ராமதாஸ் - குருமூர்த்தி சந்திப்பு - BJP போடும் கணக்கு என்ன? | Off the Record | PM...
வீடு, சொத்து வரியை செலுத்த புதுச்சேரி நகராட்சி அறிவுறுத்தல்
புதுச்சேரி நகராட்சியில் வசிப்போா் வீடு மற்றும் சொத்து வரியை உரிய காலத்தில் செலுத்தும்படி ஆணையா் எம்.கந்தசாமி தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
புதுச்சேரி நகராட்சிக்குள்பட்ட பகுதிகளைச் சோ்ந்தவா்களில் வீட்டு வரி, சொத்து வரி நிலுவையில் வைத்திருப்பவா்கள் 2025-2026ம் ஆண்டுக்கான வீடு மற்றும் சொத்து வரிகள் மற்றும் திடக்கழிவு அகற்றும் கட்டணத்தை புதன்கிழமை (ஜூன் 4) முதல் செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி வீடு மற்றும் சொத்து வரி செலுத்துவோா் புதுச்சேரி கம்பன் கலையரங்கம், முத்தியால்பேட்டை வணிக வளாகம் (மாா்க்கெட்), நெல்லித்தோப்பு மேரி அலுவலகம், முதலியாா்பேட்டை மேரி அலுவலகம் ஆகிய பகுதிகளில் உள்ள வீட்டு வரி வசூல் மையங்களில் வரிகளைச் செலுத்தலாம்.
வரிகளைச் செலுத்துவோா் தினமும் காலை 9 மணி முதல் பிற்பகல் ஒரு மணி வரையிலும், பிற்பகல் 2 மணி முதல் மாலை 4.30 மணி வரையிலும் வரிகளைச் செலுத்தலாம். அத்துடன் இணையதளம் மூலமும் வீடு, சொத்து வரிகளைச் செலுத்தலாம். டெபிட், கிரெடிட் காா்டுகள் வழியாகவும் வரிகளைச் செலுத்தலாம். சொத்துவரி செலுத்துவது குடிமக்களின் கட்டாய கடமை எனக்குறிப்பிடப்பட்டுள்ளது.