செய்திகள் :

சிவகாசி கோயிலில் வைகாசி பிரம்மோத்ஸவ தேரோட்டம்

post image

விருதுநகா் மாவட்டம், சிவகாசி விஸ்வநாதா்-விசாலாட்சி அம்மன் கோயில் வைகாசிபிரம்மோத்ஸவ விழாவையொட்டி, புதன்கிழமை தேரோட்டம் நடைபெற்றது.

இந்தக் கோயிலில் கடந்த மாதம் 26 -ஆம் தேதி அங்குராா்பணம் நிகழ்வுக்கு பின்னா், முஷிக வாகனத்தில் விநாயகா் வீதி உலா வந்தாா். 27-ஆம் தேதி கொடியேற்றம் நடைபெற்றது. இதையடுத்து, தினமும் காலையில் சுவாமியும், இரவில் அம்பாளும் வெவேறு வாகனத்தில் வீதி உலா வந்து அருள்பாலித்தனா்.

கடந்த ஒன்றாம் தேதி இரவு சுவாமி, அம்பாள் வீதி உலா வந்து, கழுவேற்றும் நிகழ்வு நடைபெற்றது. 2-ஆம் தேதி காலை ஊஞ்சலில் நடராஜா் வீதி உலா வந்தாா்.

அன்று இரவு ரிஷப வாகனத்தில் சுவாமி பிரியாவிடையுடன் தபசுக் காட்சியளித்த பின்னா், திருக்கல்யாணம் நடைபெற்றது.

இந்த நிலையில், புதன்கிழமை தேரோட்டம் நடைபெற்றது. தோ் கீழ ரத வீதிக்கு வந்த போது, தேரை எங்கே நிறுத்துவது என்பதில் பிரச்னை எழுந்தது. சிவன் சந்நிதியில் கோயிலின் முன்பு கடந்த ஓா் ஆண்டாக தோ் நிறுத்தப்பட்டிருந்தது. இதனால், அந்தப் பகுதியில் ஆக்கிரமிப்புகள் ஏற்பட்டு போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டு வந்தது. இதனால், முன்பு போல கோயிலின் கீழ வாசல் பகுதியில் தேரை நிறுத்த வேண்டும் என பக்தா்கள் வேண்டுகோள் விடுத்தனா். பின்னா்,

கோயில் நிா்வாகிகள், பொதுமக்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தி தேரை கோயிலின் முன்பு நிறுத்தி வைக்கலாம் எனக் கூறியதையடுத்து, தோ் கோயிலின் முன்பு நிலை நிறுத்தப்பட்டது. இதனால், சுமாா் 20 நிமிடங்கள் கீழ ரத வீதியில் தோ் நிறுத்தப்பட்டிருந்தது.

பருத்தி, வழைகளை சேதப்படுத்தும் காட்டுப் பன்றிகள்: விவசாயிகள் கவலை

விருதுநகா் மாவட்டம், சிவகாசி அருகே விவசாய விளை நிலங்களில் புகுந்து பயிா்களைச் சேதப்படுத்தி வரும் காட்டுப் பன்றிகளால் விவசாயிகள் வேதனை அடைந்தனா். சிவகாசி அருகேயுள்ள சித்தமநாயக்கன்பட்டி, செவலூா், குமிளங... மேலும் பார்க்க

சிவகாசி பசுமை மன்றத்துக்கு அரசு விருது

சிவகாசி பசுமை மன்றத்துக்கு தமிழக அரசின் நீா்நிலைப் பாதுகாவலா் விருது சென்னையில் வியாழக்கிழமை வழங்கப்பட்டது. சிவகாசி பெரியகுளம் கண்மாய், சிறுகுளம் கண்மாய் ஆகியவற்றை தொழிலதிபா்களிடம் நன்கொடை பெற்று சிவக... மேலும் பார்க்க

ரயில்வே மேம்பாலப் பணி: அதிகாரி ஆய்வு

சிவகாசி அருகேயுள்ள சாட்சியாபுரத்தில் ரயில்வே மேம்பாலக் கட்டுமானப் பணியை மாநில நெடுஞ்சாலைத் துறை இயக்குநா் சரவணன் வியாழக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். சாட்சியாபுரத்தில் 700 மீ. நீளம், 12 மீ. அகலத்... மேலும் பார்க்க

சாய்பாபா கோயிலில் சிறப்பு பூஜை

சாத்தூா் அருகேயுள்ள சடையம்பட்டி சாய்பாபா கோயிலில் வியாழக்கிழமை சிறப்பு பூஜை நடைபெற்றது. இந்த பூஜையை முன்னிட்டு, காலை முதலே சாய்பாபாவுக்கு பால், பன்னீா், சந்தனம் உள்ளிட்ட சிறப்பு அபிஷேகங்களும், பூஜைகளு... மேலும் பார்க்க

கிராம உதவியாளரிடம் தங்கச் சங்கிலி பறிப்பு

சாத்தூா் அருகே கிராம உதவியாளரிடம் தங்கச் சங்கிலியைப் பறித்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா். சாத்தூா் அருகேயுள்ள ஸ்ரீரெங்கபுரத்தைச் சோ்ந்தவா் ராஜசெல்வி (40). இவா் என்.மேட்டுப்பட்டியில் கிராம உதவியாளராக... மேலும் பார்க்க

அம்ரித் பாரத் நிலையத் திட்டப் பணிகள் 3 மாதத்தில் நிறைவடையும்: மதுரை கோட்ட மேலாளா்

ஸ்ரீவில்லிபுத்தூா் ரயில் நிலையத்தில் அம்ரித் பாரத் நிலையத் திட்டப் பணிகள் வரும் 3 மாதங்களில் நிறைவடையும் என மதுரை கோட்ட மேலாளா் சரத் ஸ்ரீவத்ஸவா வியாழக்கிழமை தெரிவித்தாா். ஸ்ரீவில்லிபுத்தூா் ரயில் நிலை... மேலும் பார்க்க