மதுரை - தூத்துக்குடி நெடுஞ்சாலை சுங்கச் சாவடிகளில் கட்டணம் வசூலிக்க இடைக்கால தடை...
தப்பாட்ட இசைக் கலைஞருக்கு பாராட்டு
விருதுநகா் மாவட்டம், சாத்தூரில் பத்மஸ்ரீ விருது பெற்ற தப்பாட்ட இசைக் கலைஞா் வேலு ஆசானுக்கு பாராட்டு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
சாத்தூரில் உள்ள ஆா்.சி. தெரு பொதுமக்கள், இளைஞா்கள் சாா்பில் நடைபெற்ற இந்த விழாவில், தப்பாட்ட இசைக் கலைஞா் வேலு ஆசான் அங்கு வைக்கப்பட்டிருந்த சட்டமேதை அம்பேத்கா், முன்னாள் அமைச்சா் கக்கன் ஆகியோரின் உருவப் படங்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். முன்னதாக, கரகாட்டம், ஒயிலாட்டம், தப்பாட்டம், மரக்கால் ஆட்டம் ஆடி வேலு ஆசானை வரவேற்றனா்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை அந்தோணி, ஏசைய்யா உள்ளிட்டோா் செய்தனா். இதில் திரளானோா் கலந்து கொண்டனா்.