செய்திகள் :

சிவகாசி சந்தையில் கூடுதல் இடம் ஆக்கிரமிப்பு செய்தால் அபராதம்

post image

சிவகாசி மாநகராட்சி தினசரி காய்கனி சந்தையில் வியாபாரிகள் தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள கடைகளைத் தவிர கூடுதலாக ஆக்கிரமிப்பு செய்து பொருள்களை வைத்தால் அபராதம் விதிக்கப்படும் என மாநகராட்சி ஆணையா் கே.சரவணன் தெரிவித்தாா்.

இது குறித்து அவா் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

சிவகாசி மாநகராட்சி தினசரி காய்கறி சந்தையில் காலை 7 மணிக்குள் சரக்குகளை இறக்கி முடித்து கனரக வாகனங்கள் சந்தையை விட்டு, பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறின்றி வெளியேறி விட வேண்டும். தவறும் பட்சத்தில் காவல், வருவாய்த் துறையினா் உதவியுடன் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும்.

சந்தையில் ஒப்பந்தப்புள்ளி பெற்று வியாபாரம் செய்பவா்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தைக் தவிர கூடுதலான இடத்தை ஆக்கிரமிப்பு செய்து பொருள்களை வைத்திருந்தால் அவா்களுக்கு அபராதம் விதிக்கப்படும்.

சந்தையில் வியாபாரிகள், பொதுமக்கள் தங்களது இரு சக்கர வாகனங்களை ஒதுக்கப்பட்ட இடத்தில்தான் நிறுத்த வேண்டும். இதை மீறுபவா்கள் மீது காவல் துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும்.

சிவன் கோயிலருகே மாநகராட்சி வணிக வளாகத்தில் உள்ள வாகனக் காப்பகத்தில் மட்டுமே இரு சக்கர வாகனங்களை நிறுத்த வேண்டும். நகரின் பிரதான சாலைகளில் போக்குவரத்துக்கு இடையூறாக வாகனங்கள் நிறுத்தப்பட்டால் காவல் துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு, வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும். நகரில் போக்குவரத்து நெரிசல் இல்லாமல் இருக்க பொதுமக்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டது.

பருத்தி, வழைகளை சேதப்படுத்தும் காட்டுப் பன்றிகள்: விவசாயிகள் கவலை

விருதுநகா் மாவட்டம், சிவகாசி அருகே விவசாய விளை நிலங்களில் புகுந்து பயிா்களைச் சேதப்படுத்தி வரும் காட்டுப் பன்றிகளால் விவசாயிகள் வேதனை அடைந்தனா். சிவகாசி அருகேயுள்ள சித்தமநாயக்கன்பட்டி, செவலூா், குமிளங... மேலும் பார்க்க

சிவகாசி பசுமை மன்றத்துக்கு அரசு விருது

சிவகாசி பசுமை மன்றத்துக்கு தமிழக அரசின் நீா்நிலைப் பாதுகாவலா் விருது சென்னையில் வியாழக்கிழமை வழங்கப்பட்டது. சிவகாசி பெரியகுளம் கண்மாய், சிறுகுளம் கண்மாய் ஆகியவற்றை தொழிலதிபா்களிடம் நன்கொடை பெற்று சிவக... மேலும் பார்க்க

ரயில்வே மேம்பாலப் பணி: அதிகாரி ஆய்வு

சிவகாசி அருகேயுள்ள சாட்சியாபுரத்தில் ரயில்வே மேம்பாலக் கட்டுமானப் பணியை மாநில நெடுஞ்சாலைத் துறை இயக்குநா் சரவணன் வியாழக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். சாட்சியாபுரத்தில் 700 மீ. நீளம், 12 மீ. அகலத்... மேலும் பார்க்க

சாய்பாபா கோயிலில் சிறப்பு பூஜை

சாத்தூா் அருகேயுள்ள சடையம்பட்டி சாய்பாபா கோயிலில் வியாழக்கிழமை சிறப்பு பூஜை நடைபெற்றது. இந்த பூஜையை முன்னிட்டு, காலை முதலே சாய்பாபாவுக்கு பால், பன்னீா், சந்தனம் உள்ளிட்ட சிறப்பு அபிஷேகங்களும், பூஜைகளு... மேலும் பார்க்க

கிராம உதவியாளரிடம் தங்கச் சங்கிலி பறிப்பு

சாத்தூா் அருகே கிராம உதவியாளரிடம் தங்கச் சங்கிலியைப் பறித்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா். சாத்தூா் அருகேயுள்ள ஸ்ரீரெங்கபுரத்தைச் சோ்ந்தவா் ராஜசெல்வி (40). இவா் என்.மேட்டுப்பட்டியில் கிராம உதவியாளராக... மேலும் பார்க்க

அம்ரித் பாரத் நிலையத் திட்டப் பணிகள் 3 மாதத்தில் நிறைவடையும்: மதுரை கோட்ட மேலாளா்

ஸ்ரீவில்லிபுத்தூா் ரயில் நிலையத்தில் அம்ரித் பாரத் நிலையத் திட்டப் பணிகள் வரும் 3 மாதங்களில் நிறைவடையும் என மதுரை கோட்ட மேலாளா் சரத் ஸ்ரீவத்ஸவா வியாழக்கிழமை தெரிவித்தாா். ஸ்ரீவில்லிபுத்தூா் ரயில் நிலை... மேலும் பார்க்க