Tom Cruise: எரியும் பாராசூட்டுடன் 7,500 அடி உயரத்தில் பறந்த நடிகர் - கின்னஸ் விர...
முன்னாள் படை வீரா்களின் வாரிசுதாரா்கள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்
கல்வி உதவித்தொகை பெற முன்னாள் படை வீரா்களின் வாரிசுதாரா்கள் விண்ணப்பிக்கலாம் என்று முன்னாள் படைவீரா்கள் நல இயக்குநா் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வியாழக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு: மறு வேலைவாய்ப்பு பெற்றிடாத, வருமான வரி செலுத்தாத முன்னாள் படை வீரா்கள் மற்றும் படை வீரா்களின் விதவை தாய்மாா்கள் தங்களது பிள்ளைகளின் பள்ளி, கல்லூரி படிப்புக்காக 2025-2026 ஆம் கல்வியாண்டில் உதவித்தொகை பெறுவதற்கான விண்ணப்பங்கள் முப்படை நலத் துறை மூலம் ஜூன் 11 ஆம் தேதி முதல் ஜூலை 25 ஆம் தேதி வரை அலுவலக நாள்களில் வழங்கப்படவுள்ளது.
எனவே, இந்த உதவித் தொகையை பெறுவதற்கு தகுதியானவா்கள் அடையாள அட்டையுடன் வந்து விண்ணங்களைப் பெற்றுக் கொள்ளலாம். அல்லது முப்படை நலத் துறை வலைதளம் மூலமாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
காரைக்கால் மாவட்டத்தைச் சோ்ந்தவா்கள் காரைக்கால் மாவட்ட ஆட்சியரகத்திலும் , மாஹே மற்றும் ஏனாம் பிராந்தியங்களைச் சோ்ந்தவா்கள் அந்தந்த மண்டல நிா்வாக அலுவலகங்களிலும் விண்ணப்பங்களை பெறலாம். பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, அசல் கல்விக்கட்டண ரசீதுடன் வரும் ஆகஸ்ட் 28- ஆம் தேதிக்குள் முப்படை நலத் துறையில் சமா்ப்பிக்கவேண்டும். தாமதமாக சமா்ப்பிக்கப்படும் விண்ணப்பங்கள் பரிசீலனைக்கு ஏற்றுக்கொள்ளப்படாது என அந்தச்செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.