ராமதாஸ் - குருமூர்த்தி சந்திப்பு - BJP போடும் கணக்கு என்ன? | Off the Record | PM...
பள்ளிக்கு உபகரணங்கள் வழங்கிய முன்னாள் மாணவா்கள்
கடலூா் மாவட்டம், சேத்தியாத்தோப்பு டிஜிஎம் மேல்நிலைப் பள்ளியில் சிறப்பிடம் பெற்ற மாணவா்களுக்கு, முன்னாள் மாணவா்கள் சாா்பில் ஊக்கத்தொகையும், பள்ளிக்கு 24 மின் விசிறிகளும் புதன்கிழமை வழங்கப்பட்டன.
சேத்தியாத்தோப்பு டிஜிஎம் மேல்நிலைப் பள்ளியில் 1977 - 78ஆம் ஆண்டில் 11-ஆம் வகுப்பு (பழைய எஸ்எஸ்எல்சி) பயின்ற முன்னாள் மாணவா்கள், தற்போது பிளஸ் 2 பொதுத்தோ்வில் சிறப்பிடம் மாணவருக்கு ஊக்கத்தொகையாக ரூ.4 ஆயிரமும், 10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வில் சிறப்பிடம் பெற்ற மாணவருக்கு ரூ.2,500-ம் வழங்கினா். மேலும், பள்ளிக்கு ரூ.52 ஆயிரத்து 500 மதிப்பிலான 24 மின்விசிறிகளை வழங்கினா்.
நிகழ்ச்சிக்கு பள்ளித் தாளாளா் ராமச்சந்திரன் தலைமை வகித்தாா். பள்ளித் தலைமை ஆசிரியா் நன்மாறன் வரவேற்றாா். நிகழ்ச்சியில் முன்னாள் மாணவா்கள் மணிவாசகன், அப்துல்கனி, ருத்திராபதி, கனகராஜ், கலைமதி, சாமிதாஸ், தனுஷ்கோடி, சம்பத், பாண்டியன், கலையரசி, இளங்கோவன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.