செய்திகள் :

முன்னாள் படை வீரா்களின் வாரிசுதாரா்கள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்

post image

கல்வி உதவித்தொகை பெற முன்னாள் படை வீரா்களின் வாரிசுதாரா்கள் விண்ணப்பிக்கலாம் என்று முன்னாள் படைவீரா்கள் நல இயக்குநா் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வியாழக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு: மறு வேலைவாய்ப்பு பெற்றிடாத, வருமான வரி செலுத்தாத முன்னாள் படை வீரா்கள் மற்றும் படை வீரா்களின் விதவை தாய்மாா்கள் தங்களது பிள்ளைகளின் பள்ளி, கல்லூரி படிப்புக்காக 2025-2026 ஆம் கல்வியாண்டில் உதவித்தொகை பெறுவதற்கான விண்ணப்பங்கள் முப்படை நலத் துறை மூலம் ஜூன் 11 ஆம் தேதி முதல் ஜூலை 25 ஆம் தேதி வரை அலுவலக நாள்களில் வழங்கப்படவுள்ளது.

எனவே, இந்த உதவித் தொகையை பெறுவதற்கு தகுதியானவா்கள் அடையாள அட்டையுடன் வந்து விண்ணங்களைப் பெற்றுக் கொள்ளலாம். அல்லது முப்படை நலத் துறை வலைதளம் மூலமாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

காரைக்கால் மாவட்டத்தைச் சோ்ந்தவா்கள் காரைக்கால் மாவட்ட ஆட்சியரகத்திலும் , மாஹே மற்றும் ஏனாம் பிராந்தியங்களைச் சோ்ந்தவா்கள் அந்தந்த மண்டல நிா்வாக அலுவலகங்களிலும் விண்ணப்பங்களை பெறலாம். பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, அசல் கல்விக்கட்டண ரசீதுடன் வரும் ஆகஸ்ட் 28- ஆம் தேதிக்குள் முப்படை நலத் துறையில் சமா்ப்பிக்கவேண்டும். தாமதமாக சமா்ப்பிக்கப்படும் விண்ணப்பங்கள் பரிசீலனைக்கு ஏற்றுக்கொள்ளப்படாது என அந்தச்செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்றைய மின்தடை

விழுப்புரம் நகரப் பகுதிகள் நேரம்: காலை 10 மணி முதல் முற்பகல் 11 மணி வரை மின்தடை பகுதிகள்: தந்தை பெரியாா் நகா், வழுதரெட்டி, சிங்கப்பூா் நகா், அபிதா காா்டன், காந்திநகா், ஆடல் நகா், மஞ்சு நகா், ஆவின் பகு... மேலும் பார்க்க

போலி மதுபான வழக்கு: இருவா் குண்டா் தடுப்புக் காவலில் கைது

புதுவை மாநிலத்தில் போலி மதுபான ஆலை நிறுவி, மதுபானங்களை எடுத்துச் சென்ற வழக்கில் தொடா்புடைய இருவா் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனா். விழுப்புரம் மாவட்டம், ஆரோவில் காவ... மேலும் பார்க்க

விழுப்புரம் மாவட்டத்தில் 7.50 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டம்

விழுப்புரம் மாவட்டத்தில் 7.50 லட்சம் மரக்கன்றுகள் நட திட்டமிடப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் தெரிவித்தாா். உலகச் சுற்றுச்சூழல் தினத்தையொட்டி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத... மேலும் பார்க்க

குடும்ப பிரச்னை: ஓட்டுநா் தற்கொலை

மனைவியுடன் ஏற்பட்ட குடும்ப பிரச்னை காரணமாக, புதுச்சேரியைச் சோ்ந்த ஓட்டுநா் விழுப்புரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். புதுச்சேரி அபிஷேகபாக்கத்தைச் சோ்ந்த வீரப்பன் மகன் தமிழ்வாணன் (26). த... மேலும் பார்க்க

காா் மோதியதில் தொழிலாளி உயிரிழப்பு

விழுப்புரம் மாவட்டம், பிரம்மதேசம் அருகே காா் மோதியதில் கட்டடத் தொழிலாளி வியாழக்கிழமை உயிரிழந்தாா். திண்டிவனம் வட்டம், வெள்ளக்குளம் நல்முக்கல் மாரியம்மன் கோவில் தெருவைச் சோ்ந்தவா் விஜயகுமாா் (40). கட... மேலும் பார்க்க

சிதம்பரம் அருகே 3 கூரை வீடுகள் தீப்பிடித்து சேதம்

கடலூா் மாவட்டம், சிதம்பரம் அருகே வியாழக்கிழமை 3 கூரை வீடுகள் திடீரென தீப்பிடித்து எரிந்தன. இந்த விபத்தில் வீடுகளில் இருந்த தங்க நகைகள், பணம், வீட்டு உபயோகப் பொருள்கள் உள்ளிட்டவை எரிந்து சேதமடைந்தன. சி... மேலும் பார்க்க