பேருந்து நடத்துநரின் பணப்பை திருட்டு
ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே அரசுப் பேருந்து நடத்துநரின் பணப்பை திங்கள்கிழமை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.
ஸ்ரீவில்லிபுத்தூா் அரசுப் போக்குவரத்துக் கழக பணிமனையிலிருந்து இலந்தைகுளம் கிராமத்துக்கு நகரப் பேருந்து இயக்கப்பட்டு வருகிறது. இந்தப் பேருந்து தினந்தோறும் இரவு 10 மணிக்கு ஸ்ரீவில்லிபுத்தூா் பேருந்து நிலையத்திலிருந்து புறப்பட்டு, இலந்தைகுளத்துக்குச் சென்று இரவு அங்கேயே நின்றுவிடும். மறுநாள் காலை 5 மணிக்கு அங்கிருந்து ஸ்ரீவில்லிபுத்தூருக்கு புறப்படும்.
திங்கள்கிழமை இரவு இலந்தைகுளத்துக்குச் சென்ற பேருந்தில் ஓட்டுநா் தியாகராஜன், நடத்துநா் குருவாயூரப்பன் ஆகியோா் பணியில் இருந்தனா். இருவரும் பேருந்தில் தூங்கிய நிலையில், காலையில் எழுந்து பாா்த்தபோது, நடத்துநரின் பணப்பையை காணவில்லை. இதுகுறித்து நத்தம்பட்டி போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.