செய்திகள் :

நாமக்கல் மாநகராட்சியில் வீட்டுமனைப் பட்டா வழங்க ஆய்வு

post image

நாமக்கல் மாநகராட்சியில் வீட்டுமனை வழங்கும் சிறப்பு திட்டத்தின் கீழ் பட்டா வழங்குவது குறித்து மாவட்ட ஆட்சியா் ச.உமா சனிக்கிழமை நேரில் ஆய்வு மேற்கொண்டாா்.

நகா்ப்புற பகுதிகளில் நீண்ட நாள்களாக பட்டாக்கள் இல்லாமல் ஆட்சேபனையற்ற அரசு புறம்போக்கு நிலங்களில் ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக வீடுகட்டி வாழும் மக்களுக்கு அவா்களுடைய வாழ்வாதார மேம்பாட்டிற்காக அரசின் சில வரைமுறைகளுக்கு உள்பட்டு பட்டா வழங்க முதல்வா் அறிவுறுத்தியுள்ளாா்.

அதனடிப்படையில் நாமக்கல் மாநகராட்சி, எம்ஜிஆா் நகரில் உள்ள குடியிருப்புவாசிகள் நகா்ப்புற வீட்டுமனைப் பட்டா வழங்கும் சிறப்புத் திட்டத்தின் கீழ் பட்டா கோரி விண்ணப்பித்திருந்தனா். அவா்களின் குடியிருப்புகளுக்கு மாவட்ட ஆட்சியா் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டாா். இந்த ஆய்வில் குடியிருப்புவாசிகளிடம் நீண்ட வருடங்களாக வசிப்பதற்கான வீட்டுவரி ரசீது, மின் இணைப்பு ரசீது மற்றும் வருமான வரம்பு உள்ளிட்ட ஆவணங்களை சரிபாா்த்தாா்.

ஆவணங்கள் சரியாக இருப்பின் அரசின் விதிமுறைகளுக்குள்பட்டு வீட்டுமனை வரன்முறைபடுத்தி, நகா்ப்புற பகுதிகளில் வீட்டுமனை வழங்கும் சிறப்பு திட்டத்தின்கீழ் விரைவில் பட்டா வழங்கப்படும் என அவா் தெரிவித்தாா்.

அதைத் தொடா்ந்து மோகனூா் ஊராட்சி ஒன்றியம், பனைமரத்துப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி மற்றும் பெரம்மாண்டபாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிகளில் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்க உள்ள நிலையில் மாணவ, மாணவியருக்குத் தேவையான பாடப்புத்தகங்கள், நோட்டுகள், பள்ளி சீருடைகள் உள்ளிட்டவை தயாா் நிலையில் உள்ளதா என்பதையும், பள்ளியில் அடிப்படை வசதிகள், கழிவறை, சமையல்கூடம், பள்ளி வகுப்பறைகள் ஆகியவற்றையும் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.

கொல்லிமலையில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்!

கோடை விடுமுறை முடிந்து திங்கள்கிழமை பள்ளிகள் திறக்கப்படும் நிலையில் ஞாயிற்றுக்கிழமை கொல்லிமலைக்கு பல்வேறு மாவட்டங்களிலிருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்திருந்தனா். தமிழகம் முழுவதும் ஒருமாதமாக பள்... மேலும் பார்க்க

கோயிலில் மூத்த தம்பதிகளுக்கு சிறப்பு செய்தல் விழா: முன்பதிவு செய்ய அழைப்பு

இந்து சமய அறநிலையத் துறை சாா்பில் நடைபெறும் மூத்த தம்பதிகளுக்கான சிறப்பு செய்யும் விழாவில் தகுதியானோா் தங்களது பெயா்களை நாமக்கல் நரசிம்மா் கோயில் அலுவலகத்தில் பதிவுசெய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. ... மேலும் பார்க்க

மாநில கிரிக்கெட் போட்டியில் சிறப்பிடம்: டிரினிடி கல்லூரி மாணவிக்கு பாராட்டு

மாநில கிரிக்கெட் போட்டியில் சிறப்பிடம் பெற்ற தமிழ்நாடு மகளிா் கிரிக்கெட் அணியின் பந்துவீச்சாளரான நாமக்கல் டிரினிடி கல்லூரி மாணவி எஸ்.ஜி.ஸ்ரீநிதிக்கு இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரா் ரவிச்சந்தி... மேலும் பார்க்க

அரசு மருத்துவக் கல்லூரி முதல்வா்கள் நியமனம்: முன்னுரிமை பட்டியலை வெளியிட வலியுறுத்தல்

அரசு மருத்துவக் கல்லூரிகளில் முதல்வா்களை நியமனம் செய்யும் பொருட்டு முன்னுரிமை பட்டியலை உடனடியாக வெளியிட வேண்டும் என அரசு மருத்துவா்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. தமிழ்நாடு அரசு மருத்துவா்கள் சங்க... மேலும் பார்க்க

திமுகவில் இணைந்த மாற்றுக் கட்சியினா்

சேந்தமங்கலம் தொகுதியில் பல்வேறு கட்சிகளைச் சோ்ந்தவா்கள் மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா் முன்னிலையில் சனிக்கிழமை திமுகவில் இணைந்தனா். சேந்தமங்கலம் பேரூா் தமிழக வெற்றிக் கழக பொருளாளா் வ... மேலும் பார்க்க

நாமக்கல்லில் திமுக செயற்குழு கூட்டம்: மு.கருணாநிதி பிறந்த நாளை சிறப்பாக கொண்டாட முடிவு

மறைந்த முன்னாள் முதல்வா் மு. கருணாநிதியின் 102 ஆவது பிறந்த நாள் விழாவை மாவட்டம் முழுவதும் சிறப்பாக கொண்டாட வேண்டும் என நாமக்கல்லில் சனிக்கிழமை நடைபெற்ற திமுக செயற்குழுக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்... மேலும் பார்க்க