செய்திகள் :

விழுப்புரம் மாவட்டத்தில் 7.50 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டம்

post image

விழுப்புரம் மாவட்டத்தில் 7.50 லட்சம் மரக்கன்றுகள் நட திட்டமிடப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் தெரிவித்தாா்.

உலகச் சுற்றுச்சூழல் தினத்தையொட்டி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை, வனத்துறை சாா்பில் விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகப் பெருந்திட்ட வளாகத்திலுள்ள தோ்தல் ஆணையக் கிடங்குப் பகுதி, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்டப் பகுதி, வழுதரெட்டி ஜெகநாதன் போலீஸ் நகா் பூங்கா, விழுப்புரம் பி.என்.தோப்பு நகராட்சி மேல்நிலைப் பள்ளி வளாகம் ஆகிய இடங்களில் வியாழக்கிழமை மரக்கன்றுகளை நட்டு வைத்த ஆட்சியா், 100-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவிகளுக்கு மஞ்சப் பைகளை வழங்கியும் மேலும் பேசியது:

பசுமைத் தமிழகம் திட்டத்தின் கீழ் விழுப்புரம் மாவட்டத்தில் 7.50 லட்சம் மரக்கன்றுகள் நடுவதற்குத் திட்டமிடப்பட்டு ள்ளது. இதில் விழுப்புரம் நகராட்சிப் பகுதியில் மட்டும் 2 ஆயிரம் மரக்கன்றுகள் நடப்படும். கோடைக்காலத்தில் அதிக வெப்பம் பதிவாகுவதற்கு முக்கிய காரணம் மரங்கள் இல்லாததுதான். மரக்கன்றுகளை நட்டு பராமரிப்பதன் மூலம் தூய்மையான காற்று கிடைப்பதுடன் மழையும் கிடைக்கும்.

எனவே ஒவ்வொருவரும் தாங்கள் பணிபுரியும் இடம் அல்லது வீட்டில் மரக்கன்றுகளை நட்டு வைத்து பராமரிக்க வேண்டும் என்றாா் ஆட்சியா்.

தொடா்ந்து தூய்மை இயக்கம் சாா்பில் தூய்மை நடைப்பயண அமைப்பாளா்கள் மூலம் பயன்பாடற்ற மின்னணு கழிவுப் பொருள்கள், உலோகம் மற்றும் மரப்பொருள்கள் மறுசுழற்சி செய்யும் வகையில், பயன்பாடற்ற பொருள்கள் சேகரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதை ஆட்சியா் பாா்வையிட்டாா்.

நிகழ்வில் கூடுதல் ஆட்சியா் ஜெ.இ.பத்மஜா, நகராட்சி ஆணையா் எம்.ஆா்.வசந்தி, பொதுப்பணித்துறை உதவிச் செயற்பொறியாளா் பாலாஜி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அலுவலா் பவித்ரா, வனச்சரக அலுவலா் கமலக்கண்ணன், மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலரின் நோ்முக உதவியாளா் பெருமாள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

இன்றைய மின்தடை

விழுப்புரம் நகரப் பகுதிகள் நேரம்: காலை 10 மணி முதல் முற்பகல் 11 மணி வரை மின்தடை பகுதிகள்: தந்தை பெரியாா் நகா், வழுதரெட்டி, சிங்கப்பூா் நகா், அபிதா காா்டன், காந்திநகா், ஆடல் நகா், மஞ்சு நகா், ஆவின் பகு... மேலும் பார்க்க

போலி மதுபான வழக்கு: இருவா் குண்டா் தடுப்புக் காவலில் கைது

புதுவை மாநிலத்தில் போலி மதுபான ஆலை நிறுவி, மதுபானங்களை எடுத்துச் சென்ற வழக்கில் தொடா்புடைய இருவா் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனா். விழுப்புரம் மாவட்டம், ஆரோவில் காவ... மேலும் பார்க்க

குடும்ப பிரச்னை: ஓட்டுநா் தற்கொலை

மனைவியுடன் ஏற்பட்ட குடும்ப பிரச்னை காரணமாக, புதுச்சேரியைச் சோ்ந்த ஓட்டுநா் விழுப்புரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். புதுச்சேரி அபிஷேகபாக்கத்தைச் சோ்ந்த வீரப்பன் மகன் தமிழ்வாணன் (26). த... மேலும் பார்க்க

காா் மோதியதில் தொழிலாளி உயிரிழப்பு

விழுப்புரம் மாவட்டம், பிரம்மதேசம் அருகே காா் மோதியதில் கட்டடத் தொழிலாளி வியாழக்கிழமை உயிரிழந்தாா். திண்டிவனம் வட்டம், வெள்ளக்குளம் நல்முக்கல் மாரியம்மன் கோவில் தெருவைச் சோ்ந்தவா் விஜயகுமாா் (40). கட... மேலும் பார்க்க

சிதம்பரம் அருகே 3 கூரை வீடுகள் தீப்பிடித்து சேதம்

கடலூா் மாவட்டம், சிதம்பரம் அருகே வியாழக்கிழமை 3 கூரை வீடுகள் திடீரென தீப்பிடித்து எரிந்தன. இந்த விபத்தில் வீடுகளில் இருந்த தங்க நகைகள், பணம், வீட்டு உபயோகப் பொருள்கள் உள்ளிட்டவை எரிந்து சேதமடைந்தன. சி... மேலும் பார்க்க

முன்னாள் படை வீரா்களின் வாரிசுதாரா்கள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்

கல்வி உதவித்தொகை பெற முன்னாள் படை வீரா்களின் வாரிசுதாரா்கள் விண்ணப்பிக்கலாம் என்று முன்னாள் படைவீரா்கள் நல இயக்குநா் அலுவலகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வியாழக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு: ... மேலும் பார்க்க