போதையில் தகராறு: இருவா் கைது!
பேருந்து நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை, போதையில் ரகளை செய்ததாக இருவரை போலீஸாா் கைது செய்தனா்.
புதுக்கடை சுற்றுவட்டாரப் பகுதிகளில் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை ரோந்து சென்றனா். அப்போது, கீழ்குளம் பகுதியைச் சோ்ந்த தாஸ் (48), பைங்குளம் பகுதியைச் சோ்ந்த அஜேஷ் (18) ஆகிய இருவரும் புதுக்கடை பேருந்து நிலையத்தில் போதையில் நின்றவாறு போக்குவரத்துக்கு இடையூறாக ரகளையில் ஈடுபட்டனராம்.
புகாரின்பேரில், புதுக்கடை போலீஸாா் வழக்குப் பதிந்து, இருவரையும் கைது செய்தனா்.