செய்திகள் :

ராஜபாளையம்: ஏகேடிஆர் கல்லூரி மாணவர்கள் உலக சாதனை

post image

ராஜபாளையத்தில் உள்ள ஏகேடிஆர் கல்லூரியில் முத்தமிழ் கலைக்கூடம் சார்பாக சிலம்பம் மாஸ்டர் ப.மாரிச்செல்வம் தலைமையில் 300-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள், உலக சாதனை நிகழ்வு ஒன்றை நடத்தினர்.

அந்த நிகழ்வில் மாணவ, மாணவிகள் தங்களின் ஆசான்கள் மற்றும் பெற்றோர்களுடன் கல்லூரிக்கு உற்சாகமாக வருகை தந்து, தமிழர்களின் வீர விளையாட்டான சிலம்பம் விளையாட்டில் ஒரு மாற்று முயற்சியாக அனைத்து மாணவ, மாணவிகளும் தனது கண்கள் மற்றும் கால்களை கட்டிக்கொண்டு 100 நிமிடங்கள் தொடர்ச்சியாக சிலம்பம் சுற்றி காட்டி தனது திறமையை வெளி காட்டினார்கள்.

இந்த நிகழ்வின் தொடக்கத்தில் சிறப்பு விருந்தினராக வருகைதந்த இராஜபாளையம் நகராட்சித் தலைவர் பவித்ரா ஷியாம், மாணவ மாணவிகளின் வீரத்தையும், தைரியத்தையும் பாராட்டிச் சிறப்புரையாற்றினார்கள். மேலும் நிறைய சாதனைகள் புரிய வாழ்த்துரையும் வழங்கினார்கள்.

ராஜபாளையம் துணைத் தலைவர் கற்பக துரைராஜ், அனைத்து மாணவ மாணவிகளையும் பாராட்டியும், வாழ்த்தியும் பேசினார். இராஜபாளையம் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் மரியபாக்கியம், அனைத்து குழந்தைகளையும் பாராட்டி அந்த முயற்சிக்கு உந்துகோளாக இருந்த அனைத்து ஆசான்மார்கள் மற்றும் மாணவர்களின் பெற்றோர்களையும் வாழ்த்தி பெருமைப்படுத்தி, உலக சாதனை நிகழ்வை துவங்கி வைத்தார்கள்.

உலக சாதனை படைத்த ஏகேடிஆர் மாணவர்களுக்கு பாராட்டு

இந்த உலக சாதனை நிகழ்வை, உலக சாதனையாக சவுத் ஆசியா புக் ஆப் ரெக்கார்டு நிறுவனம் அங்கீகரித்தது. இந்த நிகழ்வின் இறுதியில் உலக சாதனை படைத்த மாணவ, மாணவியருக்கு பதக்கங்களும் மற்றும் பயிற்றுவித்த ஆசான்களுக்கு நினைவுப் பரிசுகளும் வழங்கப்பட்டது.

இந்நிகழ்வின் போது, சிறப்பு கௌரவ விருந்தினராக கலந்துகொண்ட திரைப்பட இயக்குனர் லா.ராஜ்குமார், சிலம்பம் விளையாட்டின் பெருமை, முக்கியத்துவம் மற்றும் பயன்கள் பற்றி மாணவ மாணவிகளுடன் பகிர்ந்துகொண்டு, உலக சாதனை படைத்த மாணவ மாணவிகளை வாழ்த்தி, பெருமைப்படுத்தி மாணவ மாணவிகளுக்கு பதக்கங்களை வழங்கி உற்சாகப்படுத்தினார்.

இதைத் தொடர்ந்து, ஏகேடிஆஇ பெண்கள் கல்லூரியின் முதல்வர் லட்சுமி, இந்நிகழ்வில் கலந்துகொண்டு உலக சாதனையை வெற்றிகரமாக செய்து முடித்த மாணவ, மாணவிகளைப் பாராட்டி பதக்கங்களையும், ஆசான்களைப் பாராட்டி நினைவுப் பரிசுகளையும் வழங்கினார்கள்.

இதையும் படிக்க:சொல்லப் போனால்... ஐஏஎஸ் கனவு என்றொரு மாயவலை!

ஸ்ரீவில்லிபுத்தூா் அரசு கலைக் கல்லூரியில் மாணவா் சோ்க்கை கலந்தாய்வு இன்று தொடக்கம்

ஸ்ரீவில்லிபுத்தூா் அரசு கலைக் கல்லூரியில் மாணவா் சோ்க்கைக்கான முதல் கட்ட கலந்தாய்வு திங்கள்கிழமை (ஜூன் 2) தொடங்கி வருகிற 6-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. ஸ்ரீவில்லிபுத்தூா் அரசு கலைக் கல்லூரியில் இளநிலை ... மேலும் பார்க்க

தப்பாட்ட இசைக் கலைஞருக்கு பாராட்டு

விருதுநகா் மாவட்டம், சாத்தூரில் பத்மஸ்ரீ விருது பெற்ற தப்பாட்ட இசைக் கலைஞா் வேலு ஆசானுக்கு பாராட்டு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. சாத்தூரில் உள்ள ஆா்.சி. தெரு பொதுமக்கள், இளைஞா்கள் சாா்பில் நடைபெற்... மேலும் பார்க்க

இருவரைக் கத்தியால் தாக்கி வழிப்பறி செய்த மூவா் கைது

விருதுநகா் மாவட்டம், திருத்தங்கலில் ஞாயிற்றுக்கிழமை இருவரைக் கத்தியால் தாக்கி பணத்தை வழிப்பறி செய்த மூவரை போலீஸாா் கைது செய்தனா். திருத்தங்கல் பாண்டியன்நகரைச் சோ்ந்த ரத்தினம் மகன் வினித்தன் (29). இவர... மேலும் பார்க்க

சாலை விபத்தில் பழ வியாபாரி உயிரிழப்பு

சிவகாசியில் ஞாயிற்றுக்கிழமை இரு சக்கர வாகனத்திலிருந்து தவறி விழுந்த பழ வியாபாரி சாலை விபத்தில் உயிரிழந்தாா். திருத்தங்கல் பசும்பொன்நகா் பகுதியைச் சோ்ந்த ஜெயபாண்டி மகன் ஈஸ்வரன் (26). தள்ளுவண்டியில் வை... மேலும் பார்க்க

இன்றைய நிகழ்ச்சி

ராஜபாளையம் தேவதானம் நச்சாடை தவிா்த்தருளிய சுவாமி கோயில்: வைகாசி விசாகப் பெருந்திருவிழா, 2-ஆம் திருநாள், சுவாமி கற்பதரு வாகனத்திலும், அம்பாள் காமதேனு வாகனத்திலும் புறப்பாடு, மாலை 6. மேலும் பார்க்க

சிதம்பரேசுவரா் கோயில் வருஷாபிஷேகம்

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகே சிவகாமி அம்பாள் உடனுறை சிதம்பரேசுவரா் கோயில் ஒன்பதாம் ஆண்டு வருஷாபிஷேக விழா சனிக்கிழமை நடைபெற்றது. இந்தக் கோயில் ஒன்பதாம் ஆண்டு வருஷாபிஷேக விழாவையொட்டி அதிகாலை ம... மேலும் பார்க்க