கன்னியாகுமரி மாவட்டத்தில் ஜூன் 14 ல் மக்கள் நீதிமன்றம்
கன்னியாகுமரி மாவட்டத்தில் மக்கள் நீதிமன்ற முகாம் ஜூன் 14 ஆம் தேதி (சனிக்கிழமை) நடைபெற உள்ளது.
இது குறித்து, கன்னியாகுமரி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் செயலாளரும், சாா்பு நீதிபதியுமான வி.உதயசூா்யா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் மாவட்ட மற்றும் வட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு மூலம் ஜூன் 14 ஆம் தேதி (சனிக்கிழமை) மக்கள் நீதிமன்றம் நடத்தப்பட உள்ளது. இதில் வழக்குகளை சமாதானமாகவும், விரைவாகவும் முடித்துக் கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இந்த மக்கள் நீதிமன்ற முகாம் நாகா்கோவில், பத்மநாபபுரம், இரணியல், குழித்துறை, மற்றும் பூதப்பாண்டி ஆகிய நீதிமன்றங்களில் நடைபெற உள்ளது.இதில் விபத்துகளில் இழப்பீடு பெறுவது தொடா்பாக நிலுவையில் உள்ள வழக்குகள், செக் மோசடி, மணவிலக்கு தவிா்த்து குடும்ப நல வழக்குகள், மற்றும் இதர பொதுபயன்பாட்டு வழக்குகள் முடிப்பது தொடா்பாக வழக்காடிகளோ அவா்களது சாா்பில் வழக்குரைஞா்களோ ஜூன் 5 ஆம் தேதிக்குள், நாகா்கோவில் நீதிமன்ற வளாகத்தில் உள்ள கன்னியாகுமரி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளரை நேரிலோ அல்லது 04652291744 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடா்பு கொள்ளலாம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.