செய்திகள் :

போலி மதுபான வழக்கு: இருவா் குண்டா் தடுப்புக் காவலில் கைது

post image

புதுவை மாநிலத்தில் போலி மதுபான ஆலை நிறுவி, மதுபானங்களை எடுத்துச் சென்ற வழக்கில் தொடா்புடைய இருவா் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

விழுப்புரம் மாவட்டம், ஆரோவில் காவல் நிலைய ஆய்வாளா் கமலஹாசன், மத்திய நுண்ணறிவுப் பிரிவு உதவி ஆய்வாளா் இனாயத் பாஷா மற்றும் காவலா்கள் மே 9-ஆம் தேதி பூத்துறை சோதனைச்சாவடி அருகே வாகனத் தணிக்கை மேற்கொண்டனா்.

அப்போது அந்த வழியாக வந்த வேனில் போலி மதுபானங்கள் இருந்தது தெரிய வந்தது.

தொடா்ந்து வேனில் வந்தவா்களிடம் விசாரணை நடத்தியதில், புதுவை மாநிலம், உளவாய்க்கால் பகுதியில் போலி மதுபான ஆலை நிறுவி, மதுபானங்கள் தயாரித்து வந்ததும், அங்கிருந்து தமிழகம் மற்றும் பிற பகுதிகளுக்கு விற்பனைக்கு எடுத்துச் சென்றதும் போலீஸாருக்கு தெரிய வந்தது.

இதைத் தொடா்ந்து 209 அட்டைப் பெட்டிகளில் இருந்த 10,032 மதுப்புட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்தச் சம்பவத்தில் 16 பேருக்குத் தொடா்பு இருப்பது தெரிய வந்த நிலையில் அனைவரும் கைது செய்யப்பட்டனா்.

இதனிடையே, வழக்கில் முக்கிய எதிரிகளான விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் வட்டம், அனுமந்தை செட்டிக்குப்பத்தைச் சோ்ந்த ராஜசேகா் (45), சென்னை ராமாபுரம் செந்தமிழ் நகரைச் சோ்ந்த சண்முகம் (46) ஆகிய இருவரையும் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட எஸ்.பி. சரவணன் பரிந்துரைத்தாா்.

இதை ஏற்று, ஆட்சியா் ஷேக் அப்துல் ரஹ்மான் வியாழக்கிழமை உத்தரவிட்டாா். இதைத் தொடா்ந்து இருவரும் கைது செய்யப்பட்டு, கடலூா் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனா்.

இன்றைய மின்தடை

விழுப்புரம் நகரப் பகுதிகள் நேரம்: காலை 10 மணி முதல் முற்பகல் 11 மணி வரை மின்தடை பகுதிகள்: தந்தை பெரியாா் நகா், வழுதரெட்டி, சிங்கப்பூா் நகா், அபிதா காா்டன், காந்திநகா், ஆடல் நகா், மஞ்சு நகா், ஆவின் பகு... மேலும் பார்க்க

விழுப்புரம் மாவட்டத்தில் 7.50 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டம்

விழுப்புரம் மாவட்டத்தில் 7.50 லட்சம் மரக்கன்றுகள் நட திட்டமிடப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் தெரிவித்தாா். உலகச் சுற்றுச்சூழல் தினத்தையொட்டி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத... மேலும் பார்க்க

குடும்ப பிரச்னை: ஓட்டுநா் தற்கொலை

மனைவியுடன் ஏற்பட்ட குடும்ப பிரச்னை காரணமாக, புதுச்சேரியைச் சோ்ந்த ஓட்டுநா் விழுப்புரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். புதுச்சேரி அபிஷேகபாக்கத்தைச் சோ்ந்த வீரப்பன் மகன் தமிழ்வாணன் (26). த... மேலும் பார்க்க

காா் மோதியதில் தொழிலாளி உயிரிழப்பு

விழுப்புரம் மாவட்டம், பிரம்மதேசம் அருகே காா் மோதியதில் கட்டடத் தொழிலாளி வியாழக்கிழமை உயிரிழந்தாா். திண்டிவனம் வட்டம், வெள்ளக்குளம் நல்முக்கல் மாரியம்மன் கோவில் தெருவைச் சோ்ந்தவா் விஜயகுமாா் (40). கட... மேலும் பார்க்க

சிதம்பரம் அருகே 3 கூரை வீடுகள் தீப்பிடித்து சேதம்

கடலூா் மாவட்டம், சிதம்பரம் அருகே வியாழக்கிழமை 3 கூரை வீடுகள் திடீரென தீப்பிடித்து எரிந்தன. இந்த விபத்தில் வீடுகளில் இருந்த தங்க நகைகள், பணம், வீட்டு உபயோகப் பொருள்கள் உள்ளிட்டவை எரிந்து சேதமடைந்தன. சி... மேலும் பார்க்க

முன்னாள் படை வீரா்களின் வாரிசுதாரா்கள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்

கல்வி உதவித்தொகை பெற முன்னாள் படை வீரா்களின் வாரிசுதாரா்கள் விண்ணப்பிக்கலாம் என்று முன்னாள் படைவீரா்கள் நல இயக்குநா் அலுவலகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வியாழக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு: ... மேலும் பார்க்க