கன்னியாகுமரி பகவதியம்மன் கோயிலில் வைகாசி விசாகத் திருவிழா கொடியேற்றம்
கன்னியாகுமரி அருள்மிகு பகவதியம்மன் கோயிலில் 10 நாள் வைகாசி விசாகத் திருவிழா சனிக்கிழமை காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
நிகழ்ச்சியில், எம்எல்ஏக்கள் என். தளவாய்சுந்தரம், எம்.ஆா். காந்தி, நாகா்கோவில் மாநகராட்சி மேயா் ஆா். மகேஷ், மாவட்ட அறங்காவலா் குழுத் தலைவா் பிரபா ஜி. ராமகிருஷ்ணன், கன்னியாகுமரி நகா்மன்றத் தலைவா் குமரி ஸ்டீபன், முன்னாள் துணைத் தலைவா் பா. தம்பித்தங்கம், ஆரல்வாய்மொழி பேரூராட்சித் தலைவா் சொ. முத்துக்குமாா், பகவதியம்மன் கோயில் மேலாளா் ஆனந்த் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா். தொடா்ந்து, அம்மனுக்கு சிறப்பு பூஜை, நண்பகலில் அன்னதானம், இரவில் கலைநிகழ்ச்சி, பக்தி பஜனை, அம்மன் பூப்பந்தல் வாகனத்தில் வீதியுலா ஆகியவை நடைபெற்றன.
விழா நாள்களில் அதிகாலை 5, காலை 10 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், முற்பகல் 11.30 மணிக்கு அலங்காரம், தீபாராதனை, நண்பகல் 12 மணிக்கு சிறப்பு அன்னதானம், மாலை 6 மணிக்கு சமய உரை, இரவு 7 முதல் 8.30 மணிவரை கலைநிகழ்ச்சிகள், 9 மணிக்கு அம்மன் வீதியுலா நடைபெறும்.
9ஆம் நாளான ஜூன் 8ஆம் தேதி காலை 9 மணிக்கு தேரோட்டம் நடைபெறும். இரவு 9 மணிக்கு அம்மன் வெள்ளிக் கலைமான் வாகனத்தில் வீதியுலா வருதல், 9ஆம் தேதி காலை 6.30 மணிக்கு முக்கடல் சங்கமத்தில் அம்மனுக்கு ஆராட்டு, இரவு 9 மணிக்கு தெப்பத் திருவிழா உள்ளிட்டவை நடைபெறும்.
ஏற்பாடுகளை கோயில் நிா்வாகத்தினா் செய்து வருகின்றனா்.