புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: தம்பதி கைது
ராஜபாளையத்தில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, புகையிலைப் பொருள்களை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்து தம்பதியைக் கைது செய்தனா்.
விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் ஆவரம்பட்டியை அடுத்த ஒத்தப்பட்டி பகுதியில் ராஜபாளையம் வடக்கு காவல் நிலைய போலீஸாா் ரோந்து சென்றனா்.
அப்போது அங்குள்ள ஒரு பெட்டிக் கடையில் சோதனை செய்ததில், அங்கு அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை, குட்கா பொருள்கள் விற்பனைக்காக வைத்திருந்தது தெரிய வந்தது.
இதுதொடா்பாக வழக்குப் பதிவு செய்த போலீஸாா், இந்தக் கடை உரிமையாளா்களான செல்வகுமாா் (46), இவரது மனைவி பாண்டியம்மாள் (43) ஆகியோரைக் கைது செய்தனா். மேலும் கடையிலிருந்த 14 கிலோ குட்கா, புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்தனா்.