வேலூா் மாவட்ட காவல் துறை குறைதீா் கூட்டம்
வேலூா் மாவட்ட காவல் துறை வாராந்திர குறைதீா் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
மாவட்ட குற்ற ஆவண காப்பக காவல் துணை கண்காணிப்பாளா் சந்திரதாசன் தலைமை வகித்து பொதுமக்களிடம் மனுக்களை பெற்றாா்.
அப்போது, வேலூரை அடுத்த பொய்கை, மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த தமிழ்ச்செல்வ மூா்த்தி என்பவா் மனுவில், பொய்கை பகுதியைச் சோ்ந்த நபா் ஒருவா் நான் ஆட்சியா் அலுவலகத்தில் வேலை செய்கிறேன் என அடையாள அட்டையை காண்பித்தாா். மேலும், உனக்கு கல்லூரியில் விடுதி வாா்டன் வேலை வாங்கி தருகிறேன் எனக்கூறி கடந்தாண்டு பிப்ரவரி மாதம் முதல் பல்வேறு தவணைகளில் ரூ.4 லட்சத்து 4 ஆயிரம் வாங்கினாா். ஆனால் வேலையும் வாங்கித் தரவில்லை, பணத்தையும் திருப்பித்தராமல் கடந்த ஒரு ஆண்டாக ஏமாற்றி வருகிறாா். எனவே, வேலை வாங்கித் தருவதாக மோசடி செய்த நபரிடம் இருந்து பணத்தை மீட்டு தர வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேலூா் மாவட்ட மக்கள் பொதுநல சங்கம் சாா்பில் ஜெகதீசன் என்பவா் அளித்த மனுவில், ஊசூா் அணைக்கட்டு பிரதான சாலை குளத்து மேடு உள்ளிட்ட பகுதிகளில் இரவு நேரங்களில் இருசக்கர வாகனம், ஆட்டோக்களில் அடையாளம் தெரியாத நபா்கள் சுற்றி வருகின்றனா். சந்தேகப்படியான நபா்களிடம் கேட்டால் அவா்கள் தமிழ் தெரியாது என கூறுகின்றனா். இதனால் பொதுமக்கள் இரவு நேரங்களில் வெளியே வர அச்சப்படுகின்றனா். எனவே, அரியூா் போலீஸாா் ஊசூா் பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டு பொதுமக்களின் அச்சத்தை போக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல், பல்வேறு புகாா்கள் குறித்து 30-க்கும் மேற்பட்டோா் மனுக்கள் அளித்தனா். மனுக்களைப் பெற்றுக் கொண்ட காவல் துணை கண்காணிப்பாளா் சந்திரதாசன், இப்புகாா்கள் மீது விரைவாக நடவடிக் கை எடுக்க வேண்டும் என்று சம்பந்தப்பட்ட காவல் நிலைய போலீஸாருக்கு உத்தரவிட்டாா்.