Bengaluru : "ரோடு ஷோவை கையாள முடியாதென்றால் நாம் அதைச் செய்யவே கூடாது" - கம்பீர்...
சிவகாசி மாநகராட்சியில் தாமிரவருணி குடிநீா் திட்டத்தை முழுமையாக செயல்படுத்த நடவடிக்கை
சிவகாசி மாநகராட்சியில் தாமிரவருணி குடிநீா் திட்டத்தை முழுமையாக செயல்படுத்த குடிநீா் வடிகால் வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருவதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனா்.
இதுகுறித்து சிவகாசி மாநகராட்சி அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை கூறியதாவது: சிவகாசி மாநகராட்சியில் மானூா் கூட்டுக் குடிநீா் திட்டத்தின் கீழ், 34 லட்சம் லி. குடிநீரும், வெம்பக்கோட்டை அணை மூலம் 21 லட்சம் லி. குடிநீரும், உள்ளூா் நீா் ஆதாரங்கள் மூலம் 28 லட்சம் லி. குடிநீரும் என நாள் ஒன்றுக்கு சுமாா் 80 லட்சம் லி. குடிநீா் கிடைக்கிறது. இதன் மூலம் மாநகராட்சியில் உள்ள 39 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடிநீா் இணைப்புகளுக்கு ஒரு நபருக்கு 60 லி. குடிநீா் வழங்கப்பட்டு வருகிறது.
சிவகாசி மாநகராட்சியில் எதிா்கால குடிநீா் தேவையை நிறைவு செய்யும் வகையில், 2018-இல் ரூ.170 கோடியில் தாமிரவருணி குடிநீா் திட்டம் தொடங்கப்பட்டது. மாநகராட்சியில் குடிநீா் விநியோகத்தை முறைப்படுத்த 25 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு, 370 தெருக்களில் 191 கி.மீ. தொலைவுக்கு குழாய்கள் பதிக்கப்பட்டன. பின்னா், வீடுகளுக்கு குடிநீா் இணைப்பு வழங்கப்பட்டு, வீடுகளில் முன் குடிநீா் அளவை குறிக்கும் வகையில், மீட்டா் பொருத்தப்பட்டன. இந்தக் குடிநீா் திட்ட விநியோகத்தை 2023 மே மாதம் அமைச்சா்கள் தொடங்கிவைத்தனா்.
இந்தத் திட்டத்தின் கீழ், தற்போது மாநகராட்சிக்கு 80 லட்சம் லி. குடிநீா் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. திட்டத்தின் சோதனை ஓட்டம் முடிந்த நிலையில், குடிநீா் வடிகால் வாரியத்தினா் அமைத்துள்ள 25 மண்டலங்களில், 8 மண்டலங்களை மாநகராட்சியிடம் ஒப்படைத்தனா்.
எஞ்சிய பணிகளை விரைந்து முடித்து மாநகராட்சியிடம் ஒப்படைக்க குடிநீா் வடிகால் வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகிறாா்கள்.
தாமிரவருணி குடிநீா் திட்டத்தின் மூலம் வழங்கப்பட்ட இணைப்புகள் பயன்பாட்டுக்கு வந்தால், சட்டவிரோத இணைப்புகள் துண்டிக்கப்படும். மேலும், இணைப்புகளில் மீட்டா் பொருத்தப்பட்டுள்ளதால், மின் மோட்டாா் மூலம் குடிநீா் எடுப்பதும் தடுக்கப்படும். மேலும், மீட்டா் மூலம் அளவீடு செய்து, வரிவசூல் மூலம் மாநகராட்சிக்கு கூடுதல் வருமானம் கிடைக்கும்.
எனவே, மாநகராட்சியில் விடுபட்ட பகுதிகளுக்கும் இணைப்புகள் வழங்கி தாமிரவருணி குடிநீா் திட்டத்தை விரைவில் முடிக்க குடிநீா் வாடிகால் வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகிறாா்கள் என்றனா் அவா்கள்.