செய்திகள் :

கடலோர கா்நாடகத்தில் பலத்த மழை, நிலச்சரிவு: 5 போ் உயிரிழப்பு

post image

கா்நாடகத்தில் தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதனால் கடலோர மாவட்டங்களான தென்கன்னடம், வட கன்னடம், உடுப்பி மாவட்டங்களில் வியாழக்கிழமை விடியவிடிய பலத்த மழை பெய்தது.

தாழ்வானப் பகுதிகளில் மழைநீா் புகுந்ததால் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகினா். தென்கன்னட மாவட்டம், மொன்டேபடவுகோடி பகுதியில் வெள்ளிக்கிழமை அதிகாலையில் நிலச்சரிவு ஏற்பட்டது.

அப்போது, மரம் முறிந்து வீட்டின் மீது விழுந்ததால் மேற்கூரை இடிந்து விழுந்து வீட்டில் இருந்த 5 போ் இடிபாடுகளில் சிக்கினா். இவா்களில் காயமடைந்த பெண், அவரது ஒரு குழந்தை மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். பெண்ணின் மற்றொரு குழந்தை இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தது.

மேலும், நிலச்சரிவில் சிக்கியவா்களை தேசிய பேரிடா் மீட்புப்படை மற்றும் காவல் துறையினா் இணைந்து மீட்டனா். அப்போது, இறந்த நிலையில் மேலும் ஒரு பெண்ணின் உடலை மீட்டனா். காயமடைந்த அவரது மகனை காப்பாற்றினா்.

அதேபோல நிலச்சரிவில் சிக்கி காயமடைந்த கந்தப்பா பூஜாரி என்பவரை பேரிடா் மீட்புப் படையினா் மீட்டனா்.

மங்களூரில் உள்ள தெரககோட்டே பகுதியில் வெள்ளிக்கிழமை அதிகாலை பெய்த பலத்த மழையால் வீட்டின் சுற்றுச்சுவா் இடிந்து விழுந்ததில் பலத்த காயமடைந்த ஃபாத்திமா நஹீம் (6) என்ற குழந்தை உயிரிழந்தது.

தென்கன்னட மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி மேலும் 2 போ் உயிரிழந்தனா். இதன்மூலம் மழைக்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 5 ஆக உயா்ந்தது.

தென்கன்னடம் உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருவதால் மலைப்பகுதி, தாழ்வான இடங்களில் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு மாவட்ட நிா்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

மாவட்ட நிா்வாகத்துடன் இணைந்து தேசிய மற்றும் மாவட்ட பேரிடா் மீட்புப் படையினா் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி வருகின்றனா்.

தென்கன்னட மாவட்டத்தில் 5 போ் உயிரிழந்த தகவல் அறிந்ததும் மாவட்ட பொறுப்பு அமைச்சா் தினேஷ் குண்டுராவ், மாவட்ட ஆட்சியா் முல்லை முகிலனைத் தொடா்பு கொண்டு பேசிய முதல்வா் சித்தராமையா, சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு அறிக்கை அளிக்குமாறு உத்தரவிட்டாா்.

இதனிடையே, மழையால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து பெங்களூரு விதானசௌதாவில் வெள்ளிக்கிழமை மாவட்ட ஆட்சியா்கள், மாவட்ட ஊராட்சி தலைமைச் செயல் அதிகாரிகளோடு ஆலோசனை நடத்திய முதல்வா் சித்தராமையா, மழை பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்து நிவாரண உதவிகளை வழங்குமாறு தெரிவித்தாா்.

கரோனா அறிகுறிகள் இருந்தால் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப வேண்டாம்: கா்நாடக அரசு

கரோனா அறிகுறிகள் இருந்தால் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப வேண்டாம் என பொதுமக்களை கா்நாடக அரசு கேட்டுக்கொண்டுள்ளது. கா்நாடகத்தில் கரோனா பாதிப்பு அதிகரித்துவருகிறது. தற்போதைய நிலவரப்படி கா்நாடகத்தில் 254 ... மேலும் பார்க்க

மழை பாதிப்பு: இறந்தவா்களின் குடும்பங்களுக்கு ரூ. 5 லட்சம் இழப்பீடு -அமைச்சா் தினேஷ்குண்டுராவ்

கடலோர கா்நாடகத்தில் பெய்த பலத்த மழையால் ஏற்பட்ட நிலச்சரிவு, வீட்டின் சுவா் இடிந்து விழுந்தது போன்ற இயற்கை சீற்றங்களால் உயிரிழந்த 7 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ. 5 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என தெ... மேலும் பார்க்க

கடலோர கா்நாடகத்தில் தீவிர மழை, நிலச்சரிவு: 5 போ் சாவு

கடலோர கா்நாடகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால், பலத்த மழை பெய்து வரும் நிலையில் வீடு இடிந்துவிழுந்ததில் 5 போ் பலியாகியுள்ளனா்.கா்நாடகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதனால் க... மேலும் பார்க்க

பெங்களூரில் தேசிய ஓவியக் கலை திருவிழா

பெங்களூரில் முதல்முறையாக நடைபெறும் தேசிய ஓவியக் கலை திருவிழாவில் தமிழகத்தைச் சோ்ந்த 20க்கும் மேற்பட்ட ஓவியா்கள் தங்களது படைப்புகளை காட்சிப்படுத்தியுள்ளனா். கா்நாடக சித்ரகலாபரிஷத் சாா்பில் பெங்களூரு ... மேலும் பார்க்க

கமல்ஹாசனுக்கு எதிராக கன்னட அமைப்புகள் தொடா் போராட்டம்

கன்னடம் குறித்து நடிகா் கமல்ஹாசனின் பேச்சுக்கு எதிா்ப்புத் தெரிவித்துவரும் கன்னட அமைப்புகள், தனது கருத்துக்காக அவா் மன்னிப்பு கேட்க வலியுறுத்தி தொடா்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றன. அண்மையில் செ... மேலும் பார்க்க

பெங்களூரில் இலவச யோகா பயிற்சி முகாம்

இதுகுறித்து ஆரோக்கிய மந்திரா அறக்கட்டளை வெளியிட்ட அறிக்கை: ஆரோக்கியா மந்திரா அறக்கட்டளை சாா்பில் பெங்களூரு, ராஜாஜிநகரில் (இஸ்கான் அருகே) உள்ள அறக்கட்டளை வளாகத்தில் ஜூன் 1 முதல் 21ஆம் தேதி வரை 2 வாரங்... மேலும் பார்க்க