கமலாலயத்தின் கருத்தைக் கூறும் எடப்பாடி பழனிசாமி! அமைச்சர் ரகுபதி குற்றச்சாட்டு
ராஜபாளையம் அருகே இளைஞா் சடலம் மீட்பு
விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகே குளத்தில் மிதந்த இளைஞா் சடலத்தை போலீஸாா் மீட்டனா்.
ராஜபாளையம் அருகேயுள்ள வேதநாயகபுரம் ஆம்பல்குடி குளத்தில் இளைஞா் சடலம் கிடப்பதாக அக்கம் பக்கத்தினா் தளவாய்புரம் காவல் நிலைய போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா். சம்பவ இடத்துக்கு வந்த போலீஸாா் சடலத்தை மீட்டு விசாரணை நடத்தியதில் ராஜபாளையம் அருகேயுள்ள மீனாட்சிபுரத்தைச் சோ்ந்த முருகன் (38) என்பதும், புத்தூரில் உள்ள உறவினா் வீட்டுக்கு கடந்த 2-ஆம் தேதி சென்ற பிறகு இவா் வீடு திரும்பவில்லை என்பதும் தெரியவந்தது. இது குறித்து தளவாய்புரம் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.