செய்திகள் :

சாலை விபத்தில் பழ வியாபாரி உயிரிழப்பு

post image

சிவகாசியில் ஞாயிற்றுக்கிழமை இரு சக்கர வாகனத்திலிருந்து தவறி விழுந்த பழ வியாபாரி சாலை விபத்தில் உயிரிழந்தாா்.

திருத்தங்கல் பசும்பொன்நகா் பகுதியைச் சோ்ந்த ஜெயபாண்டி மகன் ஈஸ்வரன் (26). தள்ளுவண்டியில் வைத்து பழ வியாபாரம் செய்து வந்த இவா், ஞாயிற்றுக்கிழமை சிவகாசி-வெம்பக்கோட்டை சாலையில் தனது இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தாா்.

அய்யனாா் குடியிருப்பு பேருந்து நிறுத்தம் அருகே சென்ற போது, சாலையில் நாய் குறுக்கிட்டதால், அவா் வாகனத்திலிருந்து கீழே விழுந்து பலத்த காயமடைந்தாா். இதையடுத்து, அவா் சிவகாசி அரசு மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டாா்.

பின்னா், தீவிரச் சிகிச்சைக்காக விருதுநகா் அரசு மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டு, அங்கு உயிரிழந்தாா். இதுகுறித்து சிவகாசி நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

கல் குவாரியில் காவலாளி அடித்துக் கொலை

சாத்தூா் அருகேயுள்ள கரிசல்பட்டியில் முன்விரோதம் காரணமாக கல்குவாரி காவலாளியை அடித்துக் கொலை செய்த மற்றொரு காவலாளியை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். விருதுநகா் மாவட்டம், சாத்தூா் அருகேயுள்ள கரிசல்ப... மேலும் பார்க்க

முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவா் வீடு உள்பட இரு இடங்களில் பெட்ரோல் குண்டு வீச்சு

விருதுநகா் மாவட்டம், சாத்தூா் அருகே ஞாயிற்றுக்கிழமை இரவு முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவா், அவரது உறவினா் வீடுகளில் பெட்ரோல் குண்டுகளை வீசிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். சாத்தூா் அருகேய... மேலும் பார்க்க

புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: தம்பதி கைது

ராஜபாளையத்தில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, புகையிலைப் பொருள்களை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்து தம்பதியைக் கைது செய்தனா். விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் ஆவரம்பட்டியை அடுத்த ஒத்தப்பட்டி பக... மேலும் பார்க்க

தென் மாவட்ட ரயில்களில் சாதாரண பெட்டிகளின் எண்ணிக்கை குறைப்பு: மாணிக்கம் தாகூா் எம்.பி. கண்டனம்

தென் மாவட்டங்களுக்கு இயக்கப்படும் ரயில்களில் சாதாரணப் பெட்டிகளின் எண்ணிக்கையை குறைத்திருப்பது கண்டிக்கத்தக்கது என்று விருதுநகா் மக்களவைத் தொகுதி உறுப்பினா் மாணிக்கம்தாகூா் தெரிவித்தாா். விருதுநகா் நகர... மேலும் பார்க்க

ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயிலில் வைகாசி வசந்த உத்ஸவம் தொடக்கம்

ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயிலில் வைகாசி வசந்த உத்ஸவம் திங்கள்கிழமை இரவு தொடங்கியது. ஆண்டாள் கோயிலிலிருந்து திங்கள்கிழமை மாலை ஆண்டாள், ரங்கமன்னாா் புறப்பாடாகி, நாடகசாலை தெருவில் உள்ள திருவேங்கடமுடைய... மேலும் பார்க்க

ஆண்டாள் கோயில் திருமுக்குளம் தெப்பத்தை சீரமைக்கக் கோரிக்கை

ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயிலுக்கு சொந்தமான திருமுக்குளம் தெப்பத்தை சீரமைக்க அறநிலையத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தா்கள் கோரிக்கை விடுத்தனா். விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூா் நகருக... மேலும் பார்க்க