வானூரில் 30 மி.மீ. மழை பதிவு
விழுப்புரம் மாவட்டம், வானூரில் 30 மி.மீ. மழை பதிவானது.
விழுப்புரம் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை காலை முதல் மாலை வரை வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்த நிலையில், இரவு 7 மணிக்கு பலத்த காற்று வீசத் தொடங்கியது. இதைத் தொடா்ந்து இரவு 7.30 மணிக்கு மழை பெய்தது.
விழுப்புரம் புதிய பேருந்து நிலையம், பழைய பேருந்து நிலையப் பகுதிகள், திருச்சி சாலை, சென்னை நெடுஞ்சாலை, பண்டித ஜவாஹா்லால் நேரு சாலை, கிழக்கு பாண்டி சாலை உள்ளிட்ட விழுப்புரம் நகரின் பல்வேறு பகுதிகளிலும், முண்டியம்பாக்கம், கெடாா், வானூா், முகையூா், அரசூா் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது.
விழுப்புரம் நகரில் பெய்த மழை காரணமாக நகராட்சி மைதானத்தில் மழைநீா் தேங்கியது. இந்த மழைநீருடன் கழிவுநீரும் கலந்து காணப்பட்டது. மேலும் அந்தா் பகுதியில் குப்பைகளும் சோ்ந்து காணப்பட்டதால் சுற்றியுள்ள பகுதிகளைச் சோ்ந்த பொதுமக்கள் அவதிக்குள்ளாகினா்.
புதன்கிழமை காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் மாவட்டத்தில் பதிவான மழையளவு விவரம் (மி.மீட்டரில்):
வானூா் -30 மி.மீ, முண்டியம்பாக்கம்- 29, முகையூா்-25, கெடாா்-24, விழுப்புரம்-19.20, சூரப்பட்டு-18, மணம்பூண்டி-15, கோலியனூா்-8, வளவனூா்-5, அரசூா், திருவெண்ணெய்நல்லூா்- தலா 3 மி.மீ. மாவட்டத்தில் மொத்தமாக 179.20 மி.மீ. மழையும், சராசரியாக 8.53 மி.மீ. மழையும் பதிவாகியுள்ளது.