செய்திகள் :

சிலையின் கால்களை முத்தமிட்ட அஜித் - யார் அந்த விந்தை மனிதர்? | My Vikatan

post image

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல - ஆசிரியர்

F1 உலகத்துல எல்லாரும் லெவிஸ் ஹாமில்டன், மைக்கேல் ஷுமேக்கர், Ferrari அப்படின்னு சுத்திட்டு இருக்கும் போது ஒருத்தர் வந்தார் ஸார். அயர்டன் சென்னா (Ayrton Senna) தான் எனக்கு ரோல் மாடல் அப்படின்னு.

சொல்லப்போனால், பார்முலா 1 போட்டியில் 7 முறை உலக சாம்பியன்ஷிப் பெற்ற லெவிஸ் ஹாமில்டன் மற்றும் மைக்கேல் ஷுமேக்கரை விட, வெறும் மூன்று முறை மட்டுமே சாம்பியன்ஷிப் வென்ற சென்னா எப்படி அவருக்கு ரோல் மாடல் ஆனார்?

யாருக்குமே தலை வணங்காத நடிகர் அஜித், சிலையா இருக்குற அந்த மனுசானோட காலுக்கு முத்தம் குடுக்குறாருன்னா, அப்படிப்பட்ட மனுஷன் யாருன்னு தான் இப்ப ஒரு கூட்டமே தேடி அலைஞ்சிட்டு இருக்கு.

அது தான் நம்ப அஜித் பலம். 

இருக்காதா பின்ன. அவரே ஒரு இன்டெர்வியூல சொல்லிருக்கார். இந்தியாவுல அரசியல், சினிமா அப்புறம் கிரிக்கெட் அதுக்கு தான் எல்லாரும் முக்கியத்துவம் தராங்க அப்பிடின்னு. 

மத்தவங்களுக்கு வாழ்க கோஷம் போடுறத விட்டுட்டு நீங்க வாழ பாருங்கனு அவரு சொன்னாலும், அவரை விட மனசே இல்லாம, அவரு பின்னாடியே தான் கூட்டம் இன்னும் சுத்திட்டு இருக்கு.

தன்னை ஒரு ரோல் மாடலா பார்க்குற ஒரு பெரிய கூட்டத்திற்கு தன் மூலமா பல நல்ல விஷயங்களை கொண்டு சேர்க்கிறதுல நம்பாளு கில்லி. அவரு இந்த மாதிரி புதிய விஷயங்களை நம் இளைஞர்களின் மனதில் விதைப்பது ரொம்பவே பாராட்டுக்கு உரியது.

சரி, யாரு தான் இந்த சென்னா? வாங்க அலசுவோம்.

1960ம் ஆண்டு பிரேசில் நாட்டில் பிறந்து F1 உலகில் மூன்று முறை சாம்பியன்ஷிப் வென்று வெறும் 34 வயதில், அதே கார் பந்தயத்தில் எதிர்பாரா கோர விபத்தில் தன் இன்னுயிரை நீத்த கார் வீரர் தான் இந்த அயர்டன் சென்னா டா சில்வா.

இவரோட விபத்து F1 உலகத்தையே புரட்டி போட்டது. அந்த காலத்தில் இன்று போன்ற பாதுகாப்பு விதிமுறைகள் இருந்திராத சமயம். இவரது விபத்தின் காரணமாக, இந்த பந்தயத்தின் பாதுகாப்பு முறைகளை மட்டுமின்றி, ரேஸ் கார்களின் பாதுகாப்பு, ரேஸ் ட்ராக் வடிவமைப்பு என்று முற்றிலுமாக மாற்றி பல புதிய விஷயங்களை முன்னிறுத்தி மெருகேற்றினார்கள்.

விளையும் பயிர் முளையிலேயே தெரியும் என்பதற்கேற்ப சிறு வயதிலேயே இவருக்கு கார்களின் மேல் அபார ஈர்ப்பு இருந்தது. ஆண் பிள்ளைகளுக்கு கார்களின் மேல் ஈர்ப்பு இருப்பது சாதாரணம் தானே என்று கூறினால், மேலும் படியுங்கள். 

ஏழு வயதில் கார் பொம்மை வைத்து கொண்டு விளையாடும் நம் பிள்ளைகளுக்கு மத்தியில் ஒரு பிள்ளை நிஜ ஜீப் ஓட்டினால் ஆச்சர்யம் தானே. அது தான் சென்னா. ஆம், தன் ஏழு வயதில் அவர்களது வயல்வெளிகளில் ஜீப் ஓட்ட கற்றுக்கொண்டார்.

கார்களின் மீது சென்னாவின் அளவிடமுடியா ஆர்வத்தை கண்ட அவரது தந்தை அவருக்கு 1HP lawn mower கொண்டு சிறிய கார்ட் ஒன்று தயார் செய்து தந்தார். அதில் தான் தன் முதல் கார்ட் பயணத்தை துவங்கினார் இந்த சென்னா.

தன்னுடைய 13 வயதில் அவர் முதல் கார்ட்  பந்தயத்தில் பங்கு பெற்றார். 17ம் வயதில் அவர் முதன்முதலில் “சவுத் அமெரிக்கன் சாம்பியன்ஷிப்” வென்றார். அங்கிருந்து துவங்கியது அவரது ஏற்றம்.

1983 வரை F3 ரேஸிங்கில் கொடிகட்டி பறந்த சென்னா, பின் 1984ல் முதல்முதலாக பார்முலா 1 பந்தயத்தில் தன் கால்களை பதித்தார். இல்லை இல்லை, TG183B-05 என்ற அந்த காரில் பதித்தார். 

ஆம், இந்த Toleman என்ற குழு தான் F1 உலகில் அவர் தனது முதல் வெற்றி கணக்கை துவக்க உதவியது.

ஓர் பந்தயத்தின் வெற்றி கார் ஓட்டுனரை மட்டுமே சார்ந்தது இல்லை. அதற்கு மிக பெரிய எடுத்துக்காட்டு நடந்து முடிந்த Misano ரேஸில் அஜித் காரில் gearbox பிரச்சனை வந்த போது அவருக்கு கொடுத்து உதவிய மற்றொரு ரேஸிங் குழுமம் தான். ஆம், ஓட்டுநர், கார் மட்டுமின்றி அதை பராமரிக்கும் குழுமம் என்று அனைத்துமே நேர்கோட்டில் இருந்தால் தான் வெற்றி நிச்சயம்.

நீங்கள் சாதிக்கும் வரை பெரிய நிறுவனங்களின் பார்வை உங்கள் மீது விழப்போவதில்லை. 1983 காலகட்டங்களில் அவர் துடிப்பான இளைஞர், ஓர் F3 சாதனை வீரர்.

எனவே, முதல் முதலில் F1 பந்தயத்தில் அடியெடுத்து வைக்கும் அந்த இளைஞரை சீண்ட பல பெரிய நிறுவனங்கள் முன்வந்தது. இருப்பினும், இன்று சென்னாவை கொண்டாடும் இதே Mclaren குழுவை அன்று அவர் நிராகரித்ததும் வரலாறே.

புதிய நிறுவனமான டோலமைன் குழுமமுடன் தான் இவர் கையெழுத்திட்டார்.

இப்படி தான் டோலமைன் & சென்னா பார்முலா ரேஸ் உலகின் நட்சத்திரமாக திகழ்ந்தனர். இன்றும் அந்த கார் பிரசித்தி பெற்றுள்ளது என்றால் அதன் ஒரே காரணம் சென்னா என்னும் பெயர் தான்.

எல்லாரும் தான் ரேஸில் பங்குபெறுகிறார்கள். ஏன், பல வெற்றிகளையும் பெறுகிறார்கள். ஆனாலும், அதில் ஒரு சிலர் தான் மக்களால் போற்றப்படுவார்கள். அப்படிப்பட்ட ஒருவர் தான் இந்த சென்னா.

கார் பந்தய உலகில் pole position என்பது வெற்றிக்கு மிக மிக முக்கியம். Qualification சுற்றுகளில் முதலில் வருபவர் தான் ரேஸிங் துவக்கத்தில் முதல் ஆளாக நிற்கவைக்க படுவார்கள். இது தான் அந்த கார் ஓட்டுனரின் திறமையை பறைசாற்றும்.

அதிக pole position பெற்று சாதனை செய்தவர். இவர் இறந்து 30 வருடங்கள் ஆகியும், இன்றும் இந்த சாதனையில் மூன்றாவதாக திகழ்கிறார். ஆம், தான் கலந்துகொண்ட 161 Grand Prix போட்டியில் 65 pole position , 80 வெற்றிகள்,  மற்றும் 41 முதன்மை கோப்பை வென்று மிக பெரிய சாதனை படைத்தவர். அது மட்டுமில்லை. மூன்று முறை உலக சாம்பியன்ஷிப்பும் வென்றவர். 

படி படியாக உயர்ந்து 1984ம் ஆண்டு மொனாகோ நாட்டில் நடந்த பந்தயத்தில் கொட்டும் மழையில் 2வதாக வந்து அனைவரது புருவத்தையும் உயர்த்தினார்.

இப்படி பட்ட திறமைவாய்ந்த வீரர், துரதிஷ்டவசமாக இத்தாலி இமோலா-வில் நடந்த விபத்தில் உயிரிழந்தார்.

1994ம் ஆண்டு, மே 1.

மதியம் 2 மணிக்கு ரேஸ் துவங்கியது. அந்த பந்தயத்தின் 7வது சுற்றில் மைக்கேல் ஷுமேக்கர் பின்தொடர முதல் ஆளாக கிட்டத்தட்ட 300kmph வேகத்தில் சீறி பாய்ந்து கொண்டிருந்தார் சென்னா. எந்த வளைவுகளையும் அசாதாரணமாக கடந்து செல்லும் சென்னா அன்று அந்த Tamburello வளைவுகளில் தன் கார் திரும்ப மறுத்ததால் பிரேக் போட துவங்கினார். இருப்பினும், வேகத்தை முற்றிலுமாக குறைக்கும் முன்னர் 200 kmph வேகத்தில் கார் சிமெண்ட் தடுப்பில் நேருக்கு நேராக முட்டி சிதறியது. 

அதன் காரணமாக அவர் இறந்துவிட்டார். அவரது காரை பரிசோதித்த பொழுது ஒரு ஆஸ்திரேலிய தேசியக்கொடி இருந்தது தெரியவந்தது. அதை அவரது சக வீரர் ரோலண்ட் வால்டருக்கு மரியாதை செய்யும் விதமாக வெற்றி பெற்ற பின் காட்ட வைத்திருந்தார். 

ரோலண்ட் வால்டர் ஒரு தினங்களுக்கு முன் நடைபெற்ற தேர்ந்தேடுக்கும் சுற்றில் இறந்தது குறிப்பிடத்தக்கது. 

இன்று அனைவரும் போற்றும் மைக்கேல் ஷுமேக்கரின் முதல் F1 வெற்றி இவரது இறப்பினால் தான் சாத்தியமானது. மைக்கேலின் கண்முன்னே தான் அந்த விபத்தும் நடைபெற்றது. 

ஆம், அந்த சமயத்துல ஜெர்மனியை சேர்ந்த மைக்கேல் ஷுமேக்கர் தான் சென்னாவிற்கு மிக பெரிய போட்டி. 

தொடர்ந்து ஒரே அணியை சேர்ந்த இரண்டு பேர், அதுவும் பலரால் பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்ட ஒரு வீரர் என்பதால் இந்த விபத்தில் ஏதும் வில்லங்கம் இருக்குமோ என்று விசாரிக்க இத்தாலியில் 13 வருடம் ஒரு கேஸ் கூட நடந்தது. இறுதியில் அப்படி ஏதும் இல்லை என்றே தீர்ப்பு வந்தது.

சென்னாவின் பூத உடல் பிரேசில் நாட்டில் 5 லட்சம் மக்கள் சூழ கொண்டு செல்லப்பட்டு அந்நாட்டின் மரியாதையுடன் புதைக்கப்பட்டது. 

அது மட்டுமில்லை. அவர் இறந்த அந்த வளைவுகளுக்கு அருகே இவரது சிலையை நிறுவி இத்தாலியும் இவருக்கு பெருமை சேர்த்தது. இன்றும் மே 1 அன்று இங்கே இமோலாவில் நினைவு கூறப்படுகிறது. 

எவ்வளவு காலங்கள் வாழ்ந்தோம் என்பது  முக்கியம் இல்லை. வாழும் பொழுது என்ன சாதித்தோம், அடுத்த தலைமுறைக்கு என்ன விட்டு செல்கிறோம் என்பதே முக்கியம். அது இவர் விஷயத்தில் ரொம்பவே பொருந்தும்.

பல இளைஞர்களின் ரோல் மாடலாக இவர் இருப்பது இங்கே சென்று அவரது சிலையை காண்போருக்கு துல்லியமாக தெரியும். காரணம்? 

அங்கே உள்ள தேசிய கொடிகளும், போஸ்டர்களும் தான். கிட்டத்தட்ட அனைத்து நாட்டிலிருந்தும் அவரது ரசிகர்கள் இங்கே வந்து செல்வது இங்கேயுள்ள கொடிகளை கண்டாலே புரிந்துவிடும். 

உண்மையை சொல்லவேண்டுமானால், Monza ரேஸ் ட்ராக் முதல் ferrari மியூசியம் வரை சென்று கண்டு வந்த நான், நம் அஜித் போட்டோ வைரல் ஆன பின்புதான் இவ்விடத்திற்கு சென்று வந்தேன். இவரை பற்றி தெரிந்தும் கொண்டேன்.

இப்படிப்பட்ட ஒரு லெஜெண்ட் அஜித்தின் ரோல் மாடலாக இருப்பது ஆச்சர்யம் இல்லை தானே?

ஆனாலும் ஒன்று மட்டும் ஏனோ புரியவில்லை. பார்முலா 1 பந்தயத்தில் சென்னா முதல் முதலில் ஒட்டியதும் சரி, கடைசியில் இறக்கும் தருவாயில் ஓட்டிய காரும் சரி. இரண்டுமே Mclaren இல்லை. பின் அஜித் அந்த கார் தனக்கு பிடிக்க காரணம் சென்னா தான் என்று ஏன் கூறினார்?

 அதற்கான காரணத்தை தான் நானும் தேடிக்கொண்டுள்ளேன். அடுத்த முறை அஜித்தை சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கும் பொழுது முடிந்தால் அவரிடமிருந்தே பதிலை பெற வேண்டும். 

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

my vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், காணொளி, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

Virat Kohli : 'உடைந்து நொறுங்கிவிட்டேன்...' - பெங்களூரு உயிரிழப்புகள் பற்றி கோலி!

ஆர்சிபி அணி ஐ.பி.எல் கோப்பையை வென்றதையடுத்து சின்னசாமி மைதானத்தில் வெற்றிக் கொண்டாட்டங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த வெற்றிக் கொண்டாட்டத்தில் கலந்துகொள்ள வரும் வீரர்களை காண லட்சக்கணக்கில் ... மேலும் பார்க்க

RCB: "இத்தனை ஆண்டுகள் தந்த ஏமாற்றங்களுக்கும் ஆறுதல் தரும்" - விராட் கோலி நெகிழ்ச்சி

2025-ம் ஆண்டின் ஐ.பி.எல் இறுதிப்போட்டியில் பஞ்சாப் அணியை 6 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி கோப்பையை வென்றிருக்கிறது ஆர்.சி.பி அணி.ஐ.பி.எல் வரலாற்றில் முதல் முறையாகக் கோப்பையை வென்று தங்களுடைய 18 வருடக... மேலும் பார்க்க

RCB: "நான் பெங்களூரு அணியை தொடங்கியபோது..." - கோப்பையை வென்றது குறித்து விஜய் மல்லையா

2025-ம் ஆண்டின் ஐ.பி.எல் இறுதிப்போட்டியில் பஞ்சாப் அணியை 6 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி கோப்பையை வென்றிருக்கிறது ஆர்.சி.பி அணி. ஐ.பி.எல் வரலாற்றில் முதல் முறையாக கோப்பையைத் தன் வசப்படுத்தியிருக்கிற... மேலும் பார்க்க

RCB : 'சட்டமன்றம் டு சின்னசாமி ஸ்டேடியம்; ரோடு ஷோ நடத்தும் ஆர்சிபி!' - அப்டேட் என்ன?

'பெங்களூரு சாம்பியன்...'ஐ.பி.எல் தொடரின் இறுதிப்போட்டியில் பஞ்சாப் அணியை 6 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு அணி வீழ்த்தியிருந்தது. 18 ஆண்டு கால ஐ.பி.எல் வரலாற்றில் பெங்களூரு அணி வெல்லும் முதல் கோப்பை ... மேலும் பார்க்க