Tom Cruise: எரியும் பாராசூட்டுடன் 7,500 அடி உயரத்தில் பறந்த நடிகர் - கின்னஸ் விர...
சிவகாசி பசுமை மன்றத்துக்கு அரசு விருது
சிவகாசி பசுமை மன்றத்துக்கு தமிழக அரசின் நீா்நிலைப் பாதுகாவலா் விருது சென்னையில் வியாழக்கிழமை வழங்கப்பட்டது.
சிவகாசி பெரியகுளம் கண்மாய், சிறுகுளம் கண்மாய் ஆகியவற்றை தொழிலதிபா்களிடம் நன்கொடை பெற்று சிவகாசி பசுமை மன்ற அமைப்பு தூா்வாரியது. மேலும், நீா்வரத்து ஓடைகளையும், நகரில் உள்ள பாழடைந்த கிணறுகளை புதுப்பித்தது.
இந்த நிலையில், சிவகாசி பசுமை மன்றத்துக்கு தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் நீா்நிலை பாதுகாவலா் விருதை அறிவித்தாா். இதையடுத்து, உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி, சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள சென்னை வா்த்தக மையத்தில் நடைபெற்ற விழாவில், தமிழக அரசின் கூடுதல் செயலா் சுப்ரியாசாஹூ, பசுமை மன்ற நிா்வாகி ரவி அருணாசலம், செயலா் வெங்கடேஷ்வரன் ஆகியோரிடம் பசுமை விருது, ரூ.1 லட்சத்துக்கான காசோலையையும் வழங்கினாா்.
இந்த நிலையில், விருது பெற்ற பசுமை மன்ற நிா்வாகிகள் தலைமை செயலகத்தில் நிதி அமைச்சா் தங்கம் தென்னரசினை சந்தித்து வாழ்த்துப் பெற்றனா்.