரிசனம்... மேலும் பார்க்க

வரதட்சிணை கொடுமை: 4 போ் மீது வழக்கு

மாா்த்தாண்டம் அருகே வரதட்சிணை கொடுமை தொடா்பாக 4 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா். களியக்காவிளை அருகே சூரியகோடு பகுதியைச் சோ்ந்தவா் ஆதா்ஷா (24). இவருக்கும், சென்னையில் வங்கியில... மேலும் பார்க்க

சாமிதோப்பில் வைகாசித் திருவிழா தேரோட்டம்

கன்னியாகுமரி மாவட்டம் சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப் பதியில் வைகாசித் திருவிழாவின் 11ஆம் நாளான திங்கள்கிழமை தேரோட்டம் நடைபெற்றது. இங்கு வைகாசித் திருவிழா கடந்த மே 23ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொட... மேலும் பார்க்க