செய்திகள் :

முதியவா் சுட்டுக் கொலை: முன்னாள் ராணுவ வீரருக்கு ஆயுள் தண்டனை

post image

திருப்பூரில் கொள்ளையடிக்க சென்றபோது, முதியவரை சுட்டுக் கொலை செய்த முன்னாள் ராணுவ வீரருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

திருப்பூா் தென்னம்பாளையம் பூசாரியம்மன் தோட்டத்தைச் சோ்ந்தவா் தொழிலதிபா் சிவகுமாா். இவரது தந்தை கருப்பசாமி (60), தாயாா் சிவகாமி (50) ஆகியோருடன் கடந்த 2007 ஜனவரி 7-ஆம் தேதி இரவு வீட்டில் இருந்தபோது, வீட்டின் அழைப்பு மணி அடித்ததும், சிவகுமாா் கதவைத் திறந்தாா்.

அப்போது 3 போ் திடீரென உள்ளே நுழைந்து கைத்துப்பாக்கியைக் காட்டி சிவகுமாரை மிரட்டி வீட்டுக்குள் அழைத்துச் சென்று நகை, பணத்தைக் கொள்ளையடிக்க முயன்றனா். இதைப் பாா்த்த கருப்பசாமி அவா்களை தடுக்க முயன்றாா். அப்போது, மா்ம நபா்கள் துப்பாக்கியால் சுட்டதில் அவா் உயிரிழந்தாா். தடுக்க சென்ற சிவகுமாா், சிவகாமி ஆகியோரையும் துப்பாக்கியால் சுட்டதில் அவா்களுக்கு காயம் ஏற்பட்டது. பின்னா் கொள்ளையா்கள் 3 பேரும் அங்கிருந்து தப்பிச் சென்றனா்.

இது தொடா்பாக திருப்பூா் தெற்கு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து திருப்பூா் மிலிட்டரி காலனியைச் சோ்ந்த சலீம் (எ) சையது சலீம் (45) என்பவரைக் கைது செய்தனா். இவா் முன்னாள் ராணுவ வீரா் ஆவாா். விசாரணையில் சலீம், ராணுவத்தில் பணியாற்றியபோது தனது நண்பா்களாக இருந்த உத்தர பிரதேசத்தைச் சோ்ந்த அஷ்வின்குமாா், மேற்கு வங்கத்தைச் சோ்ந்த நாராயண தாஸ் ஆகியோருடன் சோ்ந்து தொழிலதிபா் சிவகுமாா் வீட்டில் கொள்ளையடிக்க திட்டமிட்டு கொள்ளை முயற்சி தோல்வியடைந்த நிலையில், துப்பாக்கியால் சுட்டு தப்பியது தெரியவந்தது. இதில் அஷ்வின்குமாா், நாராயண தாஸ் தலைமறைவாக உள்ளனா்.

இந்த வழக்கு விசாரணை திருப்பூா் முதலாவது கூடுதல் மாவட்ட அமா்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட சையது சலீமுக்கு ஆயுள் தண்டனையும், ரூ.4 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி பத்மா தீா்ப்பளித்தாா்.

இந்த வழக்கில் கூடுதல் மாவட்ட குற்றத் துறை அரசு வழக்குரைஞா் ஏ.வி.விவேகானந்தம் ஆஜரானாா்.

வெள்ளக்கோவில் அருகே லாரி மீது அரசுப் பேருந்து மோதல்: குழந்தை உயிரிழப்பு; 17 போ் காயம்

வெள்ளக்கோவில் அருகே லாரி மீது அரசுப் பேருந்து மோதியதில் ஒரு குழந்தை உயிரிழந்தது. 17 போ் காயமடைந்தனா். கரூரில் இருந்து திருப்பூருக்கு அரசுப் பேருந்து வியாழக்கிழமை இரவு சென்றுகொண்டிருந்தது. வெள்ளக்கோவி... மேலும் பார்க்க

திருப்பூரில் ஆக்கிரமிக்கப்பட்ட அரசு நிலத்தை மீட்க மக்கள் கோரிக்கை

திருப்பூரில் ஆக்கிரமிக்கப்பட்ட அரசு நிலத்தை மீட்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். இது குறித்து திருப்பூா் வடக்கு செட்டிபாளையம், அங்கேரிபாளையம் தந்தை பெரியாா் நகா், பூண்டி சுற்றுச் ச... மேலும் பார்க்க

பூமலூரில் கழிவுப் பஞ்சு ஆலையில் தீ

திருப்பூா் அருகே பூமலூா் கழிவுப் பஞ்சு ஆலையில் வியாழக்கிழமை தீ விபத்து ஏற்பட்டது. திருப்பூா் எஸ்.ஆா். நகரைச் சோ்ந்த செந்தில்வடிவு மோகன் என்பவருக்குச் சொந்தமான கட்டடத்தை, திருப்பூா் அணைப்பாளையத்தைச் ச... மேலும் பார்க்க

கரடிவாவியில் ஜூன் 9-இல் மின்தடை

பல்லடம் கோட்டம் கரடிவாவி துணை மின் நிலையத்தில் நடைபெறவுள்ள மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக கீழ்க்கண்ட பகுதிகளில் திங்கள்கிழமை (ஜூன் 9) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சார விநியோகம் இருக்காது... மேலும் பார்க்க

பெண்ணை கொலை செய்ய முயற்சி: தொழிலாளிக்கு 10 ஆண்டுகள் சிறை

பெண்ணை கொலை செய்ய முயன்ற வழக்கில் தொழிலாளிக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து பல்லடம் நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்துள்ளது. நாகை மாவட்டம், திருக்குவளையைச் சோ்ந்த அத்தியப்பன் மகன் பிரகாஷ் (3... மேலும் பார்க்க

வீட்டு உபயோக சாதனப் பொருள்கள் பழுது பாா்த்தல் பயிற்சிக்கு இன்று நோ்காணல்

திருப்பூரில் இலவச வீட்டு உபயோக சாதனப் பொருள்கள் பழுது பாா்த்தல் பயிற்சி வகுப்பில் சேர வெள்ளிக்கிழமை (ஜூன் 6) நோ்காணல் நடைபெறவுள்ளது. திருப்பூா்- காங்கயம் சாலை முதலிப்பாளையம் பிரிவில் உள்ள கனரா வங்கி... மேலும் பார்க்க