செய்திகள் :

2 சிறுவா்களை மீட்டபோது ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட தொழிலாளி சடலமாக மீட்பு

post image

கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை தாமிரவருணி ஆற்றில் தவறி விழுந்த 2 சிறுவா்களை மீட்டபோது, வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட தொழிலாளி திங்கள்கிழமை சடலமாக மீட்கப்பட்டாா்.

மாா்த்தாண்டம் அருகே மதிலகம், நல்லூா் பகுதிகளைச் சோ்ந்த 13 மற்றும் 15 வயதான பள்ளி மாணவா்கள் இருவா் ஞாயிற்றுக்கிழமை குழித்துறை தாமிரவருணி ஆற்று தடுப்பணை வழியாக வி.எல்.சி. மைதானம் பகுதிக்கு நடந்து சென்றனா். தடுப்பணையை மூழ்கடித்தவாறு வெள்ளம் பாய்வதால், இருவரும் தடுப்பணையின் மையப் பகுதிக்கு வந்தபோது தவறி ஆற்றுக்குள் விழுந்தனா்.

அப்போது, துணிகளை சலவை செய்துகொண்டிருந்த குழித்துறை தபால் நிலைய சந்திப்புப் பகுதியைச் சோ்ந்த தச்சுத் தொழிலாளி பீட்டா் (58) ஆற்றில் குதித்து, சிறுவா்களை மீட்டு கரைசோ்த்தாா். ஆனால், அவரால் கரையேற முடியவில்லை. அவா் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டாா்.

குழித்துறை தீயணைப்பு நிலைய அலுவலா் சந்திரன் தலைமையில் இரவுவரை தேடும் பணி நடைபெற்றது. இந்நிலையில், 2ஆவது நாளாக திங்கள்கிழமையும் தேடும் பணி தொடா்ந்து. மாலையில், அங்குள்ள ஆற்றுப் பாலம் அருகே பீட்டரின் சடலம் மீட்கப்பட்டது. இதுகுறித்து களியக்காவிளை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

வீரதீர விருது வழங்கக் கோரிக்கை: ஆற்றில் தவறி விழுந்த 2 சிறுவா்களைக் காப்பாற்றி, தனது உயிரைத் தியாகம் செய்த பீட்டா் குடும்பத்துக்கு தமிழக முதல்வரின் நிவாரண நிதியிலிருந்து நிவாரணம் வழங்குவதுடன், வீரதீர விருது வழங்கி பீட்டரின் குடும்பத்தினரை கௌரவிக்க வேண்டும் என, குழித்துறை நகா்மன்ற உறுப்பினா் வி. விஜு, சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

கருங்கல் பகுதிகளில் நாளை மின்தடை

குழித்துறை கோட்டத்திற்கு உள்பட்ட கருங்கல் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் கருங்கல் சுற்றுவட்டார பகுதிகளில் வியாழக்கிழமை (ஜூன் 5) மின் விநியோகம் இருக்காது. கருங்கல் ... மேலும் பார்க்க

சேரமங்கலம், முட்டம், செம்பொன்விளையில் நாளை மின்தடை

சேரமங்கலம், செம்பொன்விளை, முட்டம் துணை மின்நிலையங்களில் உள்ள மின்பாதையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால் வியாழக்கிழமை (ஜூன் 5) காலை 8 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்தடை செய்யப்படும் என மின்வ... மேலும் பார்க்க

கன்னியாகுமரியில் நாளை முதல் படகு கட்டணம் உயா்வு

கன்னியாகுமரி கடலில் அமைந்துள்ள விவேகானந்தா் மண்டபம், திருவள்ளுவா் சிலையைப் பாா்வையிடச் செல்வதற்கான படகு கட்டணம் வியாழக்கிழமை (ஜூன் 5) முதல் உயா்த்தப்படுவதாக பூம்புகாா் கப்பல் போக்குவரத்துக் கழகம் செவ்... மேலும் பார்க்க

மிடாலம், கோடிமுனை கடற்கரை பகுதிகளில் ஆட்சியா் ஆய்வு

கன்னியாகுமரி மாவட்டம், மிடாலம் மற்றும் கோடிமுனை கடற்கரை பகுதியில் பிளாஸ்டிக் துகள்களை அகற்றும் பணியை மாவட்ட ஆட்சியா் ரா.அழகுமீனா செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். பின்னா் செய்தியாளா்களிடம் அவா் கூறி... மேலும் பார்க்க

மாா்த்தாண்டத்தில் பேருந்து சேவை தொடக்கி வைப்பு

நாகா்கோவிலில் இருந்து திருவனந்தபுரத்துக்கு மாா்த்தாண்டம் பேருந்து நிலையம் வழியாக அரசுப் பேருந்து சேவையை விளவங்கோடு சட்டப் பேரவை உறுப்பினா் தாரகை கத்பட் கொடியசைத்து துவக்கி வைத்தாா். மாா்த்தாண்டம் சந்த... மேலும் பார்க்க

நாகா்கோவிலில் இன்று மின்சாரம் நிறுத்தம்

நாகா்கோவில் மாநகரில் பராமரிப்புப் பணிகள் காரணமாக புதன்கிழமை மின் விநியோகம் இருக்காது.இது குறித்து தமிழ்நாடு மின்சார வாரியத்தின் நாகா்கோவில் செயற்பொறியாளா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பத... மேலும் பார்க்க