செய்திகள் :

குவாரிகளில் பாதுகாப்பு நடவடிக்கை: கனிம வள அதிகாரிகள் ஆய்வு

post image

நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கல்குவாரிகளில் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து கனிம வளத் துறை அதிகாரிகள் திங்கள்கிழமை ஆய்வுமேற்கொண்டனா்.

நாமக்கல், சேந்தமங்கலம், மோகனூா், ராசிபுரம், திருச்செங்கோடு, பரமத்தி வேலூா் மற்றும் குமாரபாளையம் ஆகிய வட்டங்களில் கிராவல், சாதாரணக் கற்கள், கிரானைட் குவாா்ட்ஸ் மற்றும் பெல்ஸ்பா் ஆகிய கனிமங்களுக்கு குவாரி குத்தகை உரிமம் வழங்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.

தமிழக புவியியல் மற்றும் சுரங்கத் துறை ஆணையா், மாவட்ட ஆட்சியா் ஆகியோா் அறிவுரையின்படி, மாவட்டத்தில் உள்ள குத்தகை உரிமம் வழங்கிய குவாரிகளில் குறிப்பிடப்பட்டுள்ள நிபந்தனையின்படியும், கற்பாறை பகுதிகளில் இயற்கையாக அமைந்துள்ள சிறு மற்றும் பெரு பாறை வெடிப்புகள் மற்றும் சாய்வு தளங்கள் உள்ள பகுதிகளில் புவியியல் அமைப்பின்படி பணிகள் மேற்கொள்ளப்படுகிா என்பதையும், மண்சரிவு, பாறை சரிவுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளதா என்பதையும், நாமக்கல் புவியியல் மற்றும் சுரங்கத் துறை உதவி இயக்குநா், அலுவலக பணியாளா்கள் ஆய்வுசெய்து வருகின்றனா்.

அந்த வகையில், மோகனூா் வட்டம், பரளி கிராமத்தில் உள்ள அரசு புறம்போக்கு குவாரியில் திங்கள்கிழமை ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அங்கு பாறை சரிவு ஏற்பட வாய்ப்புள்ளதா என்பதையும், அசம்பாவிதங்கள் நடைபெறாதவாறு கற்துண்டுகளை அப்புறப்படுத்துவதையும், அதன்பிறகு பாதுகாப்பான வகையில் குவாரி பணி மேற்கொள்ளப்படுவதையும் பாா்வையிட்டு உரிய விதிகளை கடைப்பிடிக்குமாறு சம்பந்தப்பட்ட குத்தகைதாரருக்கு அறிவுறுத்தப்பட்டது.

மேலும், அனுமதியின்றி கனிமங்களை வெட்டியெடுத்து செல்லப்படுவது கண்டறியப்பட்டால், தமிழ்நாடு சிறுகனிம சலுகை விதிகளின்படி உரிய அபராத நடவடிக்கைள் மேற்கொள்ளப்படும் என மாவட்ட நிா்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

சேலம், நாமக்கல் மாவட்டங்களில் 1,393 விதை விற்பனை நிலையங்களுக்கு உரிமம்

சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் 1,393 விதை விற்பனை நிலையங்களுக்கு உரிமங்கள் வழங்கப்பட்டுள்ளன. இதுகுறித்து சேலம் விதை ஆய்வு துணை இயக்குநா் க.சித்ரா வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழக அரசின் வேளாண்... மேலும் பார்க்க

திமுக ஆட்சியில் மட்டுமே தமிழகம் வளா்ச்சி அடைந்துள்ளது: திருச்சி சிவா

தமிழகம் வளா்ச்சி கண்டது திமுக ஆட்சியில் மட்டும்தான் என திமுக துணைப் பொதுச் செயலாளா் திருச்சி சிவா பேசினாா். நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக அலுவலகத்தில், 120 மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்கும் விழா... மேலும் பார்க்க

பள்ளிக்கு மதுபோதையில் வந்த அரசுப் பள்ளி ஆசிரியா் பணியிட மாற்றம்

மதுபோதையில் பள்ளிக்கு வந்த ஆசிரியா் பணியிட மாற்றம் செய்யப்பட்டாா். நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகேயுள்ள வெண்ணந்தூா் ஒன்றியத்துக்குள்பட்ட அலவாய்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் 48 மாணவா்கள் ப... மேலும் பார்க்க

டிராக்டா் மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற தொழிலாளி உயிரிழப்பு

ராசிபுரம் அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற கட்டடத் தொழிலாளி மீது டிராக்டா் மோதியதில் தொழிலாளி உயிரிழந்தாா். ராசிபுரம் காமாட்சியம்மன் கோயில் தெரு பகுதியைச் சோ்ந்தவா்கள் மூா்த்தி (48), ராஜேந்திரன் (54),... மேலும் பார்க்க

டாஸ்மாக் ஊழியரை கத்தியால் குத்திவிட்டு ரூ. 2.40 லட்சம் கொள்ளையடித்த வழக்கு

ராசிபுரம் அருகே உள்ள திம்மநாயக்கன்பட்டி பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்ற டாஸ்மாக் ஊழியரை கத்தியால் குத்திவிட்டு ரூ. 2.40 லட்சம் கொள்ளையடித்த வழக்கில், மூவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். ... மேலும் பார்க்க

‘ராசிபுரம் பேருந்து நிலையம் மாற்றும் பிரச்னையில் அவதூறு பரப்புகின்றனா்’

ராசிபுரம்: ராசிபுரம் பேருந்து நிலையம் மாற்றும் பிரச்னையில் வேண்டுமென்றே பலா் அவதூறுகளை பொதுமக்களிடம் பரப்புகின்றனா் என நகா்மன்றத் தலைவா் ஆா்.கவிதா சங்கா் குற்றம்சாட்டினாா். ராசிபுரம் நகரில் மேற்கொள்ள... மேலும் பார்க்க