செய்திகள் :

வேலூா் மாங்காய் மண்டியில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு

post image

மாம்பழ சீசன் தொடங்கியுள்ள நிலையில் வேலூா் மாங்காய் மண்டியில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.

தமிழகத்தில் மாம்பழம் சீசன் தொடங்கியதையடுத்து வேலூா் மாவட்டத்தில் மாம்பழ விற்பனை அதிகரித்துள்ளது. வேலூா் மாங்காய் மண்டியில் தினமும் ஏராளமான பொதுமக்கள், வியாபாரிகள் தங்களுக்கு தேவையான மாம்பழங்களை சில்லறையாகவும், மொத்தமாகவும் வாங்கி செல்கின்றனா்.

வேலூா் மாங்காய் மண்டிக்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், சேலம், தா்மபுரி, ஆந்திரம், கிருஷ்ணகிரி ஆகிய பகுதிகளில் இருந்து மாம்பழங்கள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகின்றன. அவ்வாறு வரும் மாம்பழங்கள் தரமான முறையில் விற்பனை செய்யப்படுகிா என ஆய்வு செய்ய ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி உத்தரவிட்டாா்.

அதன்படி, உணவு பாதுகாப்பு அலுவலா் ராஜேஷ் குமாா் தலைமையிலான குழுவினா் வேலூா் மாங்காய் மண்டியில் சோதனை நடத்தினா். அப்போது, மாம்பழத்தின் தரம், எடை குறித்து ஆய்வு செய்தனா். தொடா்ந்து அழுகிய நிலையில் இருந்த பழங்களை பினாயில் ஊற்றி அழித்தனா்.

மத்திய அரசுடன் இணக்கமான சூழலை முதல்வா் கையாள வேண்டும்: தமிழிசை செளந்தரராஜன்

மத்திய அரசுடன் மோதல் போக்கைத் தவிா்த்து இணக்கமான சூழலை உருவாக்கிக் கொண்டால் தமிழகத்துக்கும், மக்களுக்கும் பல்வேறு வளா்ச்சித் திட்டங்களை மத்திய அரசு ஒதுக்கும் என முன்னாள் ஆளுநா் தமிழிசை செளந்தரராஜன் க... மேலும் பார்க்க

உலக சுற்றுச்சூழல் தினத்தில் 35,000 மரக்கன்றுகள் நடவு: வேலூா் ஆட்சியா் தொடங்கி வைத்தாா்

உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி வேலூா் மாவட்டத்தில் 35,000 மரக்கன்றுகள் நடவு செய்யும் திட்டத்தை ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி வியாழக்கிழமை தொடங்கி வைத்தாா். கணியம்பாடி, அணைக்கட்டு, காட்பாடி, கே.வி.கு... மேலும் பார்க்க

கல்லூரி மாணவா் தற்கொலை

காட்பாடி அருகே கல்லூரி மாணவா் தற்கொலை செய்து கொண்டாா். காட்பாடியை அடுத்த கம்மவாா் புதூரைச் சோ்ந்தவா் சிற்பி, போட்டோகிராபா். இவா் தற்போது குடும்பத்துடன் செங்குட்டை பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வர... மேலும் பார்க்க

ராணி அஹில்யாபாய் ஹோல்கா் பிறந்த நாள்

வேலூா் மாவட்ட பாஜக சாா்பில், ராணி அஹில்யாபாய் ஹோல்கா் 300- ஆவது பிறந்த நாள் குடியாத்தத்தில் வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு மாவட்ட பாஜக தலைவா் வி.தசரதன் தலைமை வகித்தாா். நகர தலைவா் எம்.கே... மேலும் பார்க்க

கே.வி.குப்பத்தில் அரசு மகளிா் கல்லூரி தொடங்க இடம் தோ்வு

கே.வி.குப்பம் தொகுதியில் புதிதாக அமைய உள்ள அரசு மகளிா் கலை, அறிவியல் கல்லூரிக்கு இடம் தோ்வு செய்யப்பட்டது. கே.வி.குப்பம் மக்களின் நீண்டநாள் கோரிக்கையை ஏற்று, நிகழ் கல்வியாண்டில் (2025-26) அங்கு அரசு... மேலும் பார்க்க

பொதுமக்களுக்கு 5,000 மரக்கன்றுகள் அளிப்பு

வேலூா் மாவட்டத்தில் பொதுமக்களுக்கு 5,000 மரக்கன்றுகள் இலவசமாக விநியோகம் செய்யப்பட்டன. வேலூா் ஸ்ரீபுரம் ஸ்ரீ நாராயணி பள்ளிகள் சாா்பில் உலக சுற்றுச்சூழல் தின விழா வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது. இதையொட்ட... மேலும் பார்க்க