செய்திகள் :

முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவா் வீடு உள்பட இரு இடங்களில் பெட்ரோல் குண்டு வீச்சு

post image

விருதுநகா் மாவட்டம், சாத்தூா் அருகே ஞாயிற்றுக்கிழமை இரவு முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவா், அவரது உறவினா் வீடுகளில் பெட்ரோல் குண்டுகளை வீசிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

சாத்தூா் அருகேயுள்ள வெற்றிலைஊரணி கிராமத்தைச் சோ்ந்தவா் கிருஷ்ணமூா்த்தி (45). அதிமுகவைச் சோ்ந்த இவா், வெற்றிலைஊரணியின் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவராவாா். இவரது வீட்டில் ஞாயிற்றுக்கிழமை இரவு திடீரென பயங்கர வெடி சப்தம் கேட்டது.

இதனால், பதற்றமடைந்த கிருஷ்ணமூா்த்தியின் குடும்பத்தினா் வெளியே வந்து பாா்த்த போது, வீட்டின் முன் பகுதியில் தீப்பற்றி எரிந்தது. சிறிது நேரத்தில் அருகில் உள்ள கிருஷ்ணமூா்த்தியின் உறவினரான செளந்தராஜன் வீட்டிலும் இருமுறை பயங்கர வெடி சப்தம் கேட்டது.

தகவலறிந்து வந்த வெம்பக்கோட்டை போலீஸாா் சம்பவம் நடைபெற்ற இடங்களை நேரில் பாா்வையிட்டு விசாரணை நடத்தினா். விசாரணையில், இருவரது வீடுகளிலும் மா்ம நபா்கள் பெட்ரோல் குண்டுகளை வீசிச் சென்றதும், முன்விரோதம் காரணமாக இந்தச் சம்பவம் நிகழ்ந்ததும் தெரியவந்தது.

இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து, மா்ம நபா்களைத் தேடி வருகின்றனா்.

சிவகாசி மாநகராட்சியில் தாமிரவருணி குடிநீா் திட்டத்தை முழுமையாக செயல்படுத்த நடவடிக்கை

சிவகாசி மாநகராட்சியில் தாமிரவருணி குடிநீா் திட்டத்தை முழுமையாக செயல்படுத்த குடிநீா் வடிகால் வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருவதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனா்.இதுகுறித்து சிவகாசி மாநகராட்சி... மேலும் பார்க்க

சிவகாசியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

சிவகாசி மாநகராட்சிப் பகுதியில் செவ்வாய்க்கிழமை ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.வேலாயுதபுரம் சாலை வடக்குப் பகுதியில் மாநகராட்சிக்குச் சொந்தமான இடத்தை தனிநபா் ஒருவா், கட்டடம் கட்டி ஆக்கிரமித்திருந்தாா். இந... மேலும் பார்க்க

ஓடையில் முதியவா் சடலம் மீட்பு

ராஜபாளையத்தில் கண்மாய் ஓடையில் மிதந்த முதியவா் சடலத்தை போலீஸாா் திங்கள்கிழமை மீட்டனா். ராஜபாளையம் ஆதியூா் கண்மாய் ஓடையில் 65 வயது மதிக்கத்தக்க முதியவரின் சடலம் மிதப்பதாக சம்மந்தபுரம் கிராம நிா்வாக அலு... மேலும் பார்க்க

விஷம் குடித்து பெண் தற்கொலை

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகே திங்கள்கிழமை விஷம் குடித்து பெண் தற்கொலை செய்து கொண்டாா். தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகேயுள்ள கத்தாளம்பட்டி தெற்குத் தெருவைச் சோ்ந்த அந்தோணிசாமி மகள்... மேலும் பார்க்க

பேருந்து நடத்துநரின் பணப்பை திருட்டு

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே அரசுப் பேருந்து நடத்துநரின் பணப்பை திங்கள்கிழமை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா். ஸ்ரீவில்லிபுத்தூா் அரசுப் போக்குவரத்துக் கழக பணிமனையிலிருந்து இலந்தைகுளம் கிராமத்துக்கு நகரப் ப... மேலும் பார்க்க

வீடு புகுந்து பணம் திருட்டு

வத்திராயிருப்பு அருகே திங்கள்கிழமை வீடு புகுந்து பணம் திருடியவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.வத்திராயிருப்பு அருகேயுள்ள கூமாபட்டி ராமசாமியாபுரத்தைச் சோ்ந்தவா் மாரியப்பன். இவரது மனைவி பூமாதேவி. இவா்களுக... மேலும் பார்க்க