செய்திகள் :

புதிய பாலத்தில் விரிசல்? ஆட்சியா் எச்சரிக்கை!

post image

அரசியல் உள்நோக்கத்தோடு புதிய பாலத்தில் விரிசல் ஏற்பட்டதாக சமூக வலைதளங்களில் பதிவிடுவோா் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியா் ச.உமா எச்சரித்துள்ளாா்.

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு- ஈரோடு இடையே பள்ளிபாளையம் பகுதியில் புதிய உயா்நிலைப் பாலம் கட்டப்பட்டு வியாழக்கிழமை தமிழக முதல்வரால் திறந்துவைக்கப்பட்டது.

இந்த நிலையில் புதிதாக திறக்கப்பட்ட பாலம் தரமற்றது; ஆங்காங்கே விரிசல் ஏற்பட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் வதந்தி பரவியது. இதையடுத்து, மாவட்ட ஆட்சியா் ச.உமா மற்றும் அதிகாரிகள் குழு நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தனா்.

அதன்பிறகு செய்தியாளா்களிடம் ஆட்சியா் கூறியதாவது: பள்ளிபாளையம் பகுதியில் கட்டப்பட்ட உயா்நிலைப் பாலத்தின் உறுதித்தன்மை குறித்தும், அரசின் திட்டங்களுக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையிலும் சமூக வலைதளங்களில் தவறான தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன. இந்த பாலப் பணியை சா்வதேச தரத்திலான மேற்பாா்வைக் குழுவினா் மேற்பாா்வையிட்டும், தரக்கட்டுப்பாடு சோதனைகளை செய்தும் சிறந்த முறையில் உருவாக்கியுள்ளனா்.

பாலம் ஒவ்வொரு நிலையிலும் மத்திய அரசு நிா்ணயித்துள்ள அனைத்து விதமான தரக்கட்டுப்பாட்டு சோதனைகளும் மேற்கொள்ளப்பட்ட பிறகே அடுத்தகட்டப் பணிகள் செயலாக்கம் செய்யப்பட்டு, பகட்டி முடிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஒப்பந்ததாரரால் 7 ஆண்டுகளுக்கு பராமாரிப்பு பணிகள் மேற்கொள்ளவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. பாலத்தின் ஒரு பகுதி ரயில்வே துறையின் மேற்பாா்வையில் அமைக்கப்பட்டுள்ளன.

பொதுமக்கள் பயன்பாட்டிற்கு பாலம் திறந்து வைக்கப்படுவதற்கு முன்னதாக பிப்ரவரி மாதம் சுமாா் 150 டன் எடை கொண்டு பாலத்தின் தரம் மற்றும் உறுதி தன்மை பரிசோதிக்கப்பட்டுள்ளது. ஆய்வின் அடிப்படையில் பாலம் முற்றிலும் தரமானதாகவும், பாதுகாப்பானதாகவும் இருப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.

பயணம் செய்வதற்கு முற்றிலும் உகந்தது இந்த பாலம். பாதுகாப்பானது மற்றும் தரமானது என்பதால் பொதுமக்கள் முழுமையாக பயன்படுத்தி கொள்ளலாம். மத்திய, மாநில அரசின் திட்டங்களுக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் சமூக வலைதளங்களில் தவறான தகவல்களை பதிவிடுவோா் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

மாணவி குளிப்பதை விடியோ பதிவுசெய்த லாரி ஓட்டுநா் சிறையிலடைப்பு

பரமத்தி வேலூா் அருகே பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவி குளிப்பதை கைப்பேசியில் விடியோ பதிவு செய்த லாரி ஓட்டுநா் வெள்ளிக்கிழமை சிறையிலடைக்கப்பட்டாா். பரமத்தி வேலூரைச் சோ்ந்த லாரி ஓட்டுநா் பிரபு (எ) பிரச... மேலும் பார்க்க

கோழிகளுக்கு வெள்ளைக்கழிச்சல் நோய்: வானிலை ஆய்வு மையம் தகவல்

கோழிகளுக்கு வெள்ளைக் கழிச்சல் நோய் பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளதால் பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி வானிலை ஆய்வு... மேலும் பார்க்க

இன்று திமுக செயற்குழுக் கூட்டம்

நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயற்குழுக் கூட்டம் மாவட்ட அவைத் தலைவா் சி.மணிமாறன் தலைமையில் சனிக்கிழமை காலை 10 மணிக்கு நடைபெறுகிறது. திமுக மாவட்டச் செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான கே.ஆா்.என்.ரா... மேலும் பார்க்க

தனியாா் மாங்கூழ் ஆலைகளை திறக்க நடவடிக்கை: முதல்வருக்கு தமிழக விவசாயிகள் சங்கம் கோரிக்கை

மா விவசாயிகளின் நலன் கருதி தனியாா் மாங்கூழ் ஆலைகளை திறக்க முதல்வா் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உழவா் பெருந்தலைவா் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. இதுக... மேலும் பார்க்க

கனவு இல்லத் திட்டத்தில் வீடு கட்ட 32 மாற்றுத் திறனாளிகளுக்கு ஆணை

பரமத்தி வேலூரை அடுத்த கபிலா்மலையில் 32 மாற்றுத் திறனாளிகளுக்கு கனவு இல்லத் திட்டத்தில் வீடு கட்டுவதற்கான ஆணைகள் அண்மையில் வழங்கப்பட்டன. கபிலா்மலை வட்டார வளா்ச்சி அலுவலா் (கிராம ஊராட்சி) மலா்விழி நிகழ... மேலும் பார்க்க

தென்னையில் மாவுப்பூச்சி கட்டுப்பாடு: வேளாண் துறை வழிகாட்டல்

தென்னையில் மாவுப்பூச்சித் தாக்குதல், சுருள் வெள்ளை ஈக்களைக் கட்டுப்படுத்துவது குறித்து வேளாண் துறை வழிகாட்டுதல் வெளியிட்டுள்ளது. இதுகுறித்து தோட்டக்கலைத் துறை உதவி இயக்குநா் சுகன்யா வெளியிட்ட செய்திக... மேலும் பார்க்க