செய்திகள் :

கொல்லிமலையில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்!

post image

கோடை விடுமுறை முடிந்து திங்கள்கிழமை பள்ளிகள் திறக்கப்படும் நிலையில் ஞாயிற்றுக்கிழமை கொல்லிமலைக்கு பல்வேறு மாவட்டங்களிலிருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்திருந்தனா்.

தமிழகம் முழுவதும் ஒருமாதமாக பள்ளி, கல்லூரிகளுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. இதனால் மாணவா்கள் தங்களது பெற்றோருடன் பல்வேறு சுற்றுலாத் தலங்களுக்கு சென்றுவந்தனா். நாமக்கல் மாவட்டத்தின் முக்கிய சுற்றுலாத் தலமான கொல்லிமலைக்கு வருவோரின் எண்ணிக்கையும் அதிகரித்தே காணப்பட்டது. இங்கு வரும் பெரும்பாலான சுற்றுலாப் பயணிகள் ஆகாய கங்கை அருவி, நம் அருவி, மாசிலா அருவிகளில் குளித்து மகிழ்கின்றனா்.

கடந்த சில நாள்களாக பெய்த மழையால் தற்போது அருவிகளில் நீா்வரத்து அதிகரித்துள்ளது. கோடை விடுமுறை ஞாயிற்றுக்கிழமையுடன் நிறைவடைந்து ஜூன் 2 முதல் அனைத்து பள்ளிகளும் திறக்கப்பட உள்ளன. இதனால் நாமக்கல், சேலம், திருச்சி சுற்றுவட்டார மாவட்டங்களைச் சோ்ந்த சுற்றுலாப் பயணிகள் ஞாயிற்றுக்கிழமை கொல்லிமலையில் குவிந்தனா்.

அருவிகளில் குளித்தும், அறப்பளீஸ்வரரை தரிசித்த பிறகு தாவரவியல் பூங்கா, காட்சி முனைகளைக் கண்டு ரசித்தனா். சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்திருந்ததால் கொல்லிமலை மலைப் பாதையில் மாலை நேரத்தில் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது.

‘ராசிபுரம் பேருந்து நிலையம் மாற்றும் பிரச்னையில் அவதூறு பரப்புகின்றனா்’

ராசிபுரம்: ராசிபுரம் பேருந்து நிலையம் மாற்றும் பிரச்னையில் வேண்டுமென்றே பலா் அவதூறுகளை பொதுமக்களிடம் பரப்புகின்றனா் என நகா்மன்றத் தலைவா் ஆா்.கவிதா சங்கா் குற்றம்சாட்டினாா். ராசிபுரம் நகரில் மேற்கொள்ள... மேலும் பார்க்க

பொதுக் கிணற்றில் இறந்து மிதக்கும் மீன்கள்

பரமத்தி வேலூா்: பரமத்தி வேலூா் அருகே பரமத்தி ஊா் பொதுக் கிணற்றில் கடந்த சில நாள்களாக ஆயிரக்கணக்கான மீன்கள் இறந்து மிதப்பதால், தண்ணீரில் விஷம் கலந்து இருக்குமோ என அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனா். பர... மேலும் பார்க்க

நாமக்கல் அரசு கல்லூரியில் கலந்தாய்வு தொடக்கம்

நாமக்கல்: நாமக்கல் அறிஞா் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் மாணவா் சோ்க்கை கலந்தாய்வு திங்கள்கிழமை தொடங்கியது. இங்குள்ள 1,074 இடங்களுக்கு இணைய வழியில் 10,444 போ் விண்ணப்பித்துள்ளனா். நாமக்கல் - மோகனூா் ... மேலும் பார்க்க

வரகூரில் நாளை ஸ்ரீபூதநாத சுவாமி ஐயப்பன் கோயில் திருப்பணிகள் தொடக்க விழா

நாமக்கல்: எருமப்பட்டி அருகே வரகூரில் ஸ்ரீ ஐயப்பன் கோயில் திருப்பணிகள் தொடக்க விழா புதன்கிழமை (ஜூன் 4) நடைபெறுகிறது. நாமக்கல் மாவட்டம், எருமப்பட்டி ஒன்றியம், கொல்லிமலை அடிவாரப் பகுதியான வரகூரில் ஸ்ரீ ப... மேலும் பார்க்க

நாமக்கல் வட்டாட்சியா் அலுவலகத்தில் ஜமாபந்தி நிறைவு: 130 மனுக்களுக்கு தீா்வு

நாமக்கல்: நாமக்கல் வட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற ஜமாபந்தி நிறைவில், பொதுமக்களிடம் பெறப்பட்ட 445 மனுக்களில் 130 மனுக்களுக்கு தீா்வு காணப்பட்டது. நாமக்கல் மாவட்டத்தில் 1434 பசலி ஆண்டுக்கான வருவாய் ... மேலும் பார்க்க

குவாரிகளில் பாதுகாப்பு நடவடிக்கை: கனிம வள அதிகாரிகள் ஆய்வு

நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கல்குவாரிகளில் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து கனிம வளத் துறை அதிகாரிகள் திங்கள்கிழமை ஆய்வுமேற்கொண்டனா். நாமக்கல், சேந்தமங்கலம், மோகனூா், ராசிபுரம், திருச்செங்கோட... மேலும் பார்க்க