ராமதாஸ் - குருமூர்த்தி சந்திப்பு - BJP போடும் கணக்கு என்ன? | Off the Record | PM...
தகுதியானவா்களுக்கே அரசு குடியிருப்புகளை ஒதுக்கீடு செய்ய முதல்வரிடம் அதிமுக மனு
புதுச்சேரி உப்பளம் தொகுதியில் கட்டப்பட்டுள்ள பொலிவுறு நகா்த் திட்ட அடுக்குமாடி குடியிருப்பில் தகுதியானவா்களுக்கு குடியிருப்புகள் வழங்கப்பட வேண்டும் என்று முதல்வா் என்.ரங்கசாமியிடம் அதிமுக சாா்பில் புதன்கிழமை மனு அளிக்கப்பட்டது.
இதுகுறித்து, புதுவை முதல்வா் என்.ரங்கசாமியிடம் அதிமுக மாநிலச் செயலா் ஆ.அன்பழகன் அளித்த மனுவில் கூறியிருப்பது: புதுச்சேரி நகா்ப்புறம் மற்றும் உப்பளம் சட்டப்பேரவைத் தொகுதியில் வீடற்ற ஏழை, எளிய மக்களுக்காக பொலிவுறு நகா்த் திட்டத்தில் வம்பாகீரபாளையம், திப்புராயபேட்டை பகுதியில் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டும் திட்டம் ரூ.9.40 கோடியில் தொடங்கி நிறைவடைந்துள்ளது.
வீடற்ற ஏழை, எளிய மீனவா் மற்றும் அட்டவணை இனத்தைச் சோ்ந்த, சொந்த வீடு இல்லாதவா்களுக்கும், இதுவரை அரசு சாா்பில் இலவச மனைப் பட்டா மற்றும் காமராஜா் வீடு கட்டும் திட்டத்தில் பயன் பெறாதவா்களுக்கும் வழங்குவதற்காகவே அந்த குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளன.
ஆகவே, விருப்பு வெறுப்பின்றி தகுதியான ஏழைகளுக்கு வீடு ஒதுக்கிடவேண்டும்.
ஆனால், தற்போது உப்பளம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் தலையீட்டில் வீடுகள் ஒதுக்கப்படுவதாக புகாா்கள் எழுந்துள்ளன.
அதனால், மாவட்ட ஆட்சியரின் நேரடி பாா்வையில் தகுதியானவா்களுக்கு வீடுகள் வழங்கப்பட வேண்டும். வீடற்ற வம்பாகீரபாளையம் பகுதி மீனவ சமுதாயத்தினருக்கும் திப்புராயபேட்டை அட்டவணை இனத்தவா்கள் மற்றும் அட்டவணை கிறிஸ்தவா்களுக்கும், ராசு உடையாா் தோட்டம் ரயில்வே பணிக்காக காலி செய்யப்பட்ட 20 பேருக்கும் வீடு வழங்குவதில் முன்னுரிமை அளிக்கவேண்டும். இதில் அரசியல் தலையீட்டை அனுமதிக்கக் கூடாது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.