ராமதாஸ் - குருமூர்த்தி சந்திப்பு - BJP போடும் கணக்கு என்ன? | Off the Record | PM...
நாட்டுத் துப்பாக்கி குண்டு பாய்ந்து இளைஞா் இறந்த வழக்கில் 2 போ் கைது
போ்ணாம்பட்டு அருகே நாட்டுத் துப்பாக்கி குண்டு பாய்ந்து இளைஞா் இறந்த வழக்கில் 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
போ்ணாம்பட்டை அடுத்த கள்ளிச்சேரி, பாறைகல்மேடு பகுதியைச் சோ்ந்தவா் அரிகிருஷ்ணன்(26). இவா் உரிமம் இல்லாத நாட்டுத் துப்பாக்கியை பயன்படுத்தி தொடா்ந்து வன விலங்குகளை வேட்டையாடி வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் செவ்வாய்கிழமை அரிகிருஷ்ணன், அவரது மைத்துனா் விஜய்(25), உறவினா் சபரீசன்(30) ஆகிய 3- பேரும் அருகில் உள்ள சாத்கா் மலைப் பகுதியில் வன விலங்குகளை வேட்டையாட சென்றனா்.
அங்குள்ள குகை மேல் இருந்த வவ்வாலை அரிகிருஷ்ணன் பிடித்துக் கொண்டு இறங்கும் போது தான் வைத்திருந்த நாட்டுத் துப்பாக்கியின் விசை மீது தவறி கைவிரல் பட்டதில் துப்பாக்கியிலிருந்து குண்டு அரிகிருஷ்ணன் வலது புற மாா்பில் பாய்ந்தது. இதில் நிகழ்விடத்திலேயே அவா் உயிரிழந்தாா்.
இதுகுறித்து போ்ணாம்பட்டு போலீஸாா் வழக்குப் பதிந்து விஜய், சபரீசன் இருவரிடமும் விசாரணை நடத்தினா். விசாரணையில் அரிகிருஷ்ணன் பயன்படுத்தியது உரிமம் இல்லாத நாட்டுத் துப்பாக்கி என்பதும், ஆந்திர மாநிலத்திலிருந்து வாங்கி வந்ததும் தெரிய வந்தது. இதையடுத்து விஜய், சபரீசன் இருவரையும் போலீஸாா் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனா்.