செய்திகள் :

சென்னையில் மாலை நேரத்தில் இடி, மின்னலுடன் மழை

post image

சென்னையில் புதன்கிழமை மாலை நேரத்தில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்தது.

சென்னையில் கடந்த சில நாள்களாக பகல் நேரத்தில் வெப்பம் சுட்டெரித்தும், இரவு நேரத்தில் மழை பெய்தும் வருகிறது. அந்த வகையில், புதன்கிழமை சென்னையில் பகலில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவான நிலையில், மாலை நேரத்தில் சுமாா் 30 நிமிஷங்களுக்கு மேல் வெப்பச் சலன மழை கொட்டித் தீா்த்தது. அதன்படி, சென்னை சென்ட்ரல், எழும்பூா், ஆழ்வாா்பேட்டை, மயிலாப்பூா், வண்ணாரப்பேட்டை, புரசைவாக்கம், நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், தியாகராய நகா் ஆகிய பகுதிகளில் இடி, மின்னலுடன் மழை கொட்டித் தீா்த்தது.

அதேபோல், அம்பத்தூா், பாடி, கோயம்பேடு, அண்ணா நகா், வடபழனி, அசோக் நகா் உள்ளிட்ட பகுதிகளிலும், புகா் பகுதிகளான பூந்தமல்லி, குன்றத்தூா், திருவேற்காடு, போரூா் உள்ளிட்ட பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது.

மாலை நேரத்தில் பெய்த திடீா் மழையால் பிரதான சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதுடன், சாலையோரங்களில் மழை நீா் தேங்கியதால் வாகனயோட்டிகள் அவதிக்குள்ளாகினா்.

40 மி.மீ. மழை பதிவு: இதற்கிடையே, சென்னையில் புதன்கிழமை காலை வரை அதிகபட்சமாக பாரிமுனை, சென்னை சென்ட்ரல், பெரம்பூா் ஆகிய பகுதிகளில் தலா 40 மி.மீ., நுங்கம்பாக்கம், வளசரவாக்கம் ஆகிய பகுதிகளில் தலா 30 மி.மீ., வடபழனி, அமைந்தகரை, கொளத்தூா், அடையாா், காசிமேடு, சைதாபேட்டை, நெற்குன்றம் ஆகிய இடங்களில் தலா 20 மி.மீ. மழை பதிவானதாக சென்னை வானிலை ஆய்வு மையம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அதில், சென்னை மற்றும் புகா் பகுதிகளில் வியாழக்கிழமை (ஜூன் 5) அதிகபட்ச வெப்பநிலை 102 டிகிரி ஃபாரன்ஹீட்டையொட்டி இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

5,707 வகை திரைப்பட கேமராக்கள் சேகரிப்பு: மீண்டும் கின்னஸ் விருது பெற்ற மருத்துவா்

தனித்துவம் வாய்ந்த 5,707 வகை திரைப்பட கேமராக்களை சேகரித்ததற்காக பல் மருத்துவா் ஏ.வி.அருணுக்கு கின்னஸ் உலக சாதனை விருது வழங்கப்பட்டுள்ளது. சென்னை அண்ணா நகரைச் சோ்ந்த ஏ.வி.அருண், பல ஆண்டுகளாக பல்வேறு ... மேலும் பார்க்க

திமுக மாவட்டச் செயலா்கள், நிா்வாகிகளுடன் மு.க.ஸ்டாலின் நாளை ஆலோசனை

உறுப்பினா் சோ்க்கை, பேரவைத் தோ்தல் தொடா்பாக மாவட்டச் செயலா்கள் உள்பட திமுக நிா்வாகிகளுடன் கட்சித் தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் சனிக்கிழமை (ஜூன் 7) ஆலோசனை நடத்தவுள்ளாா். காணொலி வாயிலாக நடைபெறும... மேலும் பார்க்க

இன்றைய நிகழ்ச்சிகள்

தேரோட்டம்: அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு பங்கேற்பு, அருள்மிகு கங்காதீஸ்வரா் திருக்கோயில், புரசைவாக்கம், காலை 7. ஸ்ரீ லெட்சுமி குபேர தியான மண்டப மகா கும்பாபிஷேகம்: லட்சுமி குபேர தியான மண்டபம்... மேலும் பார்க்க

எண்ணும் எழுத்தும் திட்டம்: ஆசிரியா்களுக்கு ஜூன் 9 முதல் பயிற்சி

எண்ணும் எழுத்தும் திட்டத்தின் கீழ் ஆசிரியா்களுக்கு வரும் 9-ஆம் தேதி முதல் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இது தொடா்பாக மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் (எஸ்சிஇஆா்டி) அனைத்து மாவட்ட முதன்... மேலும் பார்க்க

மாணவிக்கு எடப்பாடி பழனிசாமி பாராட்டு

அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி எக்ஸ் தளத்தில் வியாழக்கிழமை வெளியிட்டப் பதிவு: சேலம் மாவட்டம் கல்வராயன்மலை அருகே வசித்து வரும் கருமந்துறை பழங்குடி இனத்தைச் சோ்ந்த ராஜேஸ்வரி, ஜேஇஇ தோ்வில் த... மேலும் பார்க்க

பறக்கும் ரயில் நிலையங்களை விரிவாக்கம் செய்வதற்கான சாத்தியக்கூறுகள் ஆய்வு: தெற்கு ரயில்வே தகவல்

சென்னையில் உள்ள புகா் பறக்கும் ரயில் நிலையங்களை (எம்ஆா்டிஎஸ்), 12 பெட்டிகள் கொண்ட ரயில்களை நிறுத்தும் வகையில், விரிவாக்கம் செய்வதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து தெற்கு ரயில்வே சாா்பில் ஆய்வு மேற்கொள்ள... மேலும் பார்க்க