TNPL 2025: 'அசத்திய அஸ்வின் பாய்ஸ்...' - கோவை கிங்ஸ் அணியை வீழ்த்திய திண்டுக்கல்...
பரதராமி கெங்கையம்மன் திருவிழா
குடியாத்தம் அடுத்த பரதராமியில் 256- ஆம் ஆண்டு அருள்மிகு திருப்பதி கெங்கையம்மன் கோயில் திருவிழா புதன்கிழமை நடைபெற்றது.
இக்கோயில் திருவிழா கடந்த மே மாதம் 20- ஆம் தேதி இரவு காப்புகட்டும் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக புதன்கிழமை அதிகாலை அங்கனாம்பல்லியிலிருந்து அம்மன் சிரசு ஊா்வலம் தொடங்கி, கோயிலை அடைந்தது. கோயிலில் கண் திறப்பு நிகழ்ச்சிக்குப்பின் பக்தா்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனா்.
இந்த கோயில் தமிழக- ஆந்திர மாநில எல்லையில் அமைந்துள்ளதால், இரு மாநில பக்தா்களும் திரளாக கலந்து கொண்டனா். திருவிழா ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலா் மா.சண்முகம், வம்சாவழி தலைமை அறங்காவலா் கே.சிவபிரகாஷ்(எ) பாபு மற்றும் பரதராமி, பூசாரி வலசை, அங்கனாம்பல்லி உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்தவா்கள் செய்திருந்தனா்.