செய்திகள் :

`குறைந்தபட்ச தண்டனை கொடுங்கன்னு ஞானசேகரன் கதறி அழுதார், ஆனா..!' - அரசு தரப்பு வழக்கறிஞர்

post image

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட ஞானசேகரன் குற்றவாளி என இன்று(மே 28) நீதிமன்றம்  தீர்ப்பு வழங்கி இருக்கிறது.

இந்த நிலையில் தீர்ப்பு குறித்து அரசு தரப்பு வழக்கறிஞர் மேரி ஜெயந்தி விளக்கம் அளித்திருக்கிறார்.  ``குற்றவாளி ஞானசேகரனுக்கு எதிராக 11 வழக்குகளில் தடய அறிவியல் மூலமாகவும், சாட்சி மூலமாகவும் அரசு தரப்பில் நிரூப்பிக்கப்பட்டதால் குற்றவாளி என்று திர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

ஞானசேகரன்
ஞானசேகரன்

மேலும் தீர்ப்பு குறித்து அவரிடம் கேட்டபோது, `தண்டனையை குறைக்கவேண்டும் என்றும், எனக்கு அம்மா மட்டுமே, அப்பா இல்லை. என்னுடைய குடும்பத்தை நான் தான் பார்த்துகொள்ள வேண்டும். மேலும் தொழில் பாதிக்கும். தனக்கு குறைந்தபட்ச தண்டனை வழங்க வேண்டும்’ என்று கதறி அழுதார்.

இதற்கு அரசு தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. குற்றவாளி ஞானசேகரனுக்கு அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும். கருணைக் காட்டக்கூடாது. பல்கலைக்கழக வளாகத்திற்குள் நுழைந்து காட்டு மிராண்டி தனமான குற்றம் செய்திருக்கிறார். 

அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும் என்று அரசு தரப்பிலும் காவல்துறை தரப்பிலும் கோரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது. இந்த தீர்ப்பின் தண்டனை விவரம் ஜுன் 2 ஆம் தேதி வெளியாகும் ” என்று வழக்கறிஞர் விளக்கம் அளித்திருக்கிறார்.

`கருணை காட்ட வேண்டும்’ எனக் கேட்ட ஞானசேகரன் - அண்ணா பல்கலை., மாணவி வழக்கின் தீர்ப்பு விவரங்கள்

சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் கடந்த 2024ம் ஆண்டு டிசம்பர் 23ம் தேதி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக பல்கலைக்கழக மாணவி ஒருவர் கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் டிசம்பர் 24ம் தேதி புகார் அளித்தார்.... மேலும் பார்க்க

`அரிதிலும் அரிதான வழக்கு’ அண்ணா பல்கலை., பாலியல் வழக்கில் ஞானசேகரன் குற்றவாளி - நீதிமன்றம் தீர்ப்பு

சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி தெரிவித்த பாலியல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ஞானசேகரன் எதிரான வழக்கில் சென்னை மகளிர் நீதிமன்றம் இன்று காலை தீர்ப்பளித்துள்ளது.சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் க... மேலும் பார்க்க

ஆன்லைன் சூதாட்டம்: `மத்திய அரசு என்ன செய்துகொண்டிருக்கிறது’ - நோட்டீஸ் அனுப்பிய உச்ச நீதிமன்றம்

சூதாட்டத்துக்கு வித்திடும் ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் பந்தய செயலிகளை தடை செய்வது மற்றும் ஒழுங்குபடுத்துவது தொடர்பான பொதுநல வழக்கை உச்ச நீதிமன்றம் விசாரித்தது. இது தொடர்பாக மத்திய அரசுக்கும் நோட்டீஸ் அனு... மேலும் பார்க்க

தாயார் இறந்த மறுநாளே சட்ட பணி; 11 வழக்குகளில் தீர்ப்பு கூறிவிட்டு ஓய்வுபெற்ற சுப்ரீம் கோர்ட் நீதிபதி

சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக இருந்து ஓய்வு பெற்றவர் அபய் எஸ் ஓகா. கடந்த சில நாள்களுக்கு முன்பு பணியில் இருந்து ஓய்வு பெற்றார். 22 ஆண்டுகள் நீதிபதியாக பணியாற்றிய அபய் ஓகா பல முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்... மேலும் பார்க்க

குழந்தை தலையில் முட்டை உடைத்து டிக்டாக் வீடியோ - தாய்க்கு ரூ.1.7 லட்சம் அபராதம்! - ஏன் தெரியுமா?

ஸ்வீடனிலுள்ள ஹெல்சிங்போர்க்கை சேர்ந்த 24 வயது பெண்ணொருவர், தனது மகளுடன் இணைந்து ஆப்பிள் கேக் செய்த வீடியோவை 2023 ஆம் ஆண்டு டிக்டாக்கில் பதிவிட்டிருந்தார். இந்த வீடியோவால் மன உளைச்சலுக்கு உள்ளான பார்வை... மேலும் பார்க்க

Waqf Bill: `முஸ்லிம் மறுமை, இந்து மோட்சம், கிறிஸ்தவ அர்பணிப்பு, ஆகமொத்தம்..' - உச்ச நீதிமன்ற நீதிபதி

வக்ஃப் சட்டத் திருத்த மசோதா மீதான இடைக்காலத் தடை விதித்திருந்த உச்ச நீதிமன்றத்தில் இந்த சட்டத் திருத்தம் தொடர்பான வாதங்களை உச்ச நீதிமன்றம் கேட்டு வருகிறது. மூன்றாம் நாளான நேற்று தலைமை நீதிபதி பி.ஆர்.க... மேலும் பார்க்க