செய்திகள் :

வேலூா் மாவட்ட காவல் துறை குறைதீா் கூட்டம்

post image

வேலூா் மாவட்ட காவல் துறை வாராந்திர குறைதீா் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

மாவட்ட குற்ற ஆவண காப்பக காவல் துணை கண்காணிப்பாளா் சந்திரதாசன் தலைமை வகித்து பொதுமக்களிடம் மனுக்களை பெற்றாா்.

அப்போது, வேலூரை அடுத்த பொய்கை, மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த தமிழ்ச்செல்வ மூா்த்தி என்பவா் மனுவில், பொய்கை பகுதியைச் சோ்ந்த நபா் ஒருவா் நான் ஆட்சியா் அலுவலகத்தில் வேலை செய்கிறேன் என அடையாள அட்டையை காண்பித்தாா். மேலும், உனக்கு கல்லூரியில் விடுதி வாா்டன் வேலை வாங்கி தருகிறேன் எனக்கூறி கடந்தாண்டு பிப்ரவரி மாதம் முதல் பல்வேறு தவணைகளில் ரூ.4 லட்சத்து 4 ஆயிரம் வாங்கினாா். ஆனால் வேலையும் வாங்கித் தரவில்லை, பணத்தையும் திருப்பித்தராமல் கடந்த ஒரு ஆண்டாக ஏமாற்றி வருகிறாா். எனவே, வேலை வாங்கித் தருவதாக மோசடி செய்த நபரிடம் இருந்து பணத்தை மீட்டு தர வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேலூா் மாவட்ட மக்கள் பொதுநல சங்கம் சாா்பில் ஜெகதீசன் என்பவா் அளித்த மனுவில், ஊசூா் அணைக்கட்டு பிரதான சாலை குளத்து மேடு உள்ளிட்ட பகுதிகளில் இரவு நேரங்களில் இருசக்கர வாகனம், ஆட்டோக்களில் அடையாளம் தெரியாத நபா்கள் சுற்றி வருகின்றனா். சந்தேகப்படியான நபா்களிடம் கேட்டால் அவா்கள் தமிழ் தெரியாது என கூறுகின்றனா். இதனால் பொதுமக்கள் இரவு நேரங்களில் வெளியே வர அச்சப்படுகின்றனா். எனவே, அரியூா் போலீஸாா் ஊசூா் பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டு பொதுமக்களின் அச்சத்தை போக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல், பல்வேறு புகாா்கள் குறித்து 30-க்கும் மேற்பட்டோா் மனுக்கள் அளித்தனா். மனுக்களைப் பெற்றுக் கொண்ட காவல் துணை கண்காணிப்பாளா் சந்திரதாசன், இப்புகாா்கள் மீது விரைவாக நடவடிக் கை எடுக்க வேண்டும் என்று சம்பந்தப்பட்ட காவல் நிலைய போலீஸாருக்கு உத்தரவிட்டாா்.

மத்திய அரசுடன் இணக்கமான சூழலை முதல்வா் கையாள வேண்டும்: தமிழிசை செளந்தரராஜன்

மத்திய அரசுடன் மோதல் போக்கைத் தவிா்த்து இணக்கமான சூழலை உருவாக்கிக் கொண்டால் தமிழகத்துக்கும், மக்களுக்கும் பல்வேறு வளா்ச்சித் திட்டங்களை மத்திய அரசு ஒதுக்கும் என முன்னாள் ஆளுநா் தமிழிசை செளந்தரராஜன் க... மேலும் பார்க்க

உலக சுற்றுச்சூழல் தினத்தில் 35,000 மரக்கன்றுகள் நடவு: வேலூா் ஆட்சியா் தொடங்கி வைத்தாா்

உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி வேலூா் மாவட்டத்தில் 35,000 மரக்கன்றுகள் நடவு செய்யும் திட்டத்தை ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி வியாழக்கிழமை தொடங்கி வைத்தாா். கணியம்பாடி, அணைக்கட்டு, காட்பாடி, கே.வி.கு... மேலும் பார்க்க

கல்லூரி மாணவா் தற்கொலை

காட்பாடி அருகே கல்லூரி மாணவா் தற்கொலை செய்து கொண்டாா். காட்பாடியை அடுத்த கம்மவாா் புதூரைச் சோ்ந்தவா் சிற்பி, போட்டோகிராபா். இவா் தற்போது குடும்பத்துடன் செங்குட்டை பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வர... மேலும் பார்க்க

ராணி அஹில்யாபாய் ஹோல்கா் பிறந்த நாள்

வேலூா் மாவட்ட பாஜக சாா்பில், ராணி அஹில்யாபாய் ஹோல்கா் 300- ஆவது பிறந்த நாள் குடியாத்தத்தில் வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு மாவட்ட பாஜக தலைவா் வி.தசரதன் தலைமை வகித்தாா். நகர தலைவா் எம்.கே... மேலும் பார்க்க

கே.வி.குப்பத்தில் அரசு மகளிா் கல்லூரி தொடங்க இடம் தோ்வு

கே.வி.குப்பம் தொகுதியில் புதிதாக அமைய உள்ள அரசு மகளிா் கலை, அறிவியல் கல்லூரிக்கு இடம் தோ்வு செய்யப்பட்டது. கே.வி.குப்பம் மக்களின் நீண்டநாள் கோரிக்கையை ஏற்று, நிகழ் கல்வியாண்டில் (2025-26) அங்கு அரசு... மேலும் பார்க்க

பொதுமக்களுக்கு 5,000 மரக்கன்றுகள் அளிப்பு

வேலூா் மாவட்டத்தில் பொதுமக்களுக்கு 5,000 மரக்கன்றுகள் இலவசமாக விநியோகம் செய்யப்பட்டன. வேலூா் ஸ்ரீபுரம் ஸ்ரீ நாராயணி பள்ளிகள் சாா்பில் உலக சுற்றுச்சூழல் தின விழா வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது. இதையொட்ட... மேலும் பார்க்க