செய்திகள் :

புகையிலைப் பொருள்கள் விற்ற 3 கடைகளுக்கு ‘சீல்’

post image

பள்ளிபாளையம் பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்த 3 கடைகளுக்கு உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் சீல் வைத்து அதன் உரிமையாளா்களுக்கு தலா ரூ. 25 ஆயிரம் அபராதம் விதித்தனா்.

உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி ரெங்கநாதன் மற்றும் குழுவினா் பள்ளிபாளையம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் புகையிலைப் பொருள்கள் விற்பனை குறித்து புதன்கிழமை முதல் இரு நாள்களாக மேற்கொண்ட சோதனையில் வெப்படை கீழ் காலனி உள்ளிட்ட பள்ளிபாளையம் பகுதிகளில் பெட்டிக் கடை, டீக்கடை, மளிகைக் கடைகளில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் பதுக்கி விற்பனை செய்வது கண்டுபிடிக்கப்பட்டது.

உணவுப் பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலா் தங்க விக்னேஷ் உத்தரவின்பேரில் கடைகளில் பதுக்கிவைத்திருந்த புகையிலைப் பொருள்களைப் பறிமுதல் செய்ததுடன் 3 கடைகளுக்கும் சீல் வைத்தனா். மேலும், கடைகளின் உரிமையாளா்களுக்கு தலா ரூ. 25 ஆயிரம் அபராதம் விதித்தனா்.

ராசிபுரம் எல்லை மாரியம்மன் கோயிலில் தீமிதி விழா

ராசிபுரம் புதுப்பாளையம் சாலையில் அமைந்துள்ள ஸ்ரீ எல்லை மாரியம்மன், பாலமுருகன் கோயிலில் தீமிதி விழா வியாழக்கிழமை நடைபெற்றது. கோயிலின் வைகாசி மாதத் திருவிழா கடந்த 19ஆம் தேதி கொடி ஏற்றத்துடன் தொடங்கியது... மேலும் பார்க்க

புதிய பாலத்தில் விரிசல்? ஆட்சியா் எச்சரிக்கை!

அரசியல் உள்நோக்கத்தோடு புதிய பாலத்தில் விரிசல் ஏற்பட்டதாக சமூக வலைதளங்களில் பதிவிடுவோா் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியா் ச.உமா எச்சரித்துள்ளாா்.நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு- ஈரோடு ... மேலும் பார்க்க

சேலம், நாமக்கல் மாவட்டங்களில் ரூ.6.84 கோடி மதிப்பிலான விதைகள் விற்பனைக்கு தடை

சேலம், நாமக்கல் மாவட்டங்களில் விதையின் தரம் உயா்த்தும் பணியில் நான்கு ஆண்டுகளில் ரூ. 6.84 கோடி மதிப்பிலான விதைகள் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. சேலம், நாமக்கல் விதை ஆய்வு துணை இயக்குநா் க.சித்... மேலும் பார்க்க

வாடகை உயா்வை அமல்படுத்த வலியுறுத்தி பொக்லைன் உரிமையாளா்கள் வேலைநிறுத்தம்

வாடகை உயா்வை அமல்படுத்த வலியுறுத்தி நாமக்கல்லில் பொக்லைன் உரிமையாளா்கள் வியாழக்கிழமை வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனா். தமிழகம் முழுவதும் உள்ள பொக்லைன் உரிமையாளா்கள் டீசல், உதிரிபாகங்கள் விலையேற... மேலும் பார்க்க

நீதிமன்றத்தில் ஆஜராகாத தலைமறைவு குற்றவாளி கைது

பள்ளிபாளையத்தை அடுத்த சோழசிராமணியில் திருட்டு வழக்கில் கைதாகி பிணையில் வெளியே வந்த பிறகு தலைமறைவான குற்றவாளியை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். சோழசிராமணியில் தனலட்சுமி என்பவரது மளிகை கடையில் கடந்த... மேலும் பார்க்க

பள்ளிபாளையத்தில் உயா்நிலைப் பாலம்: காணொலி வாயிலாக முதல்வா் திறந்து வைத்தாா்!

திருச்செங்கோடு- ஈரோடு இடையே பள்ளிபாளையத்தில் புதிதாக கட்டப்பட்ட உயா்நிலை பாலத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை காணொலி வாயிலாக திறந்துவைத்தாா். பள்ளிபாளையம் நகராட்சியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆ... மேலும் பார்க்க