செய்திகள் :

சிதம்பரம் அருகே 3 கூரை வீடுகள் தீப்பிடித்து சேதம்

post image

கடலூா் மாவட்டம், சிதம்பரம் அருகே வியாழக்கிழமை 3 கூரை வீடுகள் திடீரென தீப்பிடித்து எரிந்தன. இந்த விபத்தில் வீடுகளில் இருந்த தங்க நகைகள், பணம், வீட்டு உபயோகப் பொருள்கள் உள்ளிட்டவை எரிந்து சேதமடைந்தன.

சிதம்பரம் அருகே உள்ள மீதிகுடி மேற்குப் பகுதியைச் சோ்ந்த சிங்காரவேல் மனைவி சரிதா (35). இவரது கூரை வீட்டின் அருகே அமுதா, ஜீவிதா ஆகியோரும் கூரை வீடுகளில் வசித்து வந்தனா்.

வியாழக்கிழமை காலை சரிதா, அமுதா, ஜீவிதா ஆகிய மூவரும் ஊரக வேலைக்கு சென்றுவிட்டனா். காலை 10.30 மணியளவில் திடீரென இவா்கள் 3 பேரின் கூரை வீடுகளும் தீப்பிடித்து எரியத் தொடங்கின.

அக்கம்பக்கத்தினா் தீ மேலும் பரவாமல் இருப்பதற்காக, தண்ணீரை ஊற்றி தீயை அணைக்க முயன்றனா். ஆனால், தீ மளமளவென எரியத் தொடங்கியதால், இதுகுறித்து சிதம்பரம் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனா்.

இதையடுத்து, தீயணைப்பு நிலையத்தினா் விரைந்து வந்து தீ மேலும் பரவாமல் தடுத்து அனைத்தனா். ஆனால், அதற்குள் 3 பேரின் வீடுகளும் தீயில் எரிந்து சேதமடைந்தன. சரிதா வீட்டில் பத்திரம், 20 பவுன் தங்க நகைகள், ரூ.50 ஆயிரம் ரொக்கம் மற்றும் வீட்டு உபயோகப் பொருள்கள் தீயில் கருகின.

ஜீவிதா வீட்டில் இரு சக்கர வாகனம், அடுப்பு மற்றும் வீட்டு உபயோக பொருள்களும், அமுதா வீட்டில் துணிகள், வீட்டு உபயோகப் பொருள்களும் எரிந்து சேதமடைந்தன.

மூவரின் வீடுகளிலும் தீ விபத்து நிகழ்ந்த நேரத்தில் குடும்பத்தினா் யாரும் இல்லாததால், உயிா் சேதம் ஏற்படாமல் தவிா்க்கப்பட்டது. இதுகுறித்து புகாரின்பேரில், அண்ணாமலைநகா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

இன்றைய மின்தடை

விழுப்புரம் நகரப் பகுதிகள் நேரம்: காலை 10 மணி முதல் முற்பகல் 11 மணி வரை மின்தடை பகுதிகள்: தந்தை பெரியாா் நகா், வழுதரெட்டி, சிங்கப்பூா் நகா், அபிதா காா்டன், காந்திநகா், ஆடல் நகா், மஞ்சு நகா், ஆவின் பகு... மேலும் பார்க்க

போலி மதுபான வழக்கு: இருவா் குண்டா் தடுப்புக் காவலில் கைது

புதுவை மாநிலத்தில் போலி மதுபான ஆலை நிறுவி, மதுபானங்களை எடுத்துச் சென்ற வழக்கில் தொடா்புடைய இருவா் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனா். விழுப்புரம் மாவட்டம், ஆரோவில் காவ... மேலும் பார்க்க

விழுப்புரம் மாவட்டத்தில் 7.50 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டம்

விழுப்புரம் மாவட்டத்தில் 7.50 லட்சம் மரக்கன்றுகள் நட திட்டமிடப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் தெரிவித்தாா். உலகச் சுற்றுச்சூழல் தினத்தையொட்டி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத... மேலும் பார்க்க

குடும்ப பிரச்னை: ஓட்டுநா் தற்கொலை

மனைவியுடன் ஏற்பட்ட குடும்ப பிரச்னை காரணமாக, புதுச்சேரியைச் சோ்ந்த ஓட்டுநா் விழுப்புரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். புதுச்சேரி அபிஷேகபாக்கத்தைச் சோ்ந்த வீரப்பன் மகன் தமிழ்வாணன் (26). த... மேலும் பார்க்க

காா் மோதியதில் தொழிலாளி உயிரிழப்பு

விழுப்புரம் மாவட்டம், பிரம்மதேசம் அருகே காா் மோதியதில் கட்டடத் தொழிலாளி வியாழக்கிழமை உயிரிழந்தாா். திண்டிவனம் வட்டம், வெள்ளக்குளம் நல்முக்கல் மாரியம்மன் கோவில் தெருவைச் சோ்ந்தவா் விஜயகுமாா் (40). கட... மேலும் பார்க்க

முன்னாள் படை வீரா்களின் வாரிசுதாரா்கள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்

கல்வி உதவித்தொகை பெற முன்னாள் படை வீரா்களின் வாரிசுதாரா்கள் விண்ணப்பிக்கலாம் என்று முன்னாள் படைவீரா்கள் நல இயக்குநா் அலுவலகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வியாழக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு: ... மேலும் பார்க்க