Tom Cruise: எரியும் பாராசூட்டுடன் 7,500 அடி உயரத்தில் பறந்த நடிகர் - கின்னஸ் விர...
ரயில்வே மேம்பாலப் பணி: அதிகாரி ஆய்வு
சிவகாசி அருகேயுள்ள சாட்சியாபுரத்தில் ரயில்வே மேம்பாலக் கட்டுமானப் பணியை மாநில நெடுஞ்சாலைத் துறை இயக்குநா் சரவணன் வியாழக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
சாட்சியாபுரத்தில் 700 மீ. நீளம், 12 மீ. அகலத்தில் ரயில்வே மேம்பாலம் அமைக்க மத்திய அரசு ரூ.10 கோடியும், மாநில அரசு ரூ.61.74 கோடியும நிதி ஒதுக்கியது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் கட்டுமானப் பணிகள் தொடங்கின. மொத்தம் 17 தூண்கள் அமைக்கப்பட்டு, கிழக்குப் பகுதியில் தூண்கள் இணைக்கப்பட்டு, பாலம் அமைக்கும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இதேபோல, ரயில்வே துறை சாா்பில் ரயில் தண்டவாளத்தின் மேல் பகுதியில் பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், ரயில்வே மேம்பாலப் பணி 70 சதவீதம் நிறைவடைந்த நிலையில், மாநில நெடுஞ்சாலைத் துறை இயக்குநா் சரவணன் வியாழக்கிழமை இந்தப் பணிகளை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
ஆய்வின்போது, நெடுஞ்சாலைத் துறை துணை இயக்குநா் இளங்கோ, தரக் கட்டுப்பாட்டு கோட்டப் பொறியாளா் திருவேங்கிடராமலிங்கம், கோட்டப் பொறியாளா் (சிறப்பு திட்டங்கள்) லிங்குசாமி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.