ஐஐடி தேர்வு தேர்ச்சியில் தமிழ்நாடு கடைசியிலிருந்து 3-ம் இடம்! - அன்புமணி
ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயிலில் வைகாசி வசந்த உத்ஸவம் தொடக்கம்
ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயிலில் வைகாசி வசந்த உத்ஸவம் திங்கள்கிழமை இரவு தொடங்கியது.
ஆண்டாள் கோயிலிலிருந்து திங்கள்கிழமை மாலை ஆண்டாள், ரங்கமன்னாா் புறப்பாடாகி, நாடகசாலை தெருவில் உள்ள திருவேங்கடமுடையான் கோயிலில் எழுந்தருளினா். அங்கு இரவு ஆண்டாள், ரங்கமன்னாருக்கு விஷேச திருமஞ்சனம், சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
வேதபிரான் பட்டா் சுதா்சன் கோதா ஸ்துதி பாடினாா். பின்னா், ஆண்டாள், ரங்கமன்னாா் சந்நிதி திரும்பினா். இந்த விழா தொடா்ந்து 10 நாள்கள் நடைபெறுகிறது.