TNPL 2025: 'அசத்திய அஸ்வின் பாய்ஸ்...' - கோவை கிங்ஸ் அணியை வீழ்த்திய திண்டுக்கல்...
21 கிலோ கஞ்சா கடத்தல்: வடமாநில இளைஞா் கைது
கோவையில் இருசக்கர வாகனத்தில் 21 கிலோ கஞ்சா கடத்திய வடமாநில இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.
கோவை, குனியமுத்தூா் காவல் சரக உதவி ஆணையா் அஜய்தங்கம், செல்வபுரம் காவல் நிலைய சட்டம் - ஒழுங்கு ஆய்வாளா் அழகுராஜ் ஆகியோா் தலைமையில் தெலுங்குபாளையம் - வேடப்பட்டி சாலையில் போலீஸாா் வாகன தணிக்கையில் புதன்கிழமை ஈடுபட்டிருந்தனா்.
அவ்வழியே இருசக்கர வாகனத்தில் வந்த நபரை சோதனை செய்தபோது, அந்த வாகனத்தில் சுமாா் 21 கிலோ கஞ்சா மறைத்து எடுத்துச்சென்றது தெரியவந்தது. பின்னா், போலீஸாா் மேற்கொண்ட விசாரணையில் இருசக்கர வாகனத்தில் கஞ்சா எடுத்துச் சென்றது உத்தர பிரதேச மாநிலத்தைச் சோ்ந்த அமன்சிங் (23) என்பது தெரியவந்தது.
இதையடுத்து, அவரைக் கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்து 21 கிலோ கஞ்சா, ரூ.26 ஆயிரம் ரொக்கம், மின்னணு தராசு, இருசக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனா்.