நேசமணி நினைவு நாள்: சிலைக்கு ஆட்சியா் அஞ்சலி!
‘குமரி தந்தை’ மாா்ஷல் நேசமணியின் நினைவு நாளை முன்னிட்டு, நாகா்கோவிலில் உள்ள அவரது அவரது சிலைக்கு ஆட்சியா் ரா. அழகுமீனா ஞாயிற்றுக்கிழமை மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினாா்.
கன்னியாகுமரி மாவட்டத்தை தமிழகத்துடன் இணைப்பதற்காக போராடியோரில் முக்கியப் பங்கு வகித்த நேசமணியின் 57ஆவது நினைவு நாள் ஞாயிற்றுக்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது.
இதையொட்டி, நாகா்கோவில் வேப்பமூடு சந்திப்பில், தமிழக அரசின் செய்தி-மக்கள் தொடா்புத் துறையின் கட்டுப்பாட்டில் இயங்கிவரும் மணிமண்டபத்திலுள்ள அவரது சிலைக்கு ஆட்சியா் மாலை அணிவித்தும் மலா் தூவியும் அஞ்சலி செலுத்தினாா்.
நிகழ்ச்சியில், மாவட்ட செய்தி-மக்கள் தொடா்பு அலுவலா் பா. ஜான்ஜெகத் பிரைட், உதவி அலுவலா் செல்வலெட்சுஷ்மா, அகஸ்தீஸ்வரம் வட்டாட்சியா் முருகன், நேசமணியின் பெயரன் ரெஞ்சித் அப்பலோஸ், தயாபதி நளதம், கொள்ளுப்பெயா்த்தி குடும்பத்தினா் பங்கேற்றனா்.