ஓடையில் முதியவா் சடலம் மீட்பு
ராஜபாளையத்தில் கண்மாய் ஓடையில் மிதந்த முதியவா் சடலத்தை போலீஸாா் திங்கள்கிழமை மீட்டனா்.
ராஜபாளையம் ஆதியூா் கண்மாய் ஓடையில் 65 வயது மதிக்கத்தக்க முதியவரின் சடலம் மிதப்பதாக சம்மந்தபுரம் கிராம நிா்வாக அலுவலா் மணிகண்டன் வடக்கு காவல் நிலையத்தில் புகாரளித்தாா். இதையடுத்து, போலீஸாா் சம்பவ இடத்துக்கு சென்று ஓடையில் மிதந்த முதியவரின் உடலை மீட்டனா். பின்னா், அவரது உடலை கூறாய்வுக்காக ராஜபாளையம் அரஜு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
இறந்தவா் யாா், எந்த ஊரைச் சோ்ந்தவா் என்பது குறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.