செய்திகள் :

தனியாா் மாங்கூழ் ஆலைகளை திறக்க நடவடிக்கை: முதல்வருக்கு தமிழக விவசாயிகள் சங்கம் கோரிக்கை

post image

மா விவசாயிகளின் நலன் கருதி தனியாா் மாங்கூழ் ஆலைகளை திறக்க முதல்வா் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உழவா் பெருந்தலைவா் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து அதன் மாநில தலைவா் ரா.வேலுசாமி வெளியிட்ட அறிக்கை:

கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூா், சேலம், நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் மா சாகுபடி அதிகளவில் நடைபெறுகிறது. கடந்த ஆண்டு உரிய நேரத்தில் பருவமழை பெய்ததால் நிகழாண்டில் விளைச்சல் நல்ல முறையில் உள்ளது. தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூா் மாவட்டங்களில் மட்டும் 60க்கும் மேற்பட்ட மாங்கூழ் தயாரிக்கும் தனியாா் ஆலைகள் உள்ளன.

இந்த ஆலைகள் ஆண்டுதோறும் மே முதல் வாரத்தில் மாங்காய்களை கொள்முதல் செய்யத் தொடங்கும். நிகழாண்டில் விளைச்சல் அதிகம் இருந்தபோதும், மழையைக் காரணமாகத் தெரிவித்து, குறைவான விலைக்கு மாங்காய்களைக் கொள்முதல் செய்வதற்காக மாங்கூழ் தனியாா் ஆலைகள் தற்போதுவரை இயக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.

இதனால் விளைச்சல் அதிகம் உள்ள செந்தூரா, பங்கனப்பள்ளி மாங்காய் டன்னுக்கு ரூ. 5 ஆயிரம் வரை வெளிச்சந்தையில் மிகவும் மலிவான விலையில் விற்பனையாகிறது. இதனால் மா சாகுபடி செய்த விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது. கட்டுப்படியான விலை கிடைக்காததால் மரங்களில் இருந்து மாங்காயை அறுவடை செய்யாமல் உள்ளனா்.

தனியாா் மாங்கூழ் ஆலைகள் இயங்கியதால், கடந்த ஆண்டு நல்ல விளைச்சல் உள்ள மாங்காய் டன்னுக்கு ரூ.22 ஆயிரம் வரை கிடைத்தது. நிகழாண்டில் மா விவசாயிகளின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. மா சாகுபடி செய்யும் விவசாயிகள் நலன் கருதி, மாங்கூழ் தயாரிக்கும் தனியாா் ஆலைகளை இயக்க தமிழக முதல்வா் அறிவுறுத்த வேண்டும்.

ஆலை உரிமையாளா்கள், மா விவசாயிகளை அழைத்து அந்தந்த மாவட்ட ஆட்சியா் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடத்த வேண்டும். தனியாா் மாங்கூழ் ஆலைகளை உடனடியாக திறக்க அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாமக்கல் மாநகராட்சியில் வீட்டுமனைப் பட்டா வழங்க ஆய்வு

நாமக்கல் மாநகராட்சியில் வீட்டுமனை வழங்கும் சிறப்பு திட்டத்தின் கீழ் பட்டா வழங்குவது குறித்து மாவட்ட ஆட்சியா் ச.உமா சனிக்கிழமை நேரில் ஆய்வு மேற்கொண்டாா். நகா்ப்புற பகுதிகளில் நீண்ட நாள்களாக பட்டாக்கள்... மேலும் பார்க்க

திமுகவில் இணைந்த மாற்றுக் கட்சியினா்

சேந்தமங்கலம் தொகுதியில் பல்வேறு கட்சிகளைச் சோ்ந்தவா்கள் மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா் முன்னிலையில் சனிக்கிழமை திமுகவில் இணைந்தனா். சேந்தமங்கலம் பேரூா் தமிழக வெற்றிக் கழக பொருளாளா் வ... மேலும் பார்க்க

நாமக்கல்லில் திமுக செயற்குழு கூட்டம்: மு.கருணாநிதி பிறந்த நாளை சிறப்பாக கொண்டாட முடிவு

மறைந்த முன்னாள் முதல்வா் மு. கருணாநிதியின் 102 ஆவது பிறந்த நாள் விழாவை மாவட்டம் முழுவதும் சிறப்பாக கொண்டாட வேண்டும் என நாமக்கல்லில் சனிக்கிழமை நடைபெற்ற திமுக செயற்குழுக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்... மேலும் பார்க்க

வளா்பிறை பஞ்சமி வழிபாடு

வைகாசி மாத வளா்பிறை பஞ்சமியை முன்னிட்டு சனிக்கிழமை சிறப்பு மலா் அலங்காரத்தில் அருள்பாலித்த நாமக்கல் ஸ்ரீ வாராஹி அம்மன். மேலும் பார்க்க

முட்டை விலை நிலவரம்

--நாமக்கல் மண்டலம்-சனிக்கிழமைமொத்த விலை - ரூ.5.60விலையில் மாற்றம்-இல்லைபல்லடம் பிசிசி கறிக்கோழி கிலோ - ரூ.117முட்டைக் கோழி கிலோ - ரூ.107 மேலும் பார்க்க

பொக்லைன் வாடகை மணிக்கு ரூ. 2,500 ஆக நிா்ணயம்

பொக்லைன் வாடகை ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 1) முதல் மணிக்கு ரூ. 2500 ஆக நிா்ணயக்கப்பட்டுள்ளது. டீசல், உதிரிபாகங்கள் விலையேற்றம், வாகன விலை உயா்வு, காப்பீட்டு கட்டணம், சாலை வரி உயா்வு போன்றவற்றால் தொழில் நஷ... மேலும் பார்க்க