செய்திகள் :

சேலம்: ஆட்சியர் அலுவலகத்தில் நுழைந்து அச்சுறுத்தும் குரங்குகள்... அரசு ஊழியர்கள் அதிர்ச்சி!

post image

சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் கல்வித்துறை, புள்ளியல் துறை, சமூக நலத்துறை, பத்திரபதிவுத்துறை, ஆவண காப்பகத்துறை, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம், தேர்தல் பிரிவு, வருவாய் பிரிவு என பல்வேறு துறைகள் செயல்பட்டு வருகிறது. இங்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். பத்திரப்பதிவு, ஆதார் திருத்தம், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம், இசேவை மையம் உள்ளிட்ட பல்வேறு வேலைகளுக்காக பொதுமக்கள் தினசரி வந்து செல்கின்றனர்.

இந்த நிலையில், நாள்தோறும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு உணவு தேடி குரங்குகள் வருகின்றன. உணவு தேடி வரும் குரங்குகள் பல்வேறு துறை அலுவலகத்தில் நுழைந்து அங்குள்ள அலுவலர்கள் உணவுகள் மற்றும் கைப்பைகளை எடுத்து சென்று பையில் உள்ள அனைத்தையும் வெளியே தூக்கி எரிகிறது. மேலும், அங்கு இருக்கக்கூடிய பதிவேடுகளை கிழிப்பது, அரசு ஊழியர்களை அச்சமூட்டுவது உள்ளிட்ட செயல்களில் குரங்குகள் ஈடுபடுகின்றன. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள குப்பை தொட்டிகளில் உள்ள உணவுகளை எடுக்க முயல்வது என பல்வேறு சேட்டைகளில் குரங்குகள் ஈடுபட்டு வருகின்றன.

இதனால், சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பணியாற்றும் அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். குரங்குகளை ஊழியர்கள் விரட்டினால் தங்களை கடிக்க வருவதாகவும் ஊழியர்கள் தெரிவிக்கின்றனர். வனத்துறை அதிகாரிகள் உடனடியாக பணி நேரத்தில் இடையூறாக இருக்கும் குரங்குகளை பிடித்து வனப்பகுதியில் விட அரசு அலுவலர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

Chenab Bridge: ஈஃபிள் டவரை விட உயரம்; 359 அடி உயரத்தில்... காஷ்மீரில் இன்று திறப்பு -| Top Facts

பஹல்காம் தீவிரவாதத் தாக்குதலுக்கு பிறகு, இன்று பிரதமர் மோடி ஜம்மு & காஷ்மீர் செல்கிறார். எதற்காக? ஜம்மு & காஷ்மீரில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள உலகின் மிக உயரமான ரயில் வளைவு பாலம் 'செனாப் பாலம்'... மேலும் பார்க்க

ஜூன் 6 பொது விடுமுறையா? பரவும் பொய் தகவல்கள்; உண்மையில் பக்ரீத் விடுமுறை எப்போது?

வெள்ளிக் கிழமை, ஜூன் 6 அரசு விடுமுறையா? இணையத்தில் பலர் நாளை விடுமுறை என்றும், நாடுமுழுவதும் அரசு நிறுவனங்கள், வங்கிகள் மற்றும் பள்ளிகள் கூட மூடப்படும் என்றும் பகிர்ந்துள்ளனர். இந்த பதிவுகளால் பலரும் ... மேலும் பார்க்க

குலசேகரன்பட்டினம் ராக்கெட் ஏவுதளம்; கட்டுமானப் பணிகள் தீவிரம்!

இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோவுக்கு ஆந்திரா மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள ’சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மைய’த்தில் மட்டுமே ராக்கெட் ஏவுதளம் அமைந்துள்ளது. அங்குதான் இந்தியாவின் செயற்கைக்கோள்கள்... மேலும் பார்க்க

RCB: "கொண்டாட்டங்களை ஞாயிறுக்கு தள்ளி வையுங்கள்" - எச்சரித்த காவல்துறை; அணி நிர்வாகம் சொன்ன காரணம்?

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, 18 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் ஐபிஎல் கோப்பை வென்றதை, ரசிகர்களுடன் இணைந்து கொண்டாட விரும்பிய முயற்சி பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. சின்னசாமி மைதானத்துக்கு வெளியி... மேலும் பார்க்க

Tatkal: இனி தட்கல் டிக்கெட் எளிதாக கிடைக்கும்; IRCTC-ல் ஆதார் இணைப்பு வருகிறது!

ரயில் டிக்கெட் புக்கிங் நடைமுறைகளை கொஞ்சம் கொஞ்சமாக கடுமையாக்கி வருகிறது ரயில்வே துறை.கடந்த சில நாள்களாகவே, தட்கல் டிக்கெட்டையொட்டி, ஏஜென்டுகளின் கையில் தான் தட்கல் டிக்கெட் புக்கிங் உள்ளது… மக்களால் ... மேலும் பார்க்க

`2027-ல் நடக்கும் மக்கள்தொகை கணக்கெடுப்பு' தரவுகள் எப்படி எடுக்கப்படும்?

இந்தியாவில் பத்து ஆண்டுகளுக்கு ஒருமுறை மக்கள்தொகை கணக்கெடுப்பு எடுப்பது வழக்கம். கடைசியாக, 2011-ம் ஆண்டு எடுக்கப்பட்டது. அடுத்ததாக கணக்கெடுப்பு எடுக்கப்பட வேண்டிய 2021-ம் ஆண்டு கொரோனா பேரிடர் காலத்தின... மேலும் பார்க்க