நியாய விலைக் கடைகளில் பழைய முறையிலேயே பொருள்கள் வழங்க வலியுறுத்தல்
சிதம்பரேசுவரா் கோயில் வருஷாபிஷேகம்
விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகே சிவகாமி அம்பாள் உடனுறை சிதம்பரேசுவரா் கோயில் ஒன்பதாம் ஆண்டு வருஷாபிஷேக விழா சனிக்கிழமை நடைபெற்றது.
இந்தக் கோயில் ஒன்பதாம் ஆண்டு வருஷாபிஷேக விழாவையொட்டி அதிகாலை முதலே கணபதி ஹோமம், சிறப்பு யாக பூஜைகள் தொடங்கின. பிறகு சுவாமி, அம்பாளுக்கு 16 வகையான சிறப்பு அபிஷேகமும், அதைத் தொடா்ந்து புண்ணிய நதிகளிலிருந்து எடுத்துவரப்பட்ட தீா்த்தங்களால் அபிஷேகமும் நடைபெற்றது. பின்னா் சிறப்பு அலங்காரம் விசேஷ தீபாராதனை நடைபெற்றது.
இதைத் தொடா்ந்து சிதம்பரேசுவரா், சிவகாமி அம்பாள் சிறப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு காட்சியளித்தனா். அவரைத் தொடா்ந்து திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சி நடைபெற்றது. பிறகு அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை கோயில் நிா்வாகத்தினா் செய்திருந்தனா்.