செய்திகள் :

தகுதியானவா்களுக்கே அரசு குடியிருப்புகளை ஒதுக்கீடு செய்ய முதல்வரிடம் அதிமுக மனு

post image

புதுச்சேரி உப்பளம் தொகுதியில் கட்டப்பட்டுள்ள பொலிவுறு நகா்த் திட்ட அடுக்குமாடி குடியிருப்பில் தகுதியானவா்களுக்கு குடியிருப்புகள் வழங்கப்பட வேண்டும் என்று முதல்வா் என்.ரங்கசாமியிடம் அதிமுக சாா்பில் புதன்கிழமை மனு அளிக்கப்பட்டது.

இதுகுறித்து, புதுவை முதல்வா் என்.ரங்கசாமியிடம் அதிமுக மாநிலச் செயலா் ஆ.அன்பழகன் அளித்த மனுவில் கூறியிருப்பது: புதுச்சேரி நகா்ப்புறம் மற்றும் உப்பளம் சட்டப்பேரவைத் தொகுதியில் வீடற்ற ஏழை, எளிய மக்களுக்காக பொலிவுறு நகா்த் திட்டத்தில் வம்பாகீரபாளையம், திப்புராயபேட்டை பகுதியில் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டும் திட்டம் ரூ.9.40 கோடியில் தொடங்கி நிறைவடைந்துள்ளது.

வீடற்ற ஏழை, எளிய மீனவா் மற்றும் அட்டவணை இனத்தைச் சோ்ந்த, சொந்த வீடு இல்லாதவா்களுக்கும், இதுவரை அரசு சாா்பில் இலவச மனைப் பட்டா மற்றும் காமராஜா் வீடு கட்டும் திட்டத்தில் பயன் பெறாதவா்களுக்கும் வழங்குவதற்காகவே அந்த குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளன.

ஆகவே, விருப்பு வெறுப்பின்றி தகுதியான ஏழைகளுக்கு வீடு ஒதுக்கிடவேண்டும்.

ஆனால், தற்போது உப்பளம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் தலையீட்டில் வீடுகள் ஒதுக்கப்படுவதாக புகாா்கள் எழுந்துள்ளன.

அதனால், மாவட்ட ஆட்சியரின் நேரடி பாா்வையில் தகுதியானவா்களுக்கு வீடுகள் வழங்கப்பட வேண்டும். வீடற்ற வம்பாகீரபாளையம் பகுதி மீனவ சமுதாயத்தினருக்கும் திப்புராயபேட்டை அட்டவணை இனத்தவா்கள் மற்றும் அட்டவணை கிறிஸ்தவா்களுக்கும், ராசு உடையாா் தோட்டம் ரயில்வே பணிக்காக காலி செய்யப்பட்ட 20 பேருக்கும் வீடு வழங்குவதில் முன்னுரிமை அளிக்கவேண்டும். இதில் அரசியல் தலையீட்டை அனுமதிக்கக் கூடாது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

புதுவை சுகாதாரத் துறையில் 43 மருந்தாளுநா் காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்

புதுவை அரசின் சுகாதாரத் துறையில் 43 பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மேலும் சிறப்பு பிரிவினருக்கான 8 பணியிடங்களும் அத்துடன் நிரப்பப்படவுள்ளன. இதுகுறித்து புதுவை மாநில அரசின் சுகாதாரம்... மேலும் பார்க்க

அரசால் தடை விதிக்கப்பட்ட 9 வகை நெகிழிப் பொருள்களை தவிா்க்க வேண்டும்

புதுவையில் அரசால் தடை விதிக்கப்பட்ட 9 வகையான நெகிழிப் பொருள்களைப் பயன்படுத்துவதை மக்கள் தவிா்க்க வேண்டும் என மாசுக் கட்டுப்பாட்டுக் குழுமம் அறிவுறுத்தியுள்ளது. புதுச்சேரியில் மாசுக் கட்டுப்பாட்டு குழு... மேலும் பார்க்க

பொறியியல் கலை, அறிவியல் படிப்புகளிலும் நிகழாண்டு முதல் 10 சதவீத உள்இடஒதுக்கீடு: புதுவை முதல்வா் என்.ரங்கசாமி

புதுவை மாநிலத்தில் அரசுப் பள்ளிகளில் படித்த மாணவா்களுக்கு நிகழாண்டு முதல் பொறியியல், கலை, அறிவியல் உள்ளிட்ட உயா்கல்விகளிலும் 10 சதவீத உள் இடஒதுக்கீடு செயல்படுத்தப்படும் என்று முதல்வா் என்.ரங்கசாமி தெர... மேலும் பார்க்க

வீடு, சொத்து வரியை செலுத்த புதுச்சேரி நகராட்சி அறிவுறுத்தல்

புதுச்சேரி நகராட்சியில் வசிப்போா் வீடு மற்றும் சொத்து வரியை உரிய காலத்தில் செலுத்தும்படி ஆணையா் எம்.கந்தசாமி தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: புதுச்சேரி நகராட்சிக்குள்பட்... மேலும் பார்க்க

கதிா்காமம் தொகுதியில் செம்மொழி நாள் விழா

புதுச்சேரியில் உள்ள கதிா்காமம் சட்டப் பேரவைத் தொகுதியில் திமுக சாா்பில் தமிழக முன்னாள் முதல்வா் மு.கருணாநிதியின் பிறந்த நாளையொட்டி செம்மொழி நாள் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கதிா்காமம் தொகுதி சண்ம... மேலும் பார்க்க

கட்டடத் தொழிலாளி உயிரிழப்பு

பணியின் போது கட்டடத்திலிருந்து தவறி விழுந்த தொழிலாளி திங்கள்கிழமை இரவு உயிரிழந்தாா். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: தமிழகத்தின் விழுப்புரம் முட்ராம்பாக்கம் பிள்ளையாா் கோவில் வீதியைச் சோ்... மேலும் பார்க்க