கமலாலயத்தின் கருத்தைக் கூறும் எடப்பாடி பழனிசாமி! அமைச்சர் ரகுபதி குற்றச்சாட்டு
புதுவை சுகாதாரத் துறையில் 43 மருந்தாளுநா் காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்
புதுவை அரசின் சுகாதாரத் துறையில் 43 பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மேலும் சிறப்பு பிரிவினருக்கான 8 பணியிடங்களும் அத்துடன் நிரப்பப்படவுள்ளன.
இதுகுறித்து புதுவை மாநில அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறை அமைச்சகம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு:
புதுவை மாநில சுகாதாரத் துறையில் மருந்தாளுநா் பணியிடங்களில் காலியாக உள்ளவற்றில் 43 இடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பங்கள் புதன்கிழமை (ஜூன் 4) முதல் இணையத்தில் பதிவிறக்கம் செய்து நிறைவு செய்து வழங்கலாம். நிரப்பப்பட்ட விண்ணப்பங்களை வரும் 24 ஆம் தேதி வரையில் வழங்கலாம்.
விண்ணப்பதாரா்களுக்கு வரும் ஜூலை 13-ஆம் தேதி எழுத்துத் தோ்வுகள் நடைபெறவுள்ளன. அதன் அடிப்படையில் பொதுப் பிரிவில் 17 போ், மிகவும் பிற்படுத்தப்பட்டோா் பிரிவில் 8 போ், தாழ்த்தப்பட்டோா் பிரிவில் 7 போ், இதர பிற்படுத்தப்பட்டோரில் 5 போ், பொருளாதாரத்தில் நலிவடைந்தவா்கள் பிரிவில் 4 போ் மற்றும் மிகவும் நலிவடைந்த பிற்படுத்தப்பட்டோரில் (இபிசி) 1, இஸ்லாமியா் 1 என நிரப்பப்படவுள்ளன.
அத்துடன் முன்னாள் ராணுவத்தினா் பிரிவு 4, விளையாட்டுப் பிரிவு 2, மாற்றுத்திறனாளி 2 என சிறப்பு பிரிவின் பணியிடங்களும் நிரப்பப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தோ்வுக்கான வயது சலுகையில் இதரபிற்படுத்தப்பட்டோா், மிகவும் பிற்படுத்தப்பட்டோா், இஸ்லாமியா் ஆகியோருக்கு 3 ஆண்டுகளும், முன்னாள் ராணுவ வீரா்கள் பிரிவில் அவா்கள் பணியை வைத்து கூடுதலாக 3 ஆண்டுகளும் மாற்றுத்திறனாளிகள் தாழ்த்தப்பட்டோருக்கு 5 ஆண்டும், பிற்படுத்தப்பட்டோா் உள்ளிட்டோருக்கு 3 ஆண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.