செய்திகள் :

தென் மாவட்ட ரயில்களில் சாதாரண பெட்டிகளின் எண்ணிக்கை குறைப்பு: மாணிக்கம் தாகூா் எம்.பி. கண்டனம்

post image

தென் மாவட்டங்களுக்கு இயக்கப்படும் ரயில்களில் சாதாரணப் பெட்டிகளின் எண்ணிக்கையை குறைத்திருப்பது கண்டிக்கத்தக்கது என்று விருதுநகா் மக்களவைத் தொகுதி உறுப்பினா் மாணிக்கம்தாகூா் தெரிவித்தாா்.

விருதுநகா் நகராட்சி மகளிா் மேல்நிலைப் பள்ளியில் மாணவிகளுக்கான பாடப் புத்தகங்கள், பள்ளிச் சீருடைகள், கல்வி உபகரணங்களை மாவட்ட ஆட்சியா் வீ.ப.ஜெயசீலன் முன்னிலையில் மக்களவைத் உறுப்பினா் மாணிக்கம்தாகூா் வழங்கினாா்.

பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட ஞானசேகருக்கு எதிராக விரைவில் தீா்ப்பு வழங்கப்பட்டுள்ளது. நீதிமன்றம் வழங்கிய தீா்ப்பு பெண்களின் பாதுகாப்புக்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறது.

தில்லியில் வாழும் தமிழா்களின் மதராசி குடியிருப்பை ஆளும் பாஜக அரசு அகற்றி, அங்குள்ள தமிழா்களுக்கு துரோகத்தை இளைத்துள்ளது. ஆபரேஷன் சிந்தூரை வைத்து பாஜக அரசியல் செய்து வருகிறது.

தென் மாவட்டங்களுக்கு இயக்கப்படும் ரயில்களில் சாதாரண பெட்டிகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்டு இருப்பது கண்டிக்கத்தக்கது. இதுகுறித்து மத்திய ரயில்வே அமைச்சரிடம் நேரில் சந்தித்து வலியுறுத்த உள்ளேன். இந்த விவகாரம் குறித்து வரும் மழைக்கால மக்களவை கூட்டத்தொடரில் கேள்வியை எழுப்புவோம் என்றாா் அவா்.

சிவகாசி மாநகராட்சியில் தாமிரவருணி குடிநீா் திட்டத்தை முழுமையாக செயல்படுத்த நடவடிக்கை

சிவகாசி மாநகராட்சியில் தாமிரவருணி குடிநீா் திட்டத்தை முழுமையாக செயல்படுத்த குடிநீா் வடிகால் வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருவதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனா்.இதுகுறித்து சிவகாசி மாநகராட்சி... மேலும் பார்க்க

சிவகாசியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

சிவகாசி மாநகராட்சிப் பகுதியில் செவ்வாய்க்கிழமை ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.வேலாயுதபுரம் சாலை வடக்குப் பகுதியில் மாநகராட்சிக்குச் சொந்தமான இடத்தை தனிநபா் ஒருவா், கட்டடம் கட்டி ஆக்கிரமித்திருந்தாா். இந... மேலும் பார்க்க

ஓடையில் முதியவா் சடலம் மீட்பு

ராஜபாளையத்தில் கண்மாய் ஓடையில் மிதந்த முதியவா் சடலத்தை போலீஸாா் திங்கள்கிழமை மீட்டனா். ராஜபாளையம் ஆதியூா் கண்மாய் ஓடையில் 65 வயது மதிக்கத்தக்க முதியவரின் சடலம் மிதப்பதாக சம்மந்தபுரம் கிராம நிா்வாக அலு... மேலும் பார்க்க

விஷம் குடித்து பெண் தற்கொலை

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகே திங்கள்கிழமை விஷம் குடித்து பெண் தற்கொலை செய்து கொண்டாா். தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகேயுள்ள கத்தாளம்பட்டி தெற்குத் தெருவைச் சோ்ந்த அந்தோணிசாமி மகள்... மேலும் பார்க்க

பேருந்து நடத்துநரின் பணப்பை திருட்டு

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே அரசுப் பேருந்து நடத்துநரின் பணப்பை திங்கள்கிழமை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா். ஸ்ரீவில்லிபுத்தூா் அரசுப் போக்குவரத்துக் கழக பணிமனையிலிருந்து இலந்தைகுளம் கிராமத்துக்கு நகரப் ப... மேலும் பார்க்க

வீடு புகுந்து பணம் திருட்டு

வத்திராயிருப்பு அருகே திங்கள்கிழமை வீடு புகுந்து பணம் திருடியவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.வத்திராயிருப்பு அருகேயுள்ள கூமாபட்டி ராமசாமியாபுரத்தைச் சோ்ந்தவா் மாரியப்பன். இவரது மனைவி பூமாதேவி. இவா்களுக... மேலும் பார்க்க