செய்திகள் :

``இனி யார் அந்த சார்? என்று கேட்டால், அது நீதிமன்ற அவமதிப்பு'' -அரசு தரப்பு வழக்கறிஞர் சொல்வது என்ன?

post image

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட ஞானசேகரன் குற்றவாளி என மே 28 ஆம் தேதி நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி இருந்தது.

தீர்ப்பின் தண்டனை விவரம் ஜுன் 2 ஆம் தேதி வெளியாகும் என்று நீதிமன்றம் தெரிவித்திருந்த நிலையில், இன்று தீர்ப்பு வெளியாகி இருக்கிறது. அதன்படி குற்றவாளி ஞானசேகரனுக்கு 30 ஆண்டுகளுக்கும் குறையாத ஆயுள் தண்டனையும், ரூ.90 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டிருக்கிறது.

ஞானசேகரன்
ஞானசேகரன்

இந்நிலையில் தண்டனை தீர்ப்பு குறித்து அரசு தரப்பு வழக்கறிஞர் மேரி ஜெயந்தி செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியிருக்கிறார். “இவர் மீது இருக்கும் குற்றச்சாட்டுக்கு அதிகபட்ச தண்டனை இதுதான்.

ஞானசேகரன் தண்டனையில் எந்த ஒரு சலுகையும் தரப்படாது. இனி யார் அந்த சார்? என்று கேள்வி எழுப்பினால் அது நீதிமன்ற அவமதிப்பாகும். ஞானசேகரனின் பின்புலத்தில் யாரும் இல்லை.

சம்பவம் நடந்த போது, அவரது ஃபோன் ஃபிளைட் மோடில் இருந்ததை செல்போன் சேவை நிறுவனமே உறுதி செய்யப்பட்டுள்ளது. சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரணையிலும் அது ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது.

ஞானசேகரன் செல்போனுக்கு செல்போனுக்கு எந்த அழைப்பும் வரவில்லை என்று பாதிக்கப்பட்ட மாணவியும் உறுதி செய்திருந்தார். அது ஆதாரப்பூர்வமாகவும் அது நிரூபிக்கப்பட்டுள்ளது.

வழக்கறிஞர் மேரி ஜெயந்தி
வழக்கறிஞர் மேரி ஜெயந்தி

பாதிக்கப்பட்ட மாணவியை மிரட்டுவதற்காகவே, அவர் தானும் அந்த பல்கலை, ஊழியர் என்று, ஞானசேகரன் யாருடனோ போனில் பேசியது போல நடித்திருக்கிறார்.

இதன் மூலம், ஞானசேகரனைத் தவிர, வேறு யாருக்கும் இந்த சம்பவத்தில் தொடர்பில்லை என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்திருக்கிறார். 

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk

ஆன்லைன் விளையாட்டு: `மாநில அரசின் விதிமுறைகள் செல்லும்’ - வழக்கை தள்ளுபடி செய்த உயர் நீதிமன்றம்

தமிழகத்தில் ஆன்லைன் விளையாட்டுக்களை முறைப்படுத்த, கடந்த 2022ம் ஆண்டு தமிழ்நாடு ஆன்லைன் சூதாட்ட தடை மற்றும் ஆன் லைன் விளையாட்டுக்கள் ஒழுங்குமுறைச் சட்டத்தின் கீழ், ஆன்லைன் விளையாட்டுக்களை விளையாட ஆதார்... மேலும் பார்க்க

அண்ணா பல்கலை மாணவி பாலியல் வழக்கு: `ஞானசேகரனுக்கு 30 ஆண்டுகளுக்கு குறையாத ஆயுள் தண்டனை' - நீதிமன்றம்

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட ஞானசேகரன் குற்றவாளி என மே 28ஆம் தேதி நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி இருக்கிறது. தீர்ப்பின் தண்டனை விவரம் ஜுன் 2 ஆம் தேதி வெளியாகும் என்ற... மேலும் பார்க்க

'பணமதிப்பிழப்பு முதல் பில்கிஸ் பானு தீர்ப்பு வரை' - முதல் பெண் தலைமை நீதிபதியாகும் பி.வி. நாகரத்னா

உச்ச நீதிமன்றத்தின் ஐந்தாவது மூத்த நீதிபதியான நீதிபதி நாகரத்னா, அக்டோபர் 29, 2027 அன்று பணி ஓய்வு பெறும் வரை, நீதித்துறை நியமனங்கள் மற்றும் இடமாற்றங்களைப் பரிந்துரைத்தவாறு கொலீஜியத்தில் உறுப்பினராக நீ... மேலும் பார்க்க

`ஒரு கை தட்டினால் ஓசை வராது’ - பாலியல் வழக்கில் உச்ச நீதிமன்றம் கருத்து

டெல்லியைச் சேர்ந்த 23 வயதான சமூக வலைதள பிரபலத்தின் மீது துணிக்கடை நடத்தும் பெண் ஒருவர் பாலியல் புகார் தெரிவித்திருந்தார்.ஆப்பிள் ஐபோன்கடந்த, 2021ம் ஆண்டு சமூக வலைதளம் வாயிலாக, அறிமுகமான அந்த பிரபலத்தி... மேலும் பார்க்க

`குறைந்தபட்ச தண்டனை கொடுங்கன்னு ஞானசேகரன் கதறி அழுதார், ஆனா..!' - அரசு தரப்பு வழக்கறிஞர்

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட ஞானசேகரன் குற்றவாளி என இன்று(மே 28) நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி இருக்கிறது. இந்த நிலையில் தீர்ப்பு குறித்து அரசு தரப்பு வழக்கறிஞர் மே... மேலும் பார்க்க

`கருணை காட்ட வேண்டும்’ எனக் கேட்ட ஞானசேகரன் - அண்ணா பல்கலை., மாணவி வழக்கின் தீர்ப்பு விவரங்கள்

சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் கடந்த 2024ம் ஆண்டு டிசம்பர் 23ம் தேதி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக பல்கலைக்கழக மாணவி ஒருவர் கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் டிசம்பர் 24ம் தேதி புகார் அளித்தார்.... மேலும் பார்க்க