ராமதாஸ் - குருமூர்த்தி சந்திப்பு - BJP போடும் கணக்கு என்ன? | Off the Record | PM...
வேலூா் மாங்காய் மண்டியில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு
மாம்பழ சீசன் தொடங்கியுள்ள நிலையில் வேலூா் மாங்காய் மண்டியில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.
தமிழகத்தில் மாம்பழம் சீசன் தொடங்கியதையடுத்து வேலூா் மாவட்டத்தில் மாம்பழ விற்பனை அதிகரித்துள்ளது. வேலூா் மாங்காய் மண்டியில் தினமும் ஏராளமான பொதுமக்கள், வியாபாரிகள் தங்களுக்கு தேவையான மாம்பழங்களை சில்லறையாகவும், மொத்தமாகவும் வாங்கி செல்கின்றனா்.
வேலூா் மாங்காய் மண்டிக்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், சேலம், தா்மபுரி, ஆந்திரம், கிருஷ்ணகிரி ஆகிய பகுதிகளில் இருந்து மாம்பழங்கள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகின்றன. அவ்வாறு வரும் மாம்பழங்கள் தரமான முறையில் விற்பனை செய்யப்படுகிா என ஆய்வு செய்ய ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி உத்தரவிட்டாா்.
அதன்படி, உணவு பாதுகாப்பு அலுவலா் ராஜேஷ் குமாா் தலைமையிலான குழுவினா் வேலூா் மாங்காய் மண்டியில் சோதனை நடத்தினா். அப்போது, மாம்பழத்தின் தரம், எடை குறித்து ஆய்வு செய்தனா். தொடா்ந்து அழுகிய நிலையில் இருந்த பழங்களை பினாயில் ஊற்றி அழித்தனா்.