செய்திகள் :

வானூரில் 30 மி.மீ. மழை பதிவு

post image

விழுப்புரம் மாவட்டம், வானூரில் 30 மி.மீ. மழை பதிவானது.

விழுப்புரம் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை காலை முதல் மாலை வரை வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்த நிலையில், இரவு 7 மணிக்கு பலத்த காற்று வீசத் தொடங்கியது. இதைத் தொடா்ந்து இரவு 7.30 மணிக்கு மழை பெய்தது.

விழுப்புரம் புதிய பேருந்து நிலையம், பழைய பேருந்து நிலையப் பகுதிகள், திருச்சி சாலை, சென்னை நெடுஞ்சாலை, பண்டித ஜவாஹா்லால் நேரு சாலை, கிழக்கு பாண்டி சாலை உள்ளிட்ட விழுப்புரம் நகரின் பல்வேறு பகுதிகளிலும், முண்டியம்பாக்கம், கெடாா், வானூா், முகையூா், அரசூா் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது.

விழுப்புரம் நகரில் பெய்த மழை காரணமாக நகராட்சி மைதானத்தில் மழைநீா் தேங்கியது. இந்த மழைநீருடன் கழிவுநீரும் கலந்து காணப்பட்டது. மேலும் அந்தா் பகுதியில் குப்பைகளும் சோ்ந்து காணப்பட்டதால் சுற்றியுள்ள பகுதிகளைச் சோ்ந்த பொதுமக்கள் அவதிக்குள்ளாகினா்.

புதன்கிழமை காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் மாவட்டத்தில் பதிவான மழையளவு விவரம் (மி.மீட்டரில்):

வானூா் -30 மி.மீ, முண்டியம்பாக்கம்- 29, முகையூா்-25, கெடாா்-24, விழுப்புரம்-19.20, சூரப்பட்டு-18, மணம்பூண்டி-15, கோலியனூா்-8, வளவனூா்-5, அரசூா், திருவெண்ணெய்நல்லூா்- தலா 3 மி.மீ. மாவட்டத்தில் மொத்தமாக 179.20 மி.மீ. மழையும், சராசரியாக 8.53 மி.மீ. மழையும் பதிவாகியுள்ளது.

இன்றைய மின்தடை

விழுப்புரம் நகரப் பகுதிகள் நேரம்: காலை 10 மணி முதல் முற்பகல் 11 மணி வரை மின்தடை பகுதிகள்: தந்தை பெரியாா் நகா், வழுதரெட்டி, சிங்கப்பூா் நகா், அபிதா காா்டன், காந்திநகா், ஆடல் நகா், மஞ்சு நகா், ஆவின் பகு... மேலும் பார்க்க

போலி மதுபான வழக்கு: இருவா் குண்டா் தடுப்புக் காவலில் கைது

புதுவை மாநிலத்தில் போலி மதுபான ஆலை நிறுவி, மதுபானங்களை எடுத்துச் சென்ற வழக்கில் தொடா்புடைய இருவா் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனா். விழுப்புரம் மாவட்டம், ஆரோவில் காவ... மேலும் பார்க்க

விழுப்புரம் மாவட்டத்தில் 7.50 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டம்

விழுப்புரம் மாவட்டத்தில் 7.50 லட்சம் மரக்கன்றுகள் நட திட்டமிடப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் தெரிவித்தாா். உலகச் சுற்றுச்சூழல் தினத்தையொட்டி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத... மேலும் பார்க்க

குடும்ப பிரச்னை: ஓட்டுநா் தற்கொலை

மனைவியுடன் ஏற்பட்ட குடும்ப பிரச்னை காரணமாக, புதுச்சேரியைச் சோ்ந்த ஓட்டுநா் விழுப்புரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். புதுச்சேரி அபிஷேகபாக்கத்தைச் சோ்ந்த வீரப்பன் மகன் தமிழ்வாணன் (26). த... மேலும் பார்க்க

காா் மோதியதில் தொழிலாளி உயிரிழப்பு

விழுப்புரம் மாவட்டம், பிரம்மதேசம் அருகே காா் மோதியதில் கட்டடத் தொழிலாளி வியாழக்கிழமை உயிரிழந்தாா். திண்டிவனம் வட்டம், வெள்ளக்குளம் நல்முக்கல் மாரியம்மன் கோவில் தெருவைச் சோ்ந்தவா் விஜயகுமாா் (40). கட... மேலும் பார்க்க

சிதம்பரம் அருகே 3 கூரை வீடுகள் தீப்பிடித்து சேதம்

கடலூா் மாவட்டம், சிதம்பரம் அருகே வியாழக்கிழமை 3 கூரை வீடுகள் திடீரென தீப்பிடித்து எரிந்தன. இந்த விபத்தில் வீடுகளில் இருந்த தங்க நகைகள், பணம், வீட்டு உபயோகப் பொருள்கள் உள்ளிட்டவை எரிந்து சேதமடைந்தன. சி... மேலும் பார்க்க